Skip to main content

சாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா! ஹிட்லர் பாணியில் அமித்ஷா!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

amit shah


இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நீதி "பரிபாலன' முறையை மாற்றி எழுதும் தனது மறைமுகத் திட்டத்தை இந்த கரோனா காலத்தில் நேரடியாகச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு முழுமூச்சாக இருப்பதாக எச்சரிக்கை கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

 

ஜூலை 4 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. தேசிய சட்டப் பல்கலைகழகம் அமைத்துள்ள கமிட்டியின் அறிக்கை என்ற பெயரில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் இந்த மூன்று சட்டங்களிலும் செய்யப் போகும் மாறுதல்கள், திருத்தங்கள் அதற்கான பரிந்துரைகள் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதில், இந்திய தண்டனை சட்டம் பற்றி 46 திருத்தங்கள் கொடுத்துள்ளது. இதுபற்றி கருத்து கூற 14 நாட்கள் என்றும் 200 வார்த்தைகளுக்குமேல் இருக்கக் கூடாது என்றும் அடுத்த 14 நாட்களில் கமிட்டி கூடி, பரிசீலனை செய்து சட்டத் திருத்தம் செய்து அதைச் சட்டமாக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு எவ்வகையான ஆபத்து என்பதை நம்மிடம் விரிவாக விளக்கினார் மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகன்.

 

"இப்போதும் நடைமுறையிலிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கால சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அரசியலமைப்பின் பன்முகத் தன்மையையும் சீர்குலைக்கும் ஒரு சதிச் செயலாகத்தான் பா.ஜ.க. அரசின் நடவடிக்கையைப் பார்க்க முடிகிறது.

 

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய காவல்துறை ஆராய்ச்சி மாநாட்டில் பேசும்போது, "ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்தோம். அடுத்து அயோத்தி வழக்கிலும் தீர்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு உலகத்தில் இந்தியாவை மூன்றாம் இடத்திற்குக் கொண்டு செல்லும். ஆனால் நமது வளர்ச்சிப் பாதைக்கு பல தடைகள் உள்ளது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டமும் அடக்கம்'' என்று பேசினார். "சட்ட கமிஷன் மாற்றி அமைக்க வேண்டும்'' என்றும் கூறினார்.

 

அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கமிட்டி அமைக்கிறது மறைந்த ராம்ஜெத் மலானி மகனும் பா.ஜ.க.வில் இருப்பவருமான மத்திய சட்டப் பல்கலைக்கழக கல்வியாளர் பாஜ்பாய் போன்று சில உறுப்பினர்களை கொண்டதாக அக்கமிட்டி உள்ளது. சட்டப் பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்வது என்றால் ஒரு சட்ட வல்லுநர் குழுதான் அதைச் செய்ய முடியும். ஆனால், அந்தக் கமிட்டியில் சட்டம் அறிந்த வழக்கறிஞர்களைச் சேர்க்காமல் கல்வியாளர்களைச் சேர்த்து உருவாக்குகிறார்கள் என்றால், அது பா.ஜ.க.வின் மறைமுக கொள்கை திட்டமாகத்தான் செயல்படும்.


இந்தக் கமிட்டியில் மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற- உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதுறை ஆளுமைகளைக் கொண்டவர்களை உறுப்பினராக்கி இந்திய அரசியல் சட்டத்தை இன்றைய நவீன விஞ்ஞான உலகுக்கு தகுந்தாற்போல் திருத்தம் செய்யவேண்டும். ஆனால், அவகாசம் தராமல், அவசர அவசரமாகச் செய்யப்படும் திருத்தம் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். உதாரணத்திற்கு, குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தில், ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு திருத்தம் உள்ளது. அதாவது, போலீஸிடம் குற்றவாளி கொடுத்துள்ள வாக்குமூலம் சட்டப்பூர்வமானது என்கிறது இந்தத் திருத்தம். இது நீதிக்கு எதிரானது. போலீஸ் காவலில் எத்தகைய சித்திரவதைகள் இருக்கும் என்பதற்குச் சாத்தான்குளமே இன்றைய சாட்சி. அப்படிப்பட்ட சித்ரவதைகளால் வற்புறுத்தப்பட்டு வாங்கப்படும் வாக்குமூலம் சட்டப்பூர்வமானது எனத் திருத்தம் செய்வது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அநீதியானது.

 

பா.ஜ.க. தன் கட்சிக் கொள்கைப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து உருவாக்கும் இந்தத் திருத்தங்கள் பலவும் சட்டத்தையும் அதிகாரத்தையும் முழுக்க முழுக்க போலீஸ் மயமாக்கும் திட்டமேயாகும். அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை- கருத்துச் சுதந்திரம் எல்லாம் உள்ளது ஆனால் தேசவிரோதி எனக் கைது செய்வார்கள். போலீசார் மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தைக் கொண்டே குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிக்க வழி செய்வார்கள். ஆட்சியை எதிர்ப்பவர்களை-உண்மையைச் சொல்பவர்களை இப்படி எளிதாக பழிவாங்க முடியும்.

 

http://onelink.to/nknapp

 

இந்தியாவின் பலமான அதிகாரமான நமது அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைத்து விட்டால் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தலாம் என்பது பா.ஜ.க.வின் திட்டம். இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது நமது பன்முகத் தன்மையைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் இப்போது நாடு முழுக்க இதை விவாதப் பொருளாக மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இணைந்து பேச வைத்துள்ளோம். இதுதான் நீதி என்று ஒரு கமிட்டி மட்டுமே கூற முடியாது 130 கோடி இந்திய மக்களின் சட்ட உரிமையைக் காக்கும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்றார் விரிவாக.

 

இதன் தொடர்ச்சியாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ், அமித்ஷா போன்ற மத்திய உள்துறை அமைச்சர்களின் நேரடிக் கட்டுப் பாட்டுக்குள் செல்லும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஹிட்லர்களின் கைகளில் சிக்கியிருக்கிறது இந்தியா.

 


 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது