Skip to main content

"எவன் செத்தா நமக்கென்னன்னு கட்டை கட்டி சரக்கு வித்தது யாரு? ; இல்லீகல், மர்டர் போன்ற வார்த்தைகளை எடப்பாடி மிக அழகாக உச்சரிப்பார்..." - புகழேந்தி பேட்டி

Published on 26/11/2022 | Edited on 28/11/2022

 

பக

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு புகார்களைக் கொடுத்ததாகப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ஆனால் அமித்ஷா தொடர்பாக அவர் பேசியது டெல்லி வரைக்கும் கோபத்தை ஏற்படுத்தியதால் தன் தரப்பு விளக்கத்தை ஆளுநரிடம் அவர் தெரிவித்ததாகவும், இதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அதை எடப்பாடி அரசாங்கம் எப்படி நடைபெற்றது என்பதை ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பன்வாரி லால் புரோகித் வெளிப்படையாக பஞ்சாபில் தெரிவித்துள்ளாரே? ஒரு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு எத்தனை கோடி வரை வாங்கினார்கள் என்று பன்வாரி லால் தான் மிகத்தெளிவாகப் புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளாரே? இவர் போய் அடுத்தவர் மீது என்ன ஊழல் புகார் தெரிவிக்கப் போகிறார். இவர் செய்த ஊழல்களை எல்லாம்தான் விலாவரியாக முன்னாள் ஆளுநர் அமித்ஷாவிடமும் மோடியிடமும் எப்போதே தெரிவித்திருப்பாரே, இப்போது இவர் என்ன ஆளுநரைச் சந்தித்து புகார் கொடுக்கப் போகிறார்? இவர் மீது இவரே வேண்டுமானால் புகார் தெரிவித்துக்கொள்ளலாம். 

 

தமிழகத்தில் இல்லீகல் பார்கள் செயல்படுவதாக ஆளுநரிடம் தெரிவித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

பழனிசாமிக்கு எது தெரிகிறதோ இல்லையோ இல்லீகல், மர்டர், கொலை இது எல்லாம் நன்றாக தெரியும். அதனை அருமையாக பேசுவார். இதில் அவர் மிகுந்த அனுபவசாலி. அவரின் அனுபவத்துக்கு முன்னால் கூட யாரும் நிற்க முடியாது. சட்ட விரோத பார் தமிழகத்தில் எங்கு நடக்கிறது என்ற ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியதுதானே, பாரில் கொள்ளை அடிப்பதை அதுவும் தங்கமணியை அருகில் நிற்க வைத்துவிட்டுப் பேசுகிறார்.

 

கரோனா காலத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் வாசலில் கட்டை கட்டி வியாபாரம் செய்தவர்கள் தானே இவர்கள். எத்தனை உயிர்கள் போய்க்கொண்டிருந்த அந்தக் கொடுமையான காலகட்டத்தில் இவர்கள் சரக்கைக் கூடுதல் விலைக்கு விற்றும், மக்களின் உயிரைப்  பற்றி சிறிதும் கவலைப்படாமலும் நடந்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே?

 

எவன் செத்தா நமக்கென்னன்னு சரக்கு வித்துட்டு ஆளுநரிடம் இவர் கம்ப்ளைன்ட் கொடுப்பாராம், இதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம். இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யாரும் செய்யமாட்டார்கள். இதை எல்லாம் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அதனால்தான் மக்கள் அம்மா உருவாக்கிய கட்சியையே தோற்கடிக்கக் காரணமாக அமைந்தது.

 

இவர்களைக் கட்சியினர் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இவர்கள் தயவு செய்து ஊழலைப் பற்றி மட்டும் பேசக்கூடாது. ஒரு ஊழலின் மொத்த உருவமே எடப்பாடி குரூப்தான். எனவே எதைப் பற்றிப் பேசினால் அதற்குப் பதில் சொல்லலாம். ஆனால் அதைப்பற்றி மட்டும் அவர்கள் தயவுசெய்து பேசக்கூடாது என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். 

 

 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.