Skip to main content

"விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்... ஆனால், விவசாய சட்டத்தை பற்றி பேசக் கூடாது என்கிறார்கள்.." - முத்தரசன் தாக்கு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

xj

 

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின்போது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பதற்றம் குறையாமல் இருந்துவருகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குறிப்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் என யாரும் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் வைத்துவரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் முத்தரசனிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள் என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கிடையே லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதே விவசாயிகள் அனைவரும் எதிர்த்தனர். எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முழு விவாதம் செய்து, அதன்பிறகே நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்தச் சட்டம் தொடர்பாக எந்த ஒரு விவாதத்தையும் நடத்தாமல் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி இதை நிறைவேற்றியுள்ளனர். அப்படியிருந்தும் இந்த சட்டத்தில் கையெழுத்திடாதீர்கள் என்று எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்கள். இருந்தாலும் அதில் அவர் கையெழுத்துப்போட்டார். தற்போது மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அது சட்டமாகிவிட்டது. 

 

விவசாயிகளும் அவர்களால் முடிந்த அளவு எதிர்த்து பார்த்தார்கள். இந்தப் போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டிவிட்டதாக மத்திய அரசு முதலில் கூறியது. பிறகு அகாலிதள தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தது. எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதால், அதனை தற்போது அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறுகிறீர்கள். விவசாயிகள் அவர்களிடம் 11 சுற்று பேசினார்கள், அது ஏன் தோல்வி அடைந்தது. ஏனென்றால் விவசாய சட்டத்தை தவிர விவசாயிகளை வேறு விஷயங்கள் பற்றி பேச சொல்கிறார்கள், இதற்கு பேர் பேச்சுவர்த்தையா? பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றலாம் என்று நினைத்து அவர்கள்தான் ஏமாந்து போகப்போகிறார்கள். 

 

இன்றைக்கு அமைதியான முறையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் உ.பி.யில் போராடினார்கள். அங்கே இவர்கள் வன்முறை வெறியாட்டத்தை ஆடியுள்ளார்கள். சுதந்திரத்துக்கு முன்பு ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்கள், அடைக்கப்பட்ட இடத்தில் இந்தியர்கள் மீது மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை ஆடினார்கள். அந்த சம்பவத்துக்கு சிறிதும் குறைவில்லாதது இந்த சம்பவம். அமைதியாக சென்றுகொண்டிருப்பவர்களை வேண்டுமென்றே இவர்கள் தாக்கியுள்ளனர். சட்டத்தில் எங்கேயாவது அமைதியான முறையில் போராடக்கூடாது என்று கூறியிருக்கிறதா? காட்டாட்சி தர்பார் நடத்தலாம் என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் மற்ற கட்சிகள் இதனை அனுமதிக்காது. 

 

 

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.