Skip to main content

பூங்குன்றன் சொன்ன கொடநாடு ரகசியம்! எடப்பாடியிடமிருந்து கைநழுவும் அ.தி.மு.க.!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Kodanadu secret told by Poonkunran! AIADMK loses hand from Edappadi!

 

கெடநாடு வழக்கு அ.தி.மு.க.வில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஜெ. இறந்த பிறகு அ.தி.மு.க. அரசிலும் கட்சியிலும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்த எடப்பாடி, தன்னைச் சுற்றியே கட்சியினரை வலம்வர வைத்தார். ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது.

 

தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்தவர் துணை அமைப்பாளர் வைத்திலிங்கம். அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இவரை ரவுண்டு கட்டி பேசவிடாமல் செய்தார்கள். அவரது தஞ்சை மண்டலத்தில் "எடப்பாடிக்கு நெருக்கமான வேலுமணி, கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார்' என புகார் சொல்லி பேச ஆரம்பித்த வைத்திலிங்கத்தை... எடப்பாடிக்கு நெருக்கமான மற்றொரு அமைச்சரான சி.வி. சண்முகம் ஒருமையில் பேசினார். "வைத்திலிங்கம் ஓ.பி.எஸ்.சுடன் ஜோடி சேர்ந்து சசிகலா ஆதரவு நிலை எடுத்துப் பேசுகிறார்' என்பது எடப்பாடியின் குற்றச்சாட்டு. அதைத்தான் மோசமான வார்த்தைகளில் சி.வி.சண்முகம் எதிரொலித்தார். அவருடன் வேலுமணியும் இணைந்துகொள்ள... டென்ஷனான வைத்திலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவரை மற்றவர்கள் சமாதானப் படுத்தினார்கள்.

 

சி.வி.சண்முகத்தின் சத்தம் கடந்த சில நாட்களாக வெளிவரவில்லை. அதேநேரத்தில் தஞ்சை மண்டலத்தில் வைத்திலிங்கத்தின் உட்கட்சித் தேர்தலில் பெரும் வெற்றிபெற்றார். வைத்திலிங்கத்தின் வெற்றியை சசி அணியின் வெற்றியாகவே அ.தி.மு.க.வினர் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் வேலுமணியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையான நேரம் தலைகுனிந்து வேலுமணி அமர்ந்திருக்கிறார். அதேநேரம் ஓ.பி.எஸ். சட்டமன்றத்தில் பின்னி யெடுக்கிறார். சமீபத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதி உதவி என முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியபோது, தமிழக அரசின் சார்பாக மத்திய அரசுக்கு எதிராக பேசினார். அதைப் பாராட்டிப் பேசிய ஓ.பி.எஸ்., "நான் எனது பங்காக ஐம்பது லட்ச ரூபாய் தருகிறேன்'' என அறிவித்தார். எடப்பாடியும் அருகில்தான் அமர்ந்திருந்தார். ஓ.பி.எஸ். அறிவித்ததும் எடப்பாடி முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், கட்சியின் பொருளாளர் பதவிகள் ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கிறது. ஓ.பி.எஸ். நிதி தருகிறார் என்றால், ஸ்டாலினின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நகர்வுகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு தருகிறது என்றுதானே அர்த்தம்.

 

Kodanadu secret told by Poonkunran! AIADMK loses hand from Edappadi!

 

அ.தி.மு.க. சார்பில், ஸ்டாலினின் இலங்கை தமிழர் ஆதரவு முயற்சிக்கு ஆதரவு தருவது, அரசுக்கு நிதி தருவது என்றால், எடப்பாடி உட்பட கட்சிக்காரர்களிடம் கேட்க வேண்டும், அதை பற்றி விவாதிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வா என பேச்சு வரும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், "நான் எனது நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் தருகிறேன்' என ஓ.பி.எஸ். சொன்னதும் அதையடுத்து வி.சி.க ஆளூர் ஷாநவாஸ், சி.பி.ஐ. மாரிமுத்து மட்டுமல்ல பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனும் தனது சம்பளத்தில் ஒரு மாத நிதி தருவதாக அறிவித்தார்கள். உடனே முதல்வர் ஸ்டாலின் ஓ.பி.எஸ்.ஸை பாராட்டினார்.


"எடப்பாடியால் ஒன்றும் பேச முடியவில்லை' என சுட்டிக்காட்டும் அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க.வில் எடப்பாடியின் அதிகார வலிமை குறைந்து வருகிறது. சமீபத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எடப்பாடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்காக சட்டமன்ற கூட்டத் தொடரில்கூட கலந்துகொள்ளாமல் சேலத்திலேயே எடப்பாடி தங்கியிருந்தார். இந்த முறை எடப்பாடியைத் தோற்கடிக்க சசிகலா அணியினர் வேலை செய்வார்கள் என தடுமாறி, எடப்பாடி அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட இருந்தவர்களை சமாதானப்படுத்தினார். அவர் மா.செ. தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பதவியை தன்னுடைய நிழலாக இருந்த இளங்கோவனுக்கு கொடுத்தார். எடப்பாடி போட்டியாக ஜெ. காலத்தில் இருந்தவர்தான் இந்த இளங்கோவன். எடப்பாடிக்கு பதில் மா.செ. பதவி அவரைத் தேடி வந்தபோது அவர் எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்தார். அப்படி மா.செ. பதவியை ஜெ.வும் சசியும் இளங்கோவனுக்கு வழங்கக் காரணம், இளங்கோவன் மனைவி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் ஜெ.வுக்கு நெருக்கமான நபராக இளங்கோவன் விளங்கினார்.

