Skip to main content

போட்டுத்தள்ள ஸ்கெட்ச்! ஸ்மெல் செய்து தூக்கிய போலீஸ்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

rowdy gang arrested by cholavaram police

 

ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளின் எண்ணிக்கையும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. பார்த்திபன் கொலை, ரெட்ஹில்ஸ் பகுதியில் மூன்று கொலைகள் என நடக்கும் தொடர் கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து ரவுடிகளின் நடமாட்டத்தையும், செயல்பாட்டையும் தடுக்க, ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சோழவரம் போலீசார் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடிகள், அவர்களது கூட்டாளிகள், மீஞ்சூர் பைபாஸ் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த கைது நடவடிக்கைகளின் பின்னணியில் கஞ்சா விவகாரம் மட்டும் இல்லையாம். அடுத்த கொலைக்கான ஸ்கெட்ச் தயாராகியுள்ள விவரம் அறிந்து போலீசார் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களாம்.

 

கஞ்சா விற்பனையில் சிக்கிய அர்னால்ட் சரவணன், ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி. இவர் சேது என்கிற சேதுபதி எனும் சரித்திரப் பதிவேடு ரவுடிக்கு மிக நெருக்கமானவர். இந்த சேதுபதி, எண்ணூர் ரவுடி டீம் உதவியோடு ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பதை வேலையாகக் கொண்டுள்ளார்.

 

ரியல் எஸ்டேட், மணல் விற்பனையாளர், தொழிலதிபர்களாக இருப்பவர்களின் முழு விவரங்களையும் எடுத்து அவர்களை வேவுபார்த்து அந்த விவரங்களை எடுத்துக்கொடுப்பது, ரவுடிகளுக்கு சிம்கார்ட் வாங்கிக் கொடுத்தல், கத்தி செய்துகொடுக்க ஆட்களை தயார் செய்தல் போன்றவை அர்னால்ட் சரவணன் வேலையாக இருந்து வந்துள்ளது. இதற்காக ஒரு தொகையை அர்னால்ட் சரவணன் சேதுபதி டீமிடமிருந்து பெற்றுக்கொள்வாராம்.

 

அர்னால்ட் சரவணன், முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் சரவணன் மனைவிக்குத் தெரிந்ததும், அவர் தன்னுடைய தம்பியும் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியுமான ராஜேஸ் என்கிற கட்டாரி ராஜேஸிடம் அழுதபடி சொல்லியிருக்கிறார். தன்னுடைய அக்காவுக்கு இப்படி ஒரு நிலையா என கோபமடைந்த கட்டாரி ராஜேஸ், அர்னால்ட் சரவணனுடன் தொடர்பில் இருந்த அந்தப் பெண்ணை மிரட்டி தொடர்பை கட் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் ராஜேஸுக்கும் சரவணனுக்கும் வாக்கு வாதம் பெரிதாக வெடித்து எதிரும் புதிருமாக மாறினார்கள்.

 

rowdy gang arrested by cholavaram police

 

தன்னை அவமானப்படுத்திய கட்டாரி ராஜேஸை போட்டுத்தள்ள திட்டம் போட்ட சரவணன், பாலாஜி என்கிற சுப்புவிடம் உதவி கேட்டுள்ளார். இந்த பாலாஜி (எ) சுப்பு, முத்துசரவணன் டீம். முத்து சரவணனுக்கும் சேதுக்கும் ஒரு பழைய பகை உள்ளது. சேதுவின் மச்சான் பிரசாந்தை முத்துசரவணன் டீம் போட்டுத் தள்ளவே.. சேது, முத்துசரவணனை போட்டுத்தள்ள சில நாட்களாகவே திட்டம் தீட்டி வந்திருந்தார். எப்படியாவது அதற்குள் நாம் முந்திக்கொள்ளவேண்டும் என யோசித்த முத்துசரவணனுக்கு, சேதுவுக்கு நெருக்கமான அர்னால்ட் சரவணன், பாலாஜியிடம் உதவி கேட்டு வந்ததை முத்துசரவணனிடம் சொல்லியிருக்கிறார். அர்னால்ட் சரவணன் சொன்னால் அந்த இடத்திற்கு சேது வருவான் என்பதால், முத்துசரவணன் பாலாஜியிடம் சொல்லி, அர்னால்ட் வேலையை முடித்துக்கொடு என உத்தரவிட்டுள்ளார்.

