Skip to main content

ஆர்.எஸ்.எஸ், குற்றவாளி, தற்போது இரண்டாம் முறையாக முதல்வர்....

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

பி.எஸ் எடியூரப்பா  தொடக்க காலங்களிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து அதில் ஒரு பெரும் பதவியை பிடித்தவர். 1980 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தாலூகாவின் பாஜக தலைவராகினார். 1985 ஆம் ஆண்டு ஷிமோகாரா மாவட்டத்தின் பாஜக தலைவராகினார். 1988 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் தலைவராகினார். 1994 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்கட்சித்தலைவராக இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார், இருந்தாலும் பாஜக தலைமை அவருக்கு எம்எல்சி பதவியை அளித்தது.  2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியினால் எதிர் கட்சி தலைவராக இருந்தார்.
 

yeddy

 

 

முதன்முதலில் கர்நாடக அரசியலில் இவரது பலத்தை காட்டியது, குமாரசாமி தலைமையில் மக்கள் ஜனதா தள அமைச்சர்கள் காங்கிரசுடன் இருந்த கூட்டணியை தவிர்த்துவிட்டு வெளியேறினர். ஆட்சி குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் எடியூரப்பாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார் குமாரசாமி. இரண்டு வருடத்தில் இவர்கள் கையில் ஆட்சி அமைக்கப்பட்டது. குமாரசாமிக்கு மட்டும் முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படாமல், இருவருக்கும் 20 மாதங்கள் என்று எடியூரப்பா தரப்பில் பேசப்பட்டது. அக்ரிமெண்டும் போடப்பட்டது. முதல் இருபது மாதங்கள் குமாரசாமிக்கும் அடுத்த இருபது மாதங்கள் எடியூரப்பாவுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் இருபது மாதங்கள் நன்றாக ஆட்சியமைத்துவிட்டு குமாரசாமி முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு தர மறுத்தார். எடியூரப்பா கொஞ்சமும் சிரமம் இல்லாமல், இவர்களுடன் இருந்த ஆதரவை முறித்துக்கொண்டு விலகினார். இரண்டு மாதங்கள் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி வந்து அவர்களை நோகடித்தது.
 

 

yeddy with kumarasamy

 

 


பின்னர், எடியூரப்பாவையே 2007 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு வந்தது, பதவியேற்றார். 2008 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து போட்டியிட்டார். பங்காரப்பாவுக்கு எல்லா தரப்பு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. அப்படி இருந்தபோதும் எடியூரப்பா 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிருந்துதான் இவரின் அரசியல் கெடுபிடி காலங்கள் ஏற்படத் தொடங்கின, பெங்களூர் மற்றும் ஷிமோகா போன்ற ஊர்களில் பல நில மோசடிகளும், சட்டவிரோதமான இரும்பு கம்பிகள் ஏற்றுமதி, சுரங்க ஊழல் போன்ற பல வழக்குகள் இவர்மேல் கர்நாடக லோக்ஆயுத் கமிஷன் முன் வைத்தனர். பாஜக மேலிடத்தில் இருந்து இவரை விலக சொல்லி அழுத்தம் அதிகரித்தது. முதலில் ராஜினாமா செய்யப்பட்டார் பின்னர் கட்சியைவிட்டு விலகினார். 15 அக்டோபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். 23 நாட்கள் சிறைவாசம் கழித்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டு கர்நாடகா ஜனதா பக்ஷா என்ற கட்சியை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் அவர் இணைந்தார், கட்சியையும் சேர்த்துதான். 2015 ஆம் ஆண்டு ஆளுநர் வஜூபாய் வாலாவால் மீண்டும் இவரது வழக்குகள் சரி பார்க்கப்பட்டு, பழைய வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  2016 ஆம் ஆண்டு கர்நாடக பாஜகவின் தலைவராகினார்.
 

yeddy with modi

 

 


2018 ஆம் ஆண்டு, இந்த சர்ச்சையான சூழலில் அவசர அவசரமாக கர்நாடக முதல்வராக பதவிப்பிரமாணம், ஆளுநர் தலைமையில் எடுத்துக்கொண்டார். உடனடியாக ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்து என்று முழு முதல்வரைப்போல அறிவித்துவிட்டார். இன்னும் 15 நாட்களே இருக்கிறது பெருபான்மையை நிரூபிக்க. அதற்குள் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் பாஜகவை எதிர்த்து நியாயம் கேட்க வெற்றி நடைபோட உள்ளனர் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.