Skip to main content

"ரஜினிகாந்த் ஒரு பக்கா பாஜக ஆதரவாளர்" பிரபல ஆர்.ஜே அதிரடி!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

புதிய கல்விக்கொள்கை விவகாரம் தொடர்பான கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு பாஜக மற்றும் தமிழக அமைச்சர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அதிகம் பேசப்படாமல் இருந்த சூழ்நிலையில், சூர்யாவின்  பேச்சுக்கு பிறகு தமிழகம் முழுவதும் புதிய கல்விக்கொள்கை தொடர்பான விவாதங்கள் எழுந்து வருகிறது. அவரின் இந்த கருத்தை தமிழ் திரையுலகின் முக்கிய நபர்களும் ஆதரித்து உள்ளனர். குறிப்பாக கமல், அமீர், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் அவரின் கருத்தை ஆமோதித்தனர்.

 

RJ Rajavel Nagarajan Interview



இந்நிலையில், 'காப்பான்' பட விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அதுதொடர்பாக பேசிய அவர், சூர்யாவின் இந்த கருத்து பிரதமர் மோடிக்கு சென்றிருக்கும் என்று கூறினார். இதுதொடர்பான வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல ஆர்.ஜே ராஜவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். இந்த பிரச்சனை தொடர்பாக பேசிய அவர் ' நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக சூர்யாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தார் என்பது தவறான புரிதல். அந்த விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி பேசினார். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு ரஜினிகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அப்படி தான் இதை பார்க்க வேண்டும். ஏனெனில், அவர் சூர்யாவுக்கு ஆதரவு கொடுப்பதாக இருந்தால் இந்த பிரச்சனை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அதனை செய்திருக்கலாம், அல்லது நடிகர் கமல்ஹாசன் சூர்யாவின் கருத்தை ஆதரித்து அறிக்கை விட்டபோதாவது கூறியிருக்கலாம். இதையும் தாண்டி நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு சூர்யாவை ஆதரித்து ஒரு டுவிட் போடுவது சிரமமாக இருக்காது. ஆகையால் கபிலனின் கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார் என்றுதான் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

 

அதையும் தாண்டி அவர் எப்போதும் பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பவர் தான். இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நேரில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக கூட்டணி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று கேட்டு தன்னுடைய பாஜக ஆதரவு நிலையை வெளிப்படையாக காட்டினார். எந்த ஒரு முக்கிய விவகாரத்திலும் பாஜகவை எதிர்த்து ரஜினி இதுவரை கருத்து தெரிவித்ததில்லை. ஆகையால், சூர்யாவுக்கு பதில் நீங்கள் பேசியிருந்தீர்கள் என்றால் அது மோடி வரை எதிரொலித்திருக்கும் என்ற கபிலன் வைரமுத்துவின் பேச்சுக்கு பதில் சொல்லும் விதமாகவே ரஜினியின் பேச்சை நாம் அணுக வேண்டுமே தவிர புதிய கல்விக்கொள்கையை அவர் எதிர்ப்பதாக இருந்தால் முன்பே இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருக்கலாம்" என்றார்.


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

"அந்த சம்பவத்தை நினைச்சு ஒரு வாரம் பொறாமையா இருந்துச்சு" - பாலா

 

bala speech about mysskin work in vanangaan

 

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

 

அப்போது பாலா பேசுகையில், "இளையராஜாவை பற்றி மிஷ்கின் சொல்லிக்கிட்டே இருந்தார். ஆனால் இளையராஜாவும் மிஷ்கினை பற்றி என்னிடம் சொன்னதும் உண்டு. அப்போது மிஷ்கினின் படம் ரிலீஸானது தெரியாது. நான் என்னோட படத்திற்காக இளையராஜாவிடம் சென்றிருந்தேன். அப்போது ஷார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டு, சம்மந்தமே இல்லாமல் ஷூ போட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு உருவம் போய்க்கொண்டிருந்தது. அந்த உருவம் போனதுக்கு பிறகு இளையராஜாவிடம் கேட்டேன். யார் அது? பேரு மிஷ்கின், அவனை பத்தி சாதாரணமா எடை போட்டுடாத... பெரிய இன்டலெக்சுவல் என்றார். 

 

அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியாது. ஆனால் மிஷ்கினிடம் நெருங்கி பழகினதுக்கு பிறகு தான் தெரியுது, அது உண்மை என்று. ஒரு டெவில், இன்னொரு டெவிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய பெயரையே வோல்ஃப்-ன்னு (Wolf) தான் என் ஃபோனில் சேவ் பண்ணி வச்சிருக்கேன். ஓநாய் என்று அர்த்தம். நிறைய பேச வேண்டி இருக்கு. அடுத்தடுத்து மேடைகளில் பேசுவோம்" என்றார். 

 

உடனே பேசிய மிஷ்கின், "நான் 2 டைரக்டர் கிட்ட அசிஸ்டண்டா வேலை பாத்திருக்கேன். பத்து படம் பண்ணிட்டு இப்போது பாலாவுடைய வணங்கான் படத்தில் அசிஸ்டன்ட்டா வேலை பார்த்திருக்கிறேன். அந்த பெருமையை எனக்கு கொடுத்த பாலாவிற்கு நன்றி" என்றார். பின்பு பேசிய பாலா, "அசிஸ்டண்ட் டைரக்டரா மட்டும் இல்லை. டைரக்டராகவே ஒர்க் பண்ணிருக்கான். ஒரு சீன் நடிச்சான். அதை நீயே கம்போஸ் பண்ணிடு என்றேன். வித்தியாசமான கம்போசிங். ஷாட் முடிந்ததும் ஓகே என்றேன். வேகமா பக்கத்துல ஓடி வந்து, 'இன்னொரு தடவ பாத்திட்டு செக் பண்ணிட்டு ஓகே சொல்லுங்க...' என்றான். திரும்ப பார்த்தேன், 'நல்லதானடா இருக்கு' என்றேன். 

 

அந்த ஷாட் நீளமான ஒன்னு. 20 பேர் இருப்பாங்க. அதில் மிஷ்கின் கையை கட்டிக்கிட்டு கீழே குனிஞ்சு நிக்கணும். ஷாட் முடிந்ததும், என்னிடம் வந்து அதில் ஒரு பொண்ணு மட்டும் லேசா கண்ணு அசைச்சுருக்கு. கேமராவை பார்க்கிற மாதிரி இருக்கு என்றான். குனிஞ்சு தானே நிக்க சொன்னோம்... எப்படி அதை கவனிச்சான் என பார்த்தால், கீழே குனிஞ்சுக்கிட்டே யார் யார் என்ன பண்ணுறாங்க என்பதை பார்த்திருக்கிறான். அப்படி ஒரு ஷார்ப்பான ஆளு மிஷ்கின். அந்த சம்பவத்தை நினைச்சு ஒரு வாரம் பொறாமையா இருந்துச்சு. மிஷ்கினுக்கு முன்னாடி நாம ஒண்ணுமே இல்ல என தோணுச்சு" என்றார்.   

 


 

Next Story

சர்ப்ரைஸாக அப்டேட் கொடுத்த மம்மூட்டி - ஜோதிகா படக்குழு

 

mammooty jothika kathal movie release update

 

மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம்  'காதல் - தி கோர்'. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்த படம் கோவாவில் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கும் 54வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தற்போது சர்ப்ரைஸாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.