 

அடுத்தகட்டமாக முத்துசரவணன் டீம், கட்டாரி ராஜேஸுக்கு ஸ்கெட்ச் போட்டதுடன், இடைப்பட்ட காலத்தில் கஞ்சா விற்பனை செய்யவும், அர்னால்ட் சரவணனுக்கு சரக்கு கொடுத்துள்ளார். அந்த கஞ்சா விற்பனையின் போதுதான் தகவலறிந்த சோழவரம் இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் டீம், அர்னால்ட் சரவணனையும் பாலாஜியையும் பிடித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

வழக்கமாக காவல்துறை ரவுடிகளைப் பிடித்தபின் பாத்ரூமில்தான் வழுக்கிவிழுவார்கள். ஆனால் இந்த இரு ரவுடிகளும் காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓடும்போது பாலத்திலிருந்து தவறிவிழுந்து கைமுறிவு ஏற்பட்டுள்ளது.

 

ஆவடி சிட்டி லிமிட்டில் சோழவரத்தில் மட்டுமே 140-க்கு மேற்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் எண்ணூர், மீஞ்சூர், ரெட்ஹில்ஸ் வருகின்றன. ரவுடிகளுக்கும் போலீஸில் சிலருக்குமான வெளியே தெரியாத நட்பின் காரணமாகவே பலசமயங்களில் குற்றவாளிகள் தப்பிக்க சில காவல்துறையினர் உதவி செய்கிறார்கள்.

 

இதனால் ரவுடிகளுக்கு காவல்துறை உதவி செய்தது தெரிந்தாலோ, தகவல் வந்தாலோ உடனடியாக அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார் அறிவித்துள்ளார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், சேலம் மாவட்டத்தில் கலக்கிய இன்ஸ்பெக்டர் ஜெகனை எண்ணூருக்கும், ரெட்ஹில்ஸுக்கு ராஜா ராபர்ட்டையும், சோழவரத்திற்கு ஏ.ஜி.ஓ.டி. எனும் ஆன்டிகேங்ஸ்டர் ஆபரேஷன் டீமிலிருந்த சாய்கணேஷையும் பணிநியமனம் செய்து, ரவுடிகளை வேட்டையாட முழுமூச்சோடு ஜே.சி. விஜயகுமார் களம் கண்டுள்ளாராம்.

 

"கமிஷனரின் உத்தரவுப்படி ரவுடிகளை ஒழிக்க, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ரவுடிகளைக் கண்காணிக்க தனி ஒரு காவலரை நியமிக்கவுள்ளோம். நிலுவையிலுள்ள வழக்குகளை மீண்டும் நடத்தவும், தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் சிறப்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ரவுடிகளை 360 டிகிரி அளவில் முழுமையாக எங்கள் பார்வையில் கொண்டுவந்து அவர்களது மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார் இணை கமிஷனர் விஜயகுமார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டா மாற்றம்; கொந்தளித்த மக்கள் - அடியோடு ஸ்தம்பிப்பு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

patta document issue nellai

 

டவுன் சர்வே ஆவணத்தில் பட்டா மாற்றப்பட்டதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் ஒரு பகுதிவாசிகள்.

 

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள காந்தி நகர், கக்கன் நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலம் காலமாக வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நெல் களத்தை விவசாயப் பணிகளுக்காக பலகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தை அரசு தரப்பில் கையகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிந்ததுடன், அதற்காகவே ‘களம்’ என்றிருக்கும் நிலத்தை கழிப்பிடம் என்று டவுன் சர்வே ரிப்போர்ட்டான டி.எஸ்.ஆர். படி பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

 

அதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகரின் தேரடித் திடலில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேரடி திடலில் உண்ணாவிரதமிருக்க போராட்டத்தில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது போலீஸ் நிர்வாகம். ஆனாலும் தடையை மீறி நேற்று மைதானத்தில் கக்கன் நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 14 ஊர் நாட்டாமைகள் தலைமையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் மற்றும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தகவல் போய் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமாரும் ஸ்பாட்டுக்கு முன்னதாக வர, அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

patta document issue nellai

 

கொந்தளிப்பான நிலையில் கழுகுமலை சாலையிலிருந்து நெல்லை சாலையை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். சிறிது தூரத்திற்குப் பின்பு பழைய தாலுகா அலுவலகம் முன்னே போலீசார் அந்த மக்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்ய, போலீசுக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கழுகுமலை, நெல்லை பிரதான சாலைகள் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் காரணமாக மூடப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆத்திரமான மக்கள் தடுப்புகளை மீறித் தேரடித் திடலுக்குச் சென்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேசக் குரலெழுப்பினர்.

 

காலை 10 மணிக்கு ஆரம்பித்த மக்களின் மறியல் போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது. சுமார் மூன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் பதற்றம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; நண்பனைக் கொன்று புதைத்த இளைஞர்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

youth incident his friend in Tirupattur

 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ளது பலக்ல்பாவி. இங்குள்ள முருகன் கோவில் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அன்று ஆடு மேய்க்கச் சென்றவர்கள், குழி ஒன்றில் அரைகுறையாக மூடப்பட்டுள்ள பள்ளத்திலிருந்து துர்நாற்றம் வீசி ஈக்கள் மொய்ப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்து யாரோ புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதனை பெரியவர் ஒருவர் குச்சியால் தோண்டியுள்ளார். அப்போது மனித கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

உடனடியாக திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மற்றும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் வந்தனர். வருவாய்த்துறையினர் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டி பார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று உடலில் துணி எதுவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். உடல் தோண்டியெடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் கொல்லப்பட்டவரை அடையாளம் காண முடியாத நிலையில், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.            

 

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மல்லகுண்டா அடுத்த சுண்ணாம்பு காரகொள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகன் விஜயகுமார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காணவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் எனப் புகார்  கொடுத்தார். புகாரில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மேஸ்திரி வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. விஜயகுமார் மலேசியா சென்று வேலை பார்த்து வந்தவர், அது செட்டாகாமல் ஐந்து மாதத்துக்கு முன்பு ஊர் திரும்பியதாகவும் இரண்டு மாதங்களாகச் சொந்த ஊரில் இருந்து வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.          

 

விஜயகுமார் அவரது மனைவி வினிதா(25) என்பவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த தீபாவளி அன்று கணவனுடன் சண்டையிட்டு அவரது தாய் வீடான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கடந்த 21 ஆம் தேதி கொன்று புதைக்கப்பட்ட நபர் ராஜாவின் மகன் விஜயகுமார்(29) என்பதும் அவர் காட்டிய அடையாளங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இறந்து போன விஜயகுமாரின் செல்போன் நம்பர்களை கண்காணித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது அந்த நம்பர் அவருடைய நண்பரான திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன்(24) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.

 

இறந்து போன விஜயகுமாரின் மனைவி வினிதாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திரனிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்தேன். கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ராகவேந்திரனும் நானும் ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி தனிமையில் இருந்தோம். அப்போது என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு என்னை டார்ச்சர் செய்து வருவதாக அவரிடம் கூறினேன். நான் பார்த்துக்கறன்னு ராகவேந்திரன் சொன்னார். கடந்த 19 ஆம் தேதி ராகவேந்திரன் விஜயகுமாருக்கு போன் செய்து தனியாக வரவழைத்து அவருக்கு மது பாட்டில்களை வாங்கி கொடுத்து கொலை செய்து மண்ணில் புதைத்து விட்டு தலைமறைவாக ஆனது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது எனக் கூறியதாக தெரிகிறது.            

 

அதனைத் தொடர்ந்து ராகவேந்திரனை பிடித்த காவல்துறையினர், கொலை எவ்வாறு நடந்தது, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த துணி ஆகியவற்றை கைப்பற்றி அவருக்கு உதவிய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரையும் கைது செய்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்