 

Kodanadu secret told by Poonkunran! AIADMK loses hand from Edappadi!

 

அப்படி அவருக்கு வந்த மா.செ. பதவியை எடப்பாடிக்கு விட்டுக்கொடுத்து எடப்பாடிக்கு நெருக்கமானார். அத்துடன் எடப்பாடி, சசிகலா வகையறாக்களுக்கு பாலமாக இருந்தார். அந்த பாலத்தின் வழியாகத்தான் எடப்பாடி முதல்வர் பதவியை அடைந்தார். ஆனால் இளங்கோவனுக்கு வேறு எந்த பதவியும் கொடுக்காமல் நிழல் வேலைகளுக்கு மட்டுமே எடப்பாடி பயன்படுத்தி வந்தார். அந்த நிழல் வேலைகளில் ஒன்றுதான் கொடநாடு கொள்ளை. அதில் இளங்கோவன் சிக்கிக்கொண்டார். கொடநாடு விவகாரத்தில் இளங்கோவனை போலீசார் நெருங்கி வருகிறார்கள் இளங்கோவன் வீடு அமைந்துள்ள புத்திரகவுண்டன்பாளையம் தெற்கு பக்கத்தில் உள்ள சேலம் ஆத்தூரில், கொடநாட்டில் கொள்ளையடிப்பதில் முக்கிய ஆளாக இருந்த கனகராஜ் படுகொலை செய்யப்பட்டார். கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை இளங்கோவன்தான் கனகராஜிடம் இருந்து பெற்று எடப்பாடிக்கு கொடுத்தார். கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் இளங்கோவன் வசம் இருக்கிறது என கொடநாடு விவகாரத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால், போலீசாரின் சந்தேகப் பார்வை இளங்கோவனின் மேல் எழுந்துள்ளது.

 

அதனால் எந்நேரமும் போலீசார் இளங்கோவன் மேல் கை வைப்பார்கள் என்கிற சூழல் எழுந்துள்ளது. நிச்சயம் கைது என்கிற கத்தி தொங்கும் இளங்கோவனுக்கு, தனது மா.செ. பதவியை விட்டுக் கொடுத்து, வழக்குகள் வந்தாலும் அ.தி.மு.க. துணை நிற்கும் என்கிற மெசேஜை எடப்பாடி உருவாக்கியிருக்கிறார். இன்று மா.செ. பதவியை விட்டுக்கொடுத்த எடப்பாடி நாளை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் விட்டுக்கொடுக்க நேரிடும். அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிரான வேலைகள் அவ்வளவு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.


வைத்திலிங்கம் தலைமையில் தென் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் ஒன்றிணைந்து எடப்பாடிக்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். எடப்பாடி, இளங்கோவனுக்கு மா.செ. பதவியை விட்டுக்கொடுத்ததை எதிர்த்து சேலம் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.


சசிகலா தனது பங்கிற்கு எடப்பாடி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார். அதனால் எடப்பாடி, சசி தரப்பிற்கு இளங்கோவன் மூலம் சமரச தூது அனுப்பினார். இளவரசியின் மகன் விவேக்கிற்கு போன் போட்டு சமரசம் பேசினார். சசிகலா சிறையில் இருக்கும் போதும் எடப்பாடி சார்பில் இளங்கோவன் சசியிடம் டிடிவி தினகரனை பற்றி புகார் சொல்லி சமரசம் பேசினார். ஆனால் தற்போது இளங்கோவனின் சமரசத்தை சசிகலா ஏற்கத் தயாராக இல்லை என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.

 

Kodanadu secret told by Poonkunran! AIADMK loses hand from Edappadi!

 

கொடநாடு விசாரணைக்கு போன சஜீவன், அவரது தம்பி சிபி ஆகியோர் ஒரு பயம் கலந்த முகத்துடன்தான் உலா வருகிறார்கள். அவர்களைத் தற்போது விட்டுவிட்டாலும் மறுபடியும் எந்நேரமும் கைது செய்வார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. சிபியின் கார் கொடநாடு கொள்ளை நடக்கும்போது அந்தப் பகுதியில் இருந்ததாக அவரது செல்போன் டவர் லொகேஷனை அடுத்து போலீஸார் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதேபோல், போயஸ் கார்டனில் ஜெ. காலத்தில் செல்வாக்காக இருந்த பூங்குன்றனிடம் கொடநாடு தொடர்பாக பல ரகசியங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள் போலீசார். இவர்களை விசாரிக்கும்போது பெரும்பாலும் தனியாகவே வாக்குமூலம் பெறுகிறார் ஐ.ஜி. சுதாகர். அவற்றை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.


கேள்வி-பதில் பாணியிலான விசாரணையைத் தாண்டி, ஒரு பெரிய ரகசியப் புதையலே கொடநாடு வழக்கில் இருக்கிறது. அந்த ரகசியப் புதையல் அ.தி.மு.க.வில் எடப்பாடியை தாக்கிவிடும். ஜெ. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி விசாரணைக்கு ஆஜரானால், அ.தி.மு.க.வில் எடப்பாடியின் கை பலவீனமாகிவிடும். எடப்பாடி ஆதரவுடன் தான் கொள்ளை நடந்தது என சசிகலா சொல்லத் தயாராக உள்ளார். அதற்காகத்தான் எடப்பாடி சமரச தூதை சசிக்கு அனுப்ப முயற்சிக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.