Skip to main content

'கற்பழிப்பு' கருத்தில் மோடிக்கு சாவர்க்கரே குரு!

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

'இஸ்லாமியப் பெண்களை வன்புணர்வு செய்வது இந்துக்களின் ஒருவகையான ஆயுதம். அது தவறல்ல. எதிர்காலத்தில் இஸ்லாமியர்களை அடக்கியாளும் வழி' என்பது ஆர்எஸ்எஸ், மோடி உள்ளிட்ட பாஜகவினரின் குரு சாவர்க்கரின் பொன்மொழி. “வன்புணர்வு என்பது வன்புணர்வுதான். அதை அரசியலாக்கக்கூடாது. உங்கள் அரசாங்கத்தில் இவ்வளவு பாலியல் வன்புணர்வுகள் ஏன் நடக்கிறது என்றோ, அடுத்து வரும் அரசாங்கங்களில் ஏன் நடக்கிறது என்றோ கேட்கக்கூடாது” என்று சாவர்க்கரை பின்பற்றியே லண்டனில் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

 

 

 

 

modi svarakar statue



 

இஸ்லாமிய பெண்களை இந்துமத வெறியர்களான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பல்வேறு சமயங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி, குஜராத் கலவரத்திலும், முஸாபர்பூர் கலவரத்திலும் சரி, இஸ்லாமியப் பெண்களிடம் கொடூரமான முறையில் அத்துமீறியுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கதுவா அருகே நாடோடிகளாக வாழ்ந்த இஸ்லாமிய குடும்பங்களை விரட்டுவதற்காக காவிக்கூட்டத்தினர் திட்டமிட்டனர். சமீபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை மூன்று நாட்கள் ஒரு கோவிலில் மறைத்து வைத்து நாசப்படுத்திக் கொன்றனர். இது நாடுமுழுவதும் பாஜகவுக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணமானது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஜம்மு பகுதியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அது தோற்றது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று இந்து வழக்கறிஞர்களும், காஷ்மீர் அமைச்சர்களும் போராட்டம் நடத்தினார்கள். அதுபோலவே, உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ என்ற இடத்தில் ஒரு சிறுமியை பாஜக எம்எல்ஏ வன்புணர்வு செய்தார். அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள்.


 

savarkar

சாவர்க்கர் 

 

இந்தக் கொடூரமான நிகழ்வுகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்களோ, விஎச்பி தலைவர்களோ கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்தே, ஆர்எஸ்எஸ் சாவர்க்கரே இதுபோன்ற கற்பழிப்புகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் சில பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர்.

சாவர்க்கரைத்தான் பாஜகவினர் உள்பட காவிச் சங்கத்தினர் தங்களுடைய போற்றுதலுக்குரிய குருவாக வணங்குகிறார்கள்.  இந்திய நாடாளுமன்றத்தில்  அவருடைய படத்தை 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் திறந்துவைத்தார். இப்போதும் அவருடைய படத்துக்கு மோடி தினமும் மலர் தூவுகிறார். அப்படிப்பட்ட சாவர்க்கர் “இந்திய வரலாற்றில் ஆறு அற்புதமான சகாப்தங்கள்” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியப் பெண்களை வன்புணர்வு செய்வது ஏன் நியாயமானது என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

 

savarkar book

 

'கடந்த காலங்களில் இஸ்லாமியர்களின் படையெடுப்பு சமயத்தில் இந்துப் பெண்கள் ஒழுக்கத்தை காப்பாற்ற தற்கொலை செய்துள்ளனர். இக்கட்டான காலகட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது இந்துக்கள் கருணை காட்டி காப்பாற்றி இருக்கிறார்கள். சத்ரபதி சிவாஜி படையெடுப்பில் இஸ்லாமியரின் மகளை பத்திரமாக அனுப்பியிருக்கிறார். போர்ச்சுக்கீசிய கவர்னரின் மனைவியை பாதுகாப்பாக அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் தவறு. இஸ்லாமிய படையினர் இந்துக்களை நடத்தியதைப் போல, இந்துக்களும் இஸ்லாமியப் பெண்களை சேதப்படுத்த வேண்டும். இஸ்லாமியப் பெண்களை இந்துக்கள் வன்புணர்வு செய்வார்கள் என்ற பயம் இருந்தால் எதிர்காலத்தில் இஸ்லாமியர்கள் தயங்குவார்கள்' என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.