Skip to main content

சுடு... சுடு... தூத்துக்குடியில 13 பேரு... இங்க 100 பேர் சாகத் தயார்: கதறும் விவசாயி

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
Farmer



சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இவர் எம்.காம். பட்டதாரியும் கூட.
 

நக்கீரன் இணையதளத்திடம் அவர் பேசும்போது, 

 

மோடி திட்டம் என்று சொல்லி 8 வழிச் சாலையை போடுகிறீர்களே, நாங்கள் எங்கயையா போவோம். தட்ட எடுக்கட்டுமாய்யா. 8 வழிச் சாலை, பசுமை சாலை என்று சொல்லி இந்த பசுமையை அழித்துவிட்டா போடுவீங்க பசுமை ரோடு. நாங்க அண்ணன், தம்பி 3 பேரு. இனி எதை வச்சி பிழைப்ப நடத்துவோம். 4 ஏக்கர்தான் இருக்கிறது. அந்த 4 ஏக்கரையும் நீங்க எடுத்துகிட்டா, நாங்க எதை வாழ்வாதாரமா நம்பி இருக்கிறது. எங்க பொண்டாட்டி, புள்ளைங்கள எப்படிய்யா காப்பாத்துவோம்.
 


இதையெல்லாம் அரசாங்கத்துக்கிட்ட கேட்க முடியலய்யா. ஆட்டக் கடிச்சி, மாட்டக் கடிச்சி, கடைசியா மனிசனை கடிக்கிற கதையா.. இந்த எடப்பாடி பழனிசாமி சொந்த ஊருக்கு ஆப்பு வைச்சிட்டு போறாரு... 
 

தமிழ்நாடு வறட்சியா போயிடும்போலிருக்கு, சுடுகாடா போயிருமே... நான் ஒரு எம்.காம். பட்டதாரி, விவசாயத்தை நம்பி வந்தேன். எத்தனையோ யூடியூப்பில் பார்த்திருக்கிறோம். ரசாயனத்தை கலந்து பயிர் பன்றாங்க. நாங்க இயற்கை விவசாயம் பண்ணலாமுன்னு பட்டதாரியா வந்தேன். இந்த விவசாயத்துக்கே ஆப்பு வைக்கிறீங்களே...

 

ஆடு, மாடு, கோழி வளர்க்க சொல்றீங்க.  மானியம் தரேன், அது தரேன், இது தரேன்னு சொல்றீங்களே... இப்ப விவசாய நிலத்தை அடியோட புடுங்கிகிட்டு போறீங்களே... நாங்க எப்படிங்க வாழுறது. எங்க உயிரே போனாலும் பரவாயில்லீங்க... இந்த எட்டு வழிச்சாலை திட்டமே வேணாம். எங்க உயிர் போனாலும் விவசாய நிலத்தை பாதுகாக்கவே தீருவோம். என்னை சுட்டுப் பொசுக்கினாலும் பரவாயில்ல. நாங்க அண்ணன், தம்பிங்க, அப்பா, அம்மா, பிள்ளைங்க, பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு எங்க போவோம்... பிச்சையெடுக்க போவட்டுமா... சொல்லுங்க... 

 

எட்டு வழிச்சாலை வந்தால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக வரும் என்று முதல் அமைச்சர் சொல்லியிருக்கிறார் இந்த விவசாய நிலத்தை எடுப்பதாக சொல்லும் மோடி, இதனால் யாருக்கு லாபம் என்று சொல்லுவாரா. விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் லாபமா?

 

இழப்பீடு தருவதாக சொல்கிறார்களே? இழப்பீடு யாருக்கு வேணும்?. இந்த இழப்பீடு வச்சி எத்தனை நாளைக்கு பிழைக்க முடியும்?. ரூபாய் 30 லட்சம், ரூபாய் 40 லட்சம் மார்க்கெட்டில் போகும் நிலையில், அரசு வெறும் ரூபாய் ஒரு லட்சமும், இரண்டு லட்சமும் கொடுப்பதால் என்ன பயன் சொல்லுங்க. உளுந்தூர்பேட்டை ரோட்டில் நிலத்தை எடுத்துள்ளார்களே. எத்தனை பேருக்கு இழப்பீடு கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் அந்த வழக்கு நடந்துகிட்டு இருக்கு. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம், 27 ஆயிரமுன்னு கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கி இன்னைக்கு ஒரு மாடு வாங்க முடியுமா? 

 

எங்களுக்கு விவசாயத்தை விட்டா எதுவும் தெரியாது. தமிழ்நாட்டு மக்களை, இளைஞர்களை கேட்கிறேன். விவசாயம் பண்றது தப்புன்னா, விவசாயிகளை முதலில் சுட்டுத் தள்ளுங்கள். தொழில்தான் வளர வேண்டும், விவசாயம் வளர வேண்டாமா. தொழில் வளர்ந்தால் எல்லோரும் சோறை திங்காமல் பணத்தைத்தான் திண்பார்களா. பணத்தை திண்ணால் வயிறு நிறையும் என்றால் விவசாயிகளை சுட்டுக்கொன்றுவிடுங்கள். 

 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு விரைவில் பாலைவனமாக போகிறது. எட்டு வழிச்சாலை வந்தால் குடும்பத்துடன் விஷம் குடித்து சாக வேண்டியதுதான். நான் மட்டும் பாதிக்கப்படவில்லை. எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு எதிரான திட்டத்தை ஏன் செயல்படுத்த வேண்டும். சாலை போடுவதில் உடன்பாடு இல்லை. 

 

அப்படி போட வேண்டும் என்றால் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் 13 பேரை சுட்ட மாதிரி சுடு... சுடு... 100 பேர் சாகத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு பின்னால் இருக்கிற சந்ததி பிழைத்தால் போதும். விவசாயிகளை நாசமாக்கும் இந்த சாலை வேண்டாம். இவ்வாறு கூறினார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.