Skip to main content

"நேருவால் மட்டுமல்ல... ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது.." - எல்.முருகன் தடாலடி

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 

ரகத

 

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இன்று இந்தியா 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி  முடிந்துள்ளது. விரைவில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அடைய வேண்டிய வளர்ச்சி தொடர்பாக நாம் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். இதன்படியே இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 

 


இதில் நாம் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை, நாட்டு மக்களின் நலம் சார்ந்த கொள்கைகளை, கோட்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக பாஜகவின் இந்த எட்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். சுகாதாரத் திட்டங்களுக்கு நாம் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இன்றைக்கு நாட்டில் யார் வீட்டிலும் கழிவறை இல்லாமல் இல்லை என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதற்காகக் கடுமையான கஷ்டங்களை இந்த அரசு எதிர்கொண்டது. மக்களுக்காக எந்த ஒரு கடினமான நிலையைக் கூட நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு காந்தியடிகள் பிறந்தநாள். அவரின் எண்ணத்தின்படியே இந்த ஆட்சி நல்லாட்சியாகச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கர்ம வீரர் காமராஜரின் எண்ணப்படியே எங்களின் நற்பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளோம். அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைய வளர்ச்சி திட்டங்களுக்கு காமராஜர் அன்றே முன்னெடுப்புக்களைச் செய்திருந்தார். பெருவாரியான அணைகளைக் கட்டி விவசாயம் செழிக்க அவர் பாடுபட்டார். இதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதற்காகவே நாம் அவரை கொண்டாடி வருகிறோம். 

 

இன்று வந்தவுடனேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்பாகவும், அந்த அமைப்பு நடத்தவுள்ள பேரணி தொடர்பாகவும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது நேற்று முளைத்த அமைப்பு அல்ல. 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கின்ற ஒரு அமைப்பு. இந்த பெருமைக்கு காரணமான ஒரு உன்னதமான அமைப்பு ஆர்எஸ்எஸ். அதன் பெருமைகளை யார் நினைத்தாலும் குலைக்க முடியாது. எத்தனையோ முறை இந்த அமைப்பை சிதைக்க முனைத்திருக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் மீண்டு வந்து, மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக நேருவே அதனை தடை செய்ய முயன்றார், ஆனால் அதிலிருந்து மீண்ட இயக்கம்தான் இந்த அமைப்பு. எனவே யாராலும் இந்த அமைப்பை எதுவும் செய்துவிட முடியாது. நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள். எனவே சட்டம் என்ன உரிமையைக் கொடுத்துள்ளதோ அதன்படியே எங்களின் செயல்பாடுகள் இருக்கும்" என்றார். 


 

Next Story

ஆவணத்தில் திடீர் சந்தேகம்; தனி அறைக்கு கூட்டிச்சென்று டவுட் கேட்ட ராமதாஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Sudden doubt in the document; Ramdas went to a private room and asked for a dowt

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமக-பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில நிமிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை படித்துப் பார்க்கையில், அதில் அவருக்கு சில சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து விளக்கம் கேட்க பாஜக தலைவரை தனி அறைக்கு பாமக ராமதாஸ் கூட்டிச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.