Skip to main content

அமைச்சரால் அமராவதி ஆற்றில் புதைக்கப்படும் கரூர் மாவட்ட அதிமுக!!! ர.ர.க்கள் வேதனை!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020


    

ddd

 

கடந்த சில வாரத்திற்கு முன்னர் கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ''கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க தான் ஜெயிக்கும், அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும், இதற்கு பந்தயம் கட்ட தயாரா? கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் ரெடியா?'' என்று கரூர் மாவட்ட திமுகவினர் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிமுக வட்டாரத்தினை அலற விட்டனர்.

 

பதிலுக்கு ''நாங்கள் ரெடி'' என்று அதிமுக வட்டாரத்திலும் சிலர் வீடியோ பதிவு செய்து வைரலாக வெளியிட்டாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு அடுத்ததாக போஸ்டர் யுத்தம், சுவர் விளம்பரம் என்று இரண்டு கட்சியினரும் மாறி மாறி கரூரில் அரசியல் நடத்த அது சமீபத்தில் திமுக தரப்பில் ஒரு கொலையில் முடியும் அளவுக்கு போனது.    

  

ddd

 

நாம் இது சம்பந்தமாக மேலும் விசாரித்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுகவில் இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார். சசிகலா ரூட் எடுத்து அவர் பண்ணிய அட்ராசிட்டி, மூத்த அமைச்சர்களையே முகம் சுழிக்க வைத்தது.

 

இந்த நிலையில் தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் செந்தில்பாலாஜியின் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி சொல்ல, செந்தில் பாலாஜிக்கு செக் வைத்து விஜய்பாஸ்கரை களம் இறக்கினார் ஜெயலலிதா. சரி இவராவது ஒழுங்கா இருப்பார் என்றால் அது தான் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவரும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

 

ddd


சுவர் விளம்பரங்களில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே, அதாவது காலிங்கராயரே, வல்லவனே என்று பல வசனங்களை போட்டு விளம்பரப் படுத்துகிறார். அதேபோல் தான் வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளை பெயரில் நல்லத்திட்ட உதவிகள் வழங்கி அந்த அறக்கட்டளையை முன்னிறுத்தி செயல்படுகிறாரே தவிர கட்சியை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இதனால் கரூர் மாவட்ட அதிமுகவினரே இவர் மாவட்ட செயலாளராக இருந்தால் நான்கு தொகுதியையும் இழப்பதை தவிர வேறு வழியில்லை என்று தலைமைக்கு புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

 

அதேபோல் அம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட முன்னாள் இளம்பெண்கள் பாசறை மாநில துணை தலைவராக இருந்த செந்தில்நாதன், அரவக்குறிச்சி தொகுதியில் நின்று முன்பு செந்தில்பாலாஜியுடன் தோல்வியுற்றார். இந்த தடவை எப்படியும் அவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு சீட் கேட்பார். அப்படி கேட்டு ஜெயித்து விட்டால் எப்படியும் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார் என்று நினைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமையில் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி தற்சமயம் செந்தில்நாதன் வகித்து வந்த இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பதவியை பிடுங்க வைத்து விட்டார். இதே போல் தனக்கு எதிராக இருக்கும் பலரையும் பழிவாங்க காத்திருக்கிறார் என்கின்றனர் அம்மாவட்ட அதிமுகவினர். 

 

இப்படியே அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டால் கரூர் அமராவதி ஆற்றிலேயே அதிமுகவை புதைத்து விட்டு அவருடைய அறக்கட்டளையை அமோக வளர்ப்பார் என்ற தகவலே கரூர் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். 

 

மாவட்டத்தில் அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் குறித்து பரமத்தி ஒன்றியம் தென்னிலை கிளைச் செயலாளர் குழந்தைவேல் நம்மிடம், செந்தில்பாலாஜி இருந்தபோதும் கட்சிக்குள் அடித்துக்கொண்டார்கள். விஜயபாஸ்கர் இப்போது இருக்கும்போதும் அடித்துக்கொள்கிறார்கள். நாங்கள் ஓட்டு இவர்களுக்காக போடவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக போடுகிறோம். இவர்களை அடக்கும் ஆளுமை உள்ளவர்கள் வந்தால்தான் இந்தப் பிரச்சனைகள் தீரும் என்றார். 

 

 


 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.