Skip to main content

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி

Published on 12/02/2018 | Edited on 13/02/2018

 

elec

பாஜக அரசுக்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம் என்பது கடந்த நான்கு ஆண்டுகால செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரியும்.

ஆம், வருகிற மே 15 தேதியுடன் மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த நேரத்தில் அவரும் அவருடைய அரசும் கடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மயக்கம்தான் வருகிறது.

உலகை மூன்றுமுறை சுற்றிவருகிற தூரத்துக்கு அவர் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்திருக்கின்றன. பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு வெளிநாட்டு பயணத்தை தந்திராமாக பயன்படுத்தும் முதல் பிரதமர் இவர் என்று தெரிந்துவிட்டது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்காத, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு பதில் அளிக்காத பிரதமராக இவர் இருந்திருக்கிறார்.

தான் பேசிய பிறகு யாரும் பேசாத சமயத்தில் மட்டுமே பேசுவதும், பேசும்போது யாரும் குறுக்கீடு செய்ய முடியாது என்ற உறுதி இருந்தால்தான் இவர் வாயைத் திறப்பார். அதுவும் கைகளை ஆட்டிக்கொண்டு வித்தாரம் பேசுவார்.

ஆனால், அவர் எப்போதும் தற்பெருமை பேசுவதே இல்லை. அதாவது, தற்பெருமை பேசுவதற்கு இவரிடம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான, தனக்கு முன் பொறுப்பில் இருந்தவர்களின் குறைகளை மட்டுமே பேசி நாட்களைக் கடத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

இதுவரை இந்தியாவுக்கு பிரதமராக பொறுப்பேற்ற அனைவரும் இருக்கிற இந்தியாவை பொலிவேற்ற தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். ஆனால், இவரோ, இருக்கிற இந்தியாவை சேதப்படுத்தினாலும், இல்லாத பல இந்தியாக்களை பெற்றுப் போடுவதில் கவனமாக இருந்தார்.

அப்படி இவர் பெற்றுப்போட்ட தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிடல் இந்தியா போன்றவற்றின் வளர்ச்சி பாவகரமாய் கிடக்கின்றன. இவை போக, அவர் அறிவித்த பல திட்டங்கள் மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

இவருடைய அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தும் முறையை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் பெட்ரோல்விலை கண்ணுக்குத் தெரியாமல் பைசா பைசாவாக ஏற்றப்பட்டு இப்போது லிட்டருக்கு 75 ரூபாய் ஆகிவிட்டது.

எரிவாயு சிலிண்டர் மானியத்தை நேரடியாக தருவதாகச் சொல்லிவிட்டு, இப்போது சிலிண்டர் விலையையும் மாதாமாதம் ஏற்றத் தொடங்கிவிட்டது.

கார்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு செயல்படும் மோடி அரசு, விவசாயிகளை கோவணத்துடன் டெல்லி வீதியில் அலையவிட்டதுதான் மிச்சம்.

மோடி 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது எனக்கொரு 60 மாதங்கள் வாய்ப்புத் தாருங்கள் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுகிறேன் என்று ஆவேசமாக பேசினார். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். அதன்படி இந்நேரம் 4 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வேலையற்றோர் எண்ணிக்கையைத்தான் கோடிக்கணக்கில் அதிகமாக்கி இருக்கிறார்.

நீங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் பற்றி கூற முடியுமா என்றால், பக்கோடா விற்பதுகூட வேலை வாய்ப்புதான் என்று கூறுகிறார். இப்போது அவரை இளைஞர்கள் பகோடா பிரதமராக்கி விட்டார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 9 சதவீதம் ஆக்குவேன் என்றார். மன்மோகன்சிங் காலத்தில் எட்டப்பட்டிருந்த 8 சதவீத வளர்ச்சியை 6.8 சதவீதமாக குறைத்ததுதான் இவருடைய இதுவரையான சாதனையாக இருக்கிறது. கேட்டால், 7.5 சதவீதம் ஆக்கிவிடுவோம் என்று சால்ஜாப்பு சொல்கிறார்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்தியாவை பாகிஸ்தானுக்கும் பின்னால் 62 ஆவது இடத்துக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்.

இவர்தான் இப்படி இவர் பேச்சை நம்பிப் பேசிய மின்துறை அமைச்சர் ரொம்பப் பாவம்.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புக் கொடுத்துவிடுவோம் என்றார். அவர் சொன்னதில் தமிழகம் ஏற்கெனவே அந்த இலக்கை எட்டிவிட்டதால், மிச்சமுள்ள இந்தியா மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாவம், அவர் அடுத்தடுத்த ஆண்டுகளும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுத்தார்கள் என்பதையும் சொல்லமாட்டேன் என்கிறார். யாரும் அவரிடம் குறிப்பிட்டு கேட்கவும் மாட்டேன் என்கிறார்கள்.

அதுபோலத்தான், 2018 மே மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்றார். அடுத்து, 2019 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்றார். இப்போது என்னடாவென்றால், 2022 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்கிறார்.

அதாவது, இன்னொரு 60 மாதம் கொடுங்கள் என்று கேட்கிற லெவலுக்கு வந்திருக்கிறார்கள். முதலில் 60 மாதங்களில் நீங்கள் சாதித்ததை சொல்லுங்கள், பிறகு பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளிலேயே வெற்றுப் பில்டப்புக்களால் உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம் சிதறத் தொடங்கிவிட்டது. அவர் கத்துகிற கூச்சல் காது கிழிகிறது. இன்னொரு ஐந்தாண்டு தாங்காதுடா சாமீ என்று மக்கள் தெறிக்கிறார்கள்!

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.