Skip to main content

பா.ஜ.க. நண்பர்களின் ஆக்ஸிஜன் சதி! பலியாகும் நோயாளிகள்!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
ddd

 

ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது இந்தியா. கொரோனாவால் சுமார் 1.3 கோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெறுகின்றனர். இரண்டாவது அலையின் தொடக்கத்திலேயே கொரோனா பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. சுமார் 20 லட்சம் பேர் ஆக்சிஜன் சப்போர்ட்டில் இருப்பதால் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித் துள்ளது. ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையால் வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துவருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு சமூக அமைப்புகளும் பா.ஜ.க. மோடி அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. "மோடியே ராஜினாமா செய்' என்கிற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட்டாகி வருகிறது.

 

அவசரமாக ஆலோசித்த பிரதமர் மோடி, "ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கவேண்டும், அவற்றின் கொள்ளளவு எவ்வளவோ அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டும்' என உத்தர விட்டார். அதோடு, நீண்ட மாதங்களாகக் கிடப்பில் இருந்த 162 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான லைசென்ஸ் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு லைசென்ஸ் வழங்க முடிவாகியுள்ளது.

 

இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை யால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜேஸ்வரி, பிரேம், செல்வராஜ், லீலாவதி, ராஜேந்திரன் உட்பட 7 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் கோஷமிட்ட னர். அவர்களிடம் பேசியபோது, ""கடந்த 3 நாட்களாக வார்டுகளில் ஆக்ஸிஜன் சப்ளை சரியாக இல்லை. டாக்டர்களிடம் சொன்ன போது, "உங்களுக்குத் தனியா வேணும்னா வேற ஆஸ்பிட்டலுக்குப் போங்க, இல்லையா நீங்க ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி வந்து தாங்க'ன்னு சொன்னாங்க. டீன் சாந்தி, ஆர்.எம்.ஓ., டாக்டர்கள், நர்ஸ்கள் என வரிசையாக முறை யிட்டபோதும் நட வடிக்கை எடுக்கவில்லை அதனால்தான் இறந்தார்கள்'' என்றார்கள்.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ""இங்கும் 1,600 பெட் உள்ளது, அதில் 560 பெட்ஸ் கோவிட் நோயாளிகளுக்கானது. அதில் கொரோனா தீவிர சிசிக்சைப் பிரிவில் 59 பேர், கோவிட் அல்லாத தீவிர சிகிச்சைப் பிரிவில் 62 பேர் என 121 பேர் ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்தனர். இறந்த ஏழுபேரில் ஒருவர் மட்டுமே கோவிட் பாசிட்டிவ் நோயாளி, மூவர் பாசிட்டிவ்வாக இருந்து நெகட்டிவாக மாறியவர்கள், ஒருவர் கிட்னி பெயிலியர், கார்டியா அரெஸ்ட் வந்து இறந்தார்கள். ஆக்ஸிஜன் இல்லாததால் இறந்தார் கள் என்றால், மற்றவர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் ஏற்படவில்லை. அதனால் இது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்பில்லை'' என்றார்.

 

ddd

 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள அணைக் கட்டுத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தி.மு.க. மா.செ. நந்த குமார், ""வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப் பேட்டை மாவட்ட மக்கள் இந்த மருத்துவக் கல்லூரியை நம்பி சிகிச்சைக்காக வருகின்றனர். அனைவரும் ஏழை மக்கள். அ.தி.மு.க. அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த இறப்புக்குக் காரணம். ஆக்ஸிஜன் பிரச்சினையால் இறந்ததை மாவட்ட ஆட்சியர் மறைப்பது வெட்கக்கேடானது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும்'' என்றார்.

 

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, வேலூர் வந்து விசாரித்தபோது... ""இங்கு 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சிலிண்டர்கள் உள்ளன. அதில் தோராயமாக 13 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உள்ளது. தினமும் சராசரியாக 1,350 லிட்டர் ஆக்ஸிஜன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஸ்டோரேஜ் சென்ட ரில் இருந்து வார்டுக்கு செல்லும் குழாயில் டெக்னிக்கல் பிராப்ளமாகி, அதனைக் கண்டறிந்து சரி செய்வதற்குள் இப்படியொரு விபரீதம் ஏற்பட்டுவிட்டது'' என்றுள்ளார்கள். பிரச்சினையை சால்வ் செய்துவிட்டார்களா என்பதையும் அறிந்துகொண்டு சென்றுள்ளார்.

