Skip to main content

“உங்களுக்கெல்லாம் கேவலமாக இல்லையா; அடுத்தவன் ஓட்ட நீங்களே போட்டு ஜெயிக்கிறதுக்கு பேரு வெற்றியா...?” - சீமான் கேள்வி

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

ிுப

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் நடப்பு அரசியல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன பதில் சொல்வது, இது ஒரு வெற்றியா? கேவலமாக இல்லையா, இதற்கு எங்கேயாவது தொங்கி விடலாம். வாக்களிக்க வருகிறவனைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு நீங்களே வாக்குகளைப் போட்டுக்கொள்வதுதான் மெகா வெற்றியா? இந்த மாதிரி தேர்தல் நடத்தினால் 8 முறை அல்ல 80 முறை கூட யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். இதில் பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கிறதா? 

 

இன்றைக்கு அம்பேத்கருக்கு பாஜக உரிமை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கும் அம்பேத்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் அவர்களை ஒன்றையாது சொல்லச் சொல்லுங்கள். இன்றைக்கு பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடிக்கு குஜராத்தில் சிலை வைத்துள்ளார்கள். பட்டேல் அவ்வளவு பெரிய தலைவரா? இந்த இந்தியாவைத் தாண்டினால் வேறு யாருக்காவது அவரை தெரியுமா? காந்தி, அப்பேத்காரை விட இவர் பெரிய தலைவரா? நீங்கள் யாரை ஏமாற்ற தற்போது அம்பேத்கரை கையில் எடுத்துள்ளீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். குஜராத் மட்டும்தான் இந்தியா என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். அந்த உலகத்திலிருந்து மீண்டு வாருங்கள் இல்லை என்றாலும் மக்கள் அதை உங்களுக்குப் புரிய வைப்பார்கள்.

 

தமிழகத்தில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகம் வருகிறார்கள். இவர்களைப் பற்றிய முறையான தகவல்களைத் தமிழக அரசு சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் வாக்குரிமை வழங்கக்கூடாது. ரேஷன் கார்டு கூட கொடுங்கள் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும். அதனால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால் ஒருபோதும் வாக்குரிமை வழங்கக்கூடாது. அவர்களுக்கு வாக்குரிமை வழங்கினால் ஈழத்தில் தமிழர்களுக்கு என்ன நடைபெற்றதோ அதுதான் நமக்கும் நடைபெறும். இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இது நம் எதிர்காலத்தோடு விளையாடுவதைப் போல் ஆகிவிடும். இதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

இல்லை என்றால் இவர்கள் வாக்களிக்கும் நபர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் நிலைக்கு நாடு சென்றுவிடும். அதைத் தவிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு என்பது ஏற்கனவே கூறியது போலத்தான், 40 தொகுதிகளில் நேரடி போட்டியில் ஈடுபடும், 20 ஆண் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். நாங்கள் தனித்தே தேர்தலை எதிர்கொள்வோம். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் எழத் தேவையில்லை. எங்களைப் புறக்கணித்தவர்கள் எல்லாம் எங்களை நோக்கி வரும் சூழலைத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் ஏற்படுத்தும். தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிச்சயம் நாம் தமிழர் கட்சி மாறும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். 

 

குறிப்பாக நாம் தமிழர் கட்சியோ நானோ ஒருவரை ஆதரிக்கிறேன் என்பதற்காக அவர்களின் அனைத்து கருத்துக்களையும் செயல்களையும் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் இருக்கும், கோட்பாடுகள் இருக்கும், யாரையும் நாங்கள் கூறுவதுதான் சரி என்று கட்டாயப்படுத்தக் கூடாது. நம்மையும் யாரும் கட்டப்படுத்த முடியாது. எனவே சம்பவங்கள் அடிப்படையில் நாம் யாரையும் அடையாளப்படுத்த முடியாது. நமக்குத் தவறு என்று படும் விஷயங்களில் நான் கருத்துச் சொல்கிறேன். அதில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து கூட இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் பேசவே கூடாது என்பது தவறான முன் உதாரணமாகிவிடும்" என்றார்.


 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.