![kalaingar](http://image.nakkheeran.in/cdn/farfuture/SCCgd9_a4BRDBNJtXkpcxIj8sDZ6NjwSQ1LX9yPaB9k/1533347656/sites/default/files/inline-images/kalaingar_6.jpg)
கலைஞரைப்போல சரியான நேரத்தில் நகைச்சுவை நயம்பட பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. தற்போது வயது மூப்பினால் வந்த உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக வந்த வதந்திகளுக்கு அளவேயில்லை. இது இந்தமுறை மட்டும் நடப்பதுஅல்ல. தன்னை நோக்கிவந்த அனைத்து மரணக்குறிப்புகளுக்கும் மரணத்தை அளித்து மண்ணுக்குள் புதைத்தவர் அவர். ஒருமுறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தபோது நடந்த ஒரு ரூசிகர சம்பவம் நடந்ததாக கூறுவார்கள்.
மருத்துவமனையில் மருத்துவரும், கலைஞரும் பேசிக்கொள்கின்றனர்...
மருத்துவர்: மூச்சை நன்றாக இழுங்கள்.
கலைஞர்: ம்ம்ம்... (மூச்சை இழுக்கிறார்)
மருத்துவர்: மூச்சை விடுங்க
கலைஞர்: (சிரித்துக் கொண்டே கலைஞர் சொன்னார்) மூச்சை விடக்கூடாதுனுதான் டாக்டர் நான் ஹாஸ்பிடலுக்கே வந்திருக்கிறேன்...
மருத்துவர் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப்போனார்.