Skip to main content

என் உயிருக்கு ஆபத்து உள்ளது...எங்கே போனீர்கள்...முகிலனின் 140 நாட்கள் அதிர்ச்சி சம்பவம்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்கிறார்கள்.

திருப்பதியில் ஜூலை 6-ம் தேதி காலை மன்னார்குடியிலிருந்து வந்த ரயில் எஞ்சின் முன்பு, "அமைக்காதே அணுக்கழிவு மையத்தை கூடன்குளத்தில் அமைக்காதே', "கர்நாடகத்திற்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதி', "கைது செய் ஸ்டெர்லைட் ஆலை அதிபரை கைது செய்' என பலநாள் மழிக்கப்படாத தாடியுடன் ஒருவர் தமிழில் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் காணாமல் போன -கடத்தப்பட்ட முகிலன் என்பதை அவரது பள்ளிகால நண்பர் சண்முகம் என்பவர் பார்த்துவிட்டு அதை வீடியோ வில் பதிவு செய்து முகிலனின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். ரயில் முன்பு கோஷம் போட்டுக் கொண்டிருந்த முகிலனை திருப்பதி ரயில்வே போலீசார் கைது செய்தனர். முகிலன் திருப்பதியில் ரயில்வே போலீசாரிடம் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியானதும், "அவரை தேடிக் கண்டுபிடித்து விட்டோம்' என ஏற்கனவே இரண்டுமுறை சென்னை உயர்நீதி மன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்திருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை சென்னைக்கு கொண்டு வந்தனர்.

 

mikilan



தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு என்பது போலீஸ் அதிகாரி களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை'' என கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை முகிலன் வெளியிட்டுவிட்டு, "என் உயிருக்கு ஆபத்து உள்ளது'' என்றார். அன்றிரவு ரயில் பயணத்தின் போது காணாமல் போனார். "எங்கே போனீர்கள்' என திரும்பி வந்திருந்த முகிலனிடம் கேட்டோம். ""நான் கடத்தப்பட்டேன். என்னை நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திக் கொண்டு போய் சித்ரவதை செய்தார்கள். ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்தார்கள். நான்கு பேரில் ஒருவர் மட்டுமே என்னிடம் வந்து பேசுவார். அவர் தவறான விபரங்களைத்தான் என்னிடம் கூறுவார். தமிழில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றை என்னிடம் காட்டினார். அதில் நான் காணாமல் போன துயரத்தினால் எனது மனைவியும் மகனும் இறந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.

 

mukilan



திருப்பதியில் ரயில்வே போலீசார்தான் என் மனைவியும் மகனும் நலமுடன் இருக்கிறார்கள் என்கிற உண்மையை கூறினார்கள். அவர்களது கஸ்டடியில் என்னை வைத்து ஏகப்பட்ட ஊசிகளை உடலில் செலுத்தினார்கள். பனிரெண்டு நாட் களுக்கு முன்பு என்னை நாய் கடித்தது. எனக்கு நெஞ்சுவலி வந்தது. எதற்கும் நான் சிகிச்சை பெறவில்லை. கோவையில் சுற்றுச்சூழல் போராளி ரமேஷின் மனைவியை கொன்றார்கள். குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் 2000 பேர் கொல்லப் பட்டதை வெளிப்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பழைய வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினார்கள். இதுதான் போலீஸ். இப்பொழுது என் மீது ஒரு பாலியல் வழக்கை புனைந்துள்ளனர். இதையெல்லாம் சட்டரீதியாக சந்திப்பேன்'' என வேகம் குறையாமல் பேசினார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகிலனை அவரது நீண்ட கால நண்பரும் நெடுவாசல் போராட்ட தளபதியுமான குணசீலன் என்பவர் சந்தித்துப் பேசினார். குணசீலனைத் தொடர்ந்து முகிலனின் மனைவி பூங்கொடி சந்தித்து பேசினார். அவர்கள் முகிலன் பற்றி நண்பர்களிடம் விளக்கினார்கள்.

