Skip to main content

உலகநாயகனின் அடங்காப்பசி; கமல்ஹாசனால் தமிழ் சினிமா கண்ட தொழில்நுட்ப புதுமைகள்

Published on 23/05/2022 | Edited on 07/11/2022

 

kamalhaasan introduced new technology tamil cinema

 

கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டிற்கு மேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகை கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன். 6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 67 வயதை தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை  நடிப்பு எனும் சிறு வட்டத்திற்குள் மட்டும் சுருக்க முடியாது. நடிப்பை தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். கலைப்பசியை போலவே கமல்ஹாசன் கொண்டிருந்த இன்னொரு அடங்காப்பசி தொழில்நுட்பம் மீதானது. நாம் சமகாலத்தில்  கொண்டாடும், பயன்படுத்தும், புரிந்துகொள்ள திணறும் பல தொழில்நுட்பங்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்திய தீர்க்கதரிசி. அப்படிப்பட்ட இந்த ஆகச்சிறந்த கலைஞன் கமல்ஹாசன் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்திய சில தொழில்நுட்பங்களை பற்றி பார்ப்போம்...

 

விக்ரம் -  கம்பியூட்டரில் பாடல் பதிவு (computer song recording)

கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இந்திய சினிமாவில் முதல் முறையாக கம்யூட்டரில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

 

குணா - ஸ்டெடி கேமரா (steady camera)

கடந்த 1990 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் குணா. இந்த படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் காடுகள், மலைகளில் தான் படமாக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது, எல்லா இடத்திலும் கேமரா யூனிட்களை பயன்படுத்த முடியாது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், வேறு எவரின்  உதவியும் இல்லாமல் ஒளிப்பதிவாளர் மட்டுமே பயன்படுத்தும் ஸ்டெடி கேம் தமிழ் திரையுலகிற்கு இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

தேவர் மகன் - மேஜிக் சாப்ட்வேர் (movie magic software)

கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் - கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் மூவி மேஜிக் என்ற புதிய  சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார் கமல். இந்த சாப்ட்வேரை பயன்படுத்திதான் தேவர் மகன் படத்திற்கு முழு திரைக்கதையும் எழுதப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக சாஃப்ட்வேரை பயன்படுத்தி திரைக்கதை எழுதப்பட்ட முதல் படம் தேவர் மகன்.

 

குருதிப்புனல் - டால்பி அட்மோஸ் Dolby atmos (sound system audio)

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தில் நடிகர் கமல்ஹாசன் டால்பி அட்மோஸ் (Dolby atmos) என்ற சவுண்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் திரைப்படத்தின் ஆடியோவை தெளிவாக கேட்க முடியும். தமிழ் சினிமாவில் டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகபடுத்தியதும் கமலே.

 

மகாநதி- ஆவிட் எடிட்டிங் சாப்ட்வேர் (avid editing software)

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆவிட் என்ற எடிட்டிங் சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருப்பார். இதற்கு முன்பு பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெட்டி ஒட்டி தான் படத்தை எடிட் செய்து வந்தனர். ஆனால் 'மகாநதி' படம் ஆவிட் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்பட்டது . அதன் பிறகு வந்த படங்கள் தொடங்கி தற்போது வரை இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி படம் அல்லது வீடியோக்களை எடிட் செய்து வருகின்றனர் நம்மவர்கள்.

 

மும்பை எக்ஸ்பிரஸ் - டிஜிட்டல்  கேமரா (digital camera )

2005 ஆம் ஆண்டு வெளியான 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தில் முதல் முறையாக டிஜிட்டல் கேமரா (Red camera) பயன்படுத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்த புதிய ரக கேமராவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்திய  சினிமாவிலேயே முதல் டிஜிட்டல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

 

விஸ்வரூபம் - ஆரோ 3டி (auro 3d)

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் ஆரோ 3டி (auro 3d) சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியான இரண்டாவது திரைப்படம் விஸ்வரூபம். இந்த சவுண்ட் சிஸ்டத்தின் மூலம் தெளிவான மற்றும் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் பொழுது ஒரு புதிய கேட்டல் அனுபவத்தை கொடுக்க முடியும். இந்த சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் ரெட் டைல்ஸ் (Red tails)  என்ற ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.