 

ddd

 

மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களோ, ""கொரோனாவின் இரண்டாம் அலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிரதேசம், டெல்லி, சத்திஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், அரியானா, மத்தியப்பிரசேதம் போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள் ளது. மொத்தமாக இந்திய மருத்துவமனைகளுக்குத் தற்போதைய தேவை, 1,400 மெட்ரிக் டன் எனக் கணக்கிடப்படுகிறது.

 

இந்தியாவில் பெரியதும், சிறியதுமாக சுமார் 500 கம்பெனிகள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்கின்றன. தினசரி 5,913 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் பட்டது, தற்போது 6,200 மெட்ரிக்டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் அதிகபட்சமாக 20 சதவிதம் மட்டுமே மருத்துவமனைகளுக்கானது. மருத்துவத் துக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தனி ரகம். அதே போல் தரக் கட்டுப்பாடும் உள்ளது. மீதியுள்ள 80 சதவீதம் வேறு தளத்தில் ஆட்டோமொபைல், எஃகு உற்பத்தி மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

 

ஐநாக்ஸ், லைன்ட் இன்டியா, கோயல் எம்.ஜீ. என சில பிரபலமான கம்பெனிகள் ஆக்ஸிஜன் உற்பத்தியில் கோலோச்சுகின்றன. ஐநாக்ஸ்தான், தினசரி 2,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல தொழிற்சாலைகள் நாடு முழுவதும் உள்ளன. முன்பு ஒரு சிலிண்டர் விலை 100 முதல் 150 வரை இருந்ததை, கொரோனாவைக் காரணம் காட்டி தற்போது 500 முதல் 2 ஆயிரம் ரூபாய்வரை விலை யை உயர்த்தியுள்ளன. வெளிமார்க்கெட்டில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். இந்த கார்ப்பரேட் கம்பெனிகள், பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் நண்பர்கள். இதனாலயே புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க லைசென்ஸ் கேட்ட 162 கம்பெனிகளுக்கு வழங்கவில்லை. அதனால்தான் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு பல உயிர்கள் போகின்றன.

 

"தற்போதைய உடனடித் தேவைக்காக 50 ஆயிரம் டன் மருத்துவ ஆக்ஸிஜனை வெளிநாடுகளில் வாங்க இந்திய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது. மற்ற நாடுகளிலும் ஆக்ஸிஜன் தேவை இருப்பதால் நமக்கு கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுகிறது' என்றார்கள். இதில் இன் னொரு வேதனை என்னவென்றால், இதே 50 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து, காசு பார்த்துள்ளன, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செயல்படும் இந்த நிறுவனங்கள். கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 1.80 லட்சத்தில் இருந்து 7.20 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் ஸ்டோ ரேஜுக்கான வசதியை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி யுள்ளது. இன்னும் 10 நாட்களுக்கான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. ஆனால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாநிலத்துக்கு வரவேண்டிய கூடுதல் ஆக்ஸிஜனை மத்திய அரசு முறையாகத் தந்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் ஆக்ஸிஜன்; இஸ்ரோ தந்த தகவல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

ISRO informs that there is oxygen in the moon

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS)  என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழப்பு; செவிலியர் பணிநீக்கம்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

 lost their live of the patient during intercourse; Nurse layoffs

 

நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழந்து அதனால் செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸில் நிகழ்ந்துள்ளது.

 

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸின் ரெஸ்க்ஸ்ஹாம் நகரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் பெனலாப் வில்லியம்ஸ். 42 வயதான பெனலாப் வில்லியம்ஸ் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். மருத்துவமனையின் பின்புறத்தில் மருத்துவப் பணியாளர்கள் கார் நிறுத்தும் பகுதியில் அந்த நோயாளியுடன் அடிக்கடி காரில் பாலியல் உறவில் செவிலியர் ஈடுபட்டுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று இரவு அந்த நோயாளியுடன் காரில் செவிலியர் பாலியல் உறவில் இருந்த நேரத்தில் திடீரென நோயாளியின் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு காரிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபொழுது காரில் ஆடையின்றி அரைநிர்வாணக் கோலத்தில் நோயாளி இறந்து கிடந்தார். நோயாளியுடனான இந்த தொடர்பு குறித்து செவிலியர் பெனலாப்பை அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் ஏற்கனவே எச்சரித்து வந்த நிலையில், அதையெல்லாம் அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். செவிலியர் பணிக்கு எதிராகவும், அதன் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.