 

mukilan



முகிலனை அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து கடுமையாக சித்ரவதை செய்துள்ளார்கள். அதனால் முகிலனின் மனநிலை சிறிதளவு பாதிப்பு அடைந்துள்ளது. ஈஞதடஞதஆக பஞதபமதஊ எனப்படும் இந்த சித்ரவதை மிகக் கொடுமை யானது. தனிமையான அறையில் அடைக்கப்படும் நபர்கள் எந்தவிதத்திலும் வெளியுலக தொடர்பு கொள்ள முடியாது. யாருடனும் பேச முடியாது. சில நேரங்களில் சூரிய வெளிச்சத்தைக் கூட பார்க்க முடியாது. அடி, உதை, சுகாதாரமற்ற, கொசுக்கள் மொய்க்கும் கழிவுகள் ஆகியவற்றுக்கிடையே வாழ வைப்பார்கள். இந்த விதமான கொடுமையை முகிலன் ஏற்கனவே அனுபவித்துள்ளார். ஒருமுறை சிறையில் இதுபோன்ற சித்ரவதையை முகிலனுக்குக் கொடுத்தார்கள். (அதை நக்கீரனிலும் சிறைப் பேட்டியாக தெரிவித்திருந்தார்). கூடங்குளம் ஆற்றுமணல் கொள்ளை, மணல் கொள்ளை இவற்றுக்கெதிராக முகிலன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளை தனித்தனியாக சந்திக்க முடியாது. அல்லது "நான் கைதாகிறேன்', "என்னை சிறையில் வைத்து வழக்குகளை முடியுங்கள்' என முகிலன் கைதானார். அவரை தனிமைச் சிறையில் சூரிய வெளிச்சம் புகாத அறையில் மலநாற்றத்தையும் கொசுக்கடியையும் அனுபவிக்க வைத்தார்கள். அதை நீதிமன்றத்தில் புகாராக தெரிவித்தார் முகிலன். அதைத் தொடர்ந்து அவர் விடுதலை ஆனார்.


அவரை மறுபடியும் சிறையிலடைத்தால் அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்பதால் அவரை, ஸ்டெர்லைட் "மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற வீடியோவை வெளியிட்டதும் கடத்தி சென்றார் கள். அந்த வீடியோவில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியது. சைலேஷ்குமார் யாதவ் என்கிற ஐ.ஜி.யும் கபில் சிரோத்கர் என்கிற டி.ஐ.ஜி.யும்தான் அதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு என கூறியிருந்தார். (இதை துப்பாக்கிச் சூட்டின் போதே ஆதாரங்களுடன் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது). காவல்துறை அதிகாரிகளின் செயல்கள் தொடர் பான ஆதாரங்கள் முகிலனுக்கு எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளவே முகிலனை கடத்தினார்கள். அவர் கடத்தப்பட்ட செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவரவே அவரை கொன்றால் ஆபத்து என முடிவு செய்த போலீசார் முகிலனுடன் நெருக்கமாக போராட்டங்களில் செயல்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டனர். அவர், "நெடுவாசல் போராட்டத்தின் போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெடுவாசலில் உள்ள ஒரு தங்குமிடத்தில் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்' என முகிலன் மீது புகாரை தெரிவித்தார். இது முகிலனின் பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்மணி தன் புகாரில் உறுதியாக இருந்தார். ஆனால், "நெடுவாசலில் தங்கும் விடுதிகளே இல்லை. எனது வீட்டில்தான் முகிலன் தங்கினார். வீட்டு வராண்டாவில் படுத்து கிடந்த முகிலன் எப்படி பாலியல் ரீதியாக தவறாக நடந்திருக்க முடியும்' என நெல்சன் லெனின் என்பவர் முகநூலில் பதிவிட்டார். உடனே முகிலன் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. திலகம் "அந்தப் பதிவு சட்டவிரோதம்' என நீக்க வைத்தார்.


