Skip to main content

"தமிழ்நாடு பற்றி ராகுல்காந்தி சொன்ன அந்த வார்த்தை; பிரதமரின் இந்த நாடகத்துக்கு அதுதான் காரணம்..." - காந்தராஜ் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

ரகத

 

கடந்த வாரம் வாரணாசியில் பிரதமர், இளையராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழை வளர்க்க பாஜக எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் இதுதொடர்பாக சிலாகித்து வருகிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் இல்லாத நிலையில் இது தமிழை வளர்க்க நடத்தப்பட்ட விழாவா இல்லை பாஜக அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக நடத்தப்பட்ட விழாவா என்ற கேள்வியைத் தமிழ் அறிஞர்கள் பலரும் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் மிகப் பிரபலமாக நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசிவருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும், எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

தமிழை வளர்க்க நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விழாவில் யார் யார் எல்லாம் கலந்துகொண்டார்கள். பிரதமர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா, உ.பி முதல்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா? இளையராஜா தமிழர்தான். இவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திருவாசகம் பாடினாரே என்றால் அதெல்லாம் இப்போது அவருக்கு ஞாபகமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்ச் சமூகத்திலிருந்து நான்கு பேர் கூட தமிழ்நாட்டிலிருந்து வரவில்லையே ஏன்? இவர்கள் தமிழை எதற்காக வளர்க்கிறேன், வளர்க்கிறேன் எனக் கூக்குரல் இடுகிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது.

 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி தமிழ்நாட்டில் எந்த குட்டிக்கரணம் போட்டாலும் உங்களால் வெற்றிபெற முடியாது என்று பாஜகவை பார்த்துக் கூறினார். இது அமித்ஷா மற்றும் மோடியின் பார்வைக்குச் சென்றதை அடுத்து அவர்கள் தமிழ்நாடு மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக மாதம் ஒருமுறை தமிழகம் வந்து ஆங்காங்கே விழாக்களில் பங்கெடுத்து தமிழ் உலகில் சிறந்த மொழி, மூத்த மொழின்னு கூறிவிட்டு ஒரு திருக்குறளை சொல்லிவிட்டு போறாங்க. நாங்களும் தமிழை காப்பாத்துறோம்ன்னு தற்போது இவர்கள் காசி தமிழ்ச் சங்கமம்னு நிகழ்ச்சி நடத்துறாங்க.

 

ஆனால் அதிலேயும் பாருங்க தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் தமிழ் மட்டும்தான் தமிழ், சங்கமம் கூட வட மொழிதான். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தமிழை வளர்க்கிறார்கள். தமிழை வளர்க்கப் போகிறேன், தமிழை வளர்க்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே எப்படி என்று இதுவரை ஏதேனும் கூறியிருக்கிறார்களா? அறிவியல் பூர்வமாகத் தமிழை வளர்ப்பேன் என்கிறார்களா இல்லை ஆன்மீக ரீதியாகத் தமிழை வளர்ப்பது பற்றிப் பேசுகிறார்களா என்று எதுவுமே இவர்கள் கூறுவது இல்லையே. அதைத்தானே நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தமிழை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளதாக நிறையப் பேர் பேசுகிறார்கள். அவருக்கு மிக்க நன்றி, ஆனால் அதை அவர் சொல்லியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசலாம், மொழிபெயர்ப்புக்கு ஆவண செய்யலாம், தமிழை இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்வுகளில் பயன்படுத்தலாம் என அறிவித்து அதை உறுதிப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு வெறும் வாயில் முழம் போடக்கூடாது. ஆனால் அவர்கள் வாயில் மட்டுமே தமிழை வளர்ப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவர்கள் வாயை வைத்துத்தான் இன்றைக்கு இந்த இடத்திற்கே வந்துள்ளார்கள்.


 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.