Skip to main content

சீனா மீது ஏன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தவில்லை?? -மன்சூர் அலிகான் கேள்வி!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
பரக


இந்திய வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலி கான் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

"பசியாலும், பட்டினியாலும் என்னுடைய தாய் தமிழ் உறவுகள் வாடி வதங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களைக்கூட காப்பற்ற வக்கற்ற அரசாக மத்திய மோடி சர்க்கார் இருந்து வருகின்றது. அவர்களை கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அரசியல் சாசனத்தை வகுத்து கொடுத்த அம்பேத்காரின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இந்தியாவில் கரோனா என்று ஒன்று உலவுகின்றது என்றால், அதற்கு முழு பொறுப்பும் பிரதமர் மோடியையே சாரும். ட்ரம்ப் போன்ற ஆட்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து பல்லாயிரக்கணக்கான கோடி செலவழித்தனால் இந்தியாவில் எதாவது பலன் கிடைத்ததா ஒன்றும் கிடைக்க போவதில்லை, கிடைத்தும் இல்லை. இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தி இருக்கக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 

 

பு

 

டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் என்று பல நோய்களை இந்த நாடு தாங்கி இருக்கின்றது. இதற்கு முன்னாள் ஆண்ட தலைவர்கள் யாரும் இப்படி ஊரடங்கை அறிவித்தது இல்லை. பத்துக்கும் மேற்பட்ட முறை பிரதமர் மோடி அவர்கள் சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார். அந்த பயணத்தின் மூலம் குஜராத் முதலாளிகளுக்கு புரோக்கர் வேலைகளைதான் செய்துகொண்டு இருக்கின்றார். நமது வீரர்களை கொடூரமாக கொன்ற சீன நாட்டின் பெயரைகூட ஏன் பிரதமர் உச்சரிக்க மறுக்கின்றார். ஏன் பொருளாதார தடைகளை விதிக்கவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை ஏன் நடத்த தயங்குகிறார். மதவெறியர்களால் அடிப்பட்டு கீழே கிடப்பவர்களிடம் வீரத்தை காட்ட காவல்துறையை பயன்படுத்த மட்டும் அவர்களுக்கு தெரியும். காஷ்மீரில் 370ஐ பிடுங்கி மக்களை அடக்கி ஒடுக்க பார்த்தார்கள். மக்கள் தலைவர்களை சிறையில் தள்ள பார்த்தார்கள். தற்போது எல்லையில் 60 கிலோ மீட்டருக்கும் மேல் கோட்டை விட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் அவர்கள் மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.