செந்தமிழன் என்கிற நக்சல் தோழரை சிறையிலேயே சித்ரவதை செய்து, மனநிலை பிறழச் செய்து வெளியே மனநோயாளியாக்கி அனுப்பி யிருக்கிறார்கள். அதே போல் முகிலனை ஸ்டெர்லைட், வி.வி.மினரல் நிறுவனத்தார் மற்றும் தமிழ்நாடெங்கும் மணல் திருடும் வி.ஐ.பி.க்கள் என அனைவரும் சேர்ந்து சித்ரவதை செய்து மன நோயாளியாக்க முயற்சி செய்துள்ளனர். இரண்டு முறை கோர்ட்டில் "முகிலன் இருக்குமிடத்தை கண்டு பிடித்து விட்டோம்' என சொன்ன சி.பி.சி.ஐ.டி. போலீ சார் அந்த வழக்கு விசா ரணைக்கு வரும் நிலையில் தான், கடந்த 6-ம் தேதி முகிலனை கைது செய்து கோர்ட் கண்டனத்தில் இருந்து தப்பியிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, "அதெல்லாம் இல்லை. முகிலனை வெளியே வரவைத்தது அவரது குருவான கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷின் மனைவியின் மரணம்தான். உளவியல் தாக்குதலால் முகிலன் அவராகத்தான் தலைமறைவாக இருந்தார். அவர் தலைமறைவாக இருக்கும் இடம் கோவை ரமேஷுக்கு நெருக்கமானவரும் கம்ப்யூட்டர் வல்லுநருமான இன்னொரு ரமேஷ், டாக்டர் புகழேந்தி ஆகியோருக்கு நன்றாக தெரியும். முகிலன் தலைமறைவாக இருந்த காலகட்டத்திலோ அவர் மீண்டும் வெளிப்பட்ட 6-ம் தேதி வரை இவர்கள் எதையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை. போராட்ட களங்களில் நெருக்க மாக பழகிய பெண், முகிலன் மீது பாலியல் புகார் சொல்லப் போவதாக தெரிவித்து வந்தார். இது முகிலனை பாதித்தது. தனது பொதுவாழ்க்கைப் போராட்டங்கள் கேள்விக்குள்ளாகும் என்ற பயத்தில் முகிலன் தலைமறைவானார். அவருக்கு அவரது தோழர்கள் உதவி செய்தனர்.

கோவை ரமேஷின் மனைவி இறந்தபிறகு அந்த உதவிகள் நின்று போயின. அதனால் முகிலன் வெளியே வர வேண்டியதாயிற்று. வெளியே வந்தவுடன் தன்னை கடத்தினார்கள் எனச் சொல்கிறார். முகிலன் மீது புகார் சொல்லியுள்ள பெண்மணியின் பெற்றோர் "என் பெண்ணை போராட்டக்காரர்கள் கடத்தி விட்டனர்' என புகார் சொன்னபோது, "அப்படி இல்லை' என மறுத்தவர்தான் அந்தப் பெண்மணி. அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தனது மனைவியும் மகனும் இறந்து போனதாக போலீசார் பொய்த் தகவல் சொன்னார்கள் என சொல்லும் முகிலன், ரமேஷின் மனைவி இறந்ததை பற்றி மிகச் சரியாக பேசுகிறார். மகனும் மனைவியும் உயிரோடிருக்கிறார் கள் என தெரிந்து கொள்ள முடியாத முகிலனுக்கு ரமேஷின் மனைவி இறந்தது மட்டும் எப்படி தெரிந்தது. நாய் கடித்து 12 நாளாகிவிட்டது எனக் கூறும் முகிலன், நாய் கடிக்கும் போது வெளியேதான் சுற்றித் திரிந்திருக்கிறார். இதையெல் லாம்தான் நாங்கள் கோர்ட்டில் தெரிவித்தோம்'' என்கிறார்கள்.

முகிலனின் போராட்ட செயல்பாடுகளும் அவர் மீது பெண்மணி கூறியுள்ள புகாரும் விசாரணையில் உள்ளன. முகிலனின் மனைவி பூங்கொடி தன் கணவன் மீது நம்பிக்கை தெரிவிக்கிறார். பெண்மணி கடுமையாக புகார் கூறுகிறார். நீதியின் தீர்ப்பு விரைவில் தெரியும். போராளிகள் மீது பாலியல் புகார் கூறுவதுடன் அவர்களை சித்ரவதை செய்வதும் வழக்கமான ஒன்றுதான் எனக் கூறும் சமூக ஆர்வலர் பியூஷ் மனூஸ், "மக்களின் அன்பே அவர்களுக்கு பாதுகாப்பு' என்கிறார். அதிகாரத்தின் கரங்களோ, உண்மையான போராளிகளின் தனிப்பட்ட சிக்கல்களை புகாராக்கி, மொத்த போராட்ட உணர்வையும் சிதைக்கும் நாடகத்தை அரங்கேற்றுகிறது.
 

 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.