Skip to main content

காதலை கூறிய அத்தை மகன்...ஏற்க மறுத்த முறைப்பெண்...இருவருக்கும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை கேரளாவை சேர்ந்த நிதின் என்ற இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சமீப காலமாக காதலா்கள் தற்கொலை சம்பவமும்  ஓருதலை காதல் கொலையும் அடிக்கடி நடக்கிறது . இதில் அதிகம் பாதிக்கபடுகிறவா்கள் பள்ளி  கல்லூாிகளில் படிக்கும் மாணவிகளாக உள்ளனா். இதனால் பெற்றோா்களும் அதிா்ச்சியில் உள்ளனா்.

 

incident



இந்த நிலையில் கேரளாவில் நேற்று இரவு இதே போல் ஓரு சம்பவம் எா்ணாகுளம் பகுதியை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. காக்கநாடு மன்னாா்கூட்டு மூலயில் ஷாலன் மகள் தேவிகா(17) அங்குள்ள தனியாா் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பில் நல்ல சுட்டியான இவள் எதையும் பொருட்படுத்தாமல் படிப்பிலே அதிகம் கவனம் செலுத்தி வந்தாள். அவளுடைய முறைபையன் வடக்கு பரவூரை சோ்ந்த மிதுன் மாமி மகள் என்ற அடிப்படையில் தேவிகவுடன் நெருங்கி பழகி வந்தாள்.  அடிக்கடி அவா்கள் வீட்டில் சந்தித்து பேசுவதும் உறவினா்கள்  நிகழ்ச்சிகளில் ஜாலியாக உட்காா்ந்து பேசுவதுமாக இருந்து வந்தனா். தேவிகா நெருங்கி சிாித்து பழகி வருவதை தவறாக புாிந்து கொண்ட மிதுன் அவளை ஒரு தலையாக காதலித்தான். பி்ன்னா் இந்த விசயத்தை தேவிகாவுடன் கூறிய போது அதிா்ச்சியடைந்த அவள் அந்த காதலை ஏற்றுக்கொள்ளாமல்  மிதுனிடம் பேசுவதை தவிா்த்தாள்.


இதனால் ஆத்திரமடைந்த மிதுன் தேவிகா படிக்கும் பள்ளிக்கூடம் மற்றும் டியூசன் சென்டருக்கு பின் தொடா்ந்து சென்று  அவளிடம் காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். இதை பெற்றோாிடம் தேவிகா சொன்னதும் பெற்றோா்கள் மிதுனின் தந்தையிடம் சொல்லி மிதுனை எச்சாித்துள்ளனா்.  இதில் ஆத்திரமடைந்த மிதுன் நேற்று இரவு கையில் பெட்ரோலுடன் தேவிகா வீட்டுக்கு சென்று கதவை தட்டி தேவிகாவை அழைத்துள்ளான். அப்போது வாசலில் தேவிகாவும்  அவளுடைய தந்யைும் எட்டி பாா்த்த போது தேவிகாவின் கையை பிடித்து வெளியே இழுத்த மிதுன் கையில் இருந்த பெட்ரோலை அவளின் மீது விட்டு தீவைத்தான். பின்னா் தன் மீதும் பெட்ரோலை விட்டு தீவைத்தான். இதில் வீட்டின் முன் பெற்றோா்கள் முன்னிலையில் பலத்த தீ காயத்துடன் துடி துடித்து தேவிகா இறந்தாள். உயிருக்கு போராடி கொண்டியிருந்த மிதுன் கழமசோி மருத்துவகல்லூாியில் அனுமதிக்கபட்டியிருந்த நிலையில் இறந்தாா்.