Skip to main content

தர்மயுத்தம் அல்ல! சிவமாகிய சித்தம்! -இது வேற ராஜேந்திரபாலாஜி!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

உடுத்தியிருந்த மஞ்சள் உடையும், மாலையும் கழுத்துமாக தரையில் அமர்ந்திருந்த விதமும், ‘என்ன இது? தர்மயுத்தத்துக்கு தயாராகிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?’ எனக் கேள்வி கேட்க வைத்தது. ‘அப்படியெல்லாம் கிடையாது, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது ஆன்மிக ஈடுபாடு..’ என்று பதில் கிடைத்தது.  

 

எடப்பாடி ஆதரவு ட்வீட் மூலம், அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்திவிட்டு, தனது தொகுதியான சிவகாசிக்கு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமுலாம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி அந்தக் கோவிலை நோக்கிச் சென்றார். வாசலில் அவர் கால் பதித்ததும், மங்கல இசையால் அந்தக் கோவிலே அதிர்ந்தது. அங்கிருந்த இருவர் முணுமுணுத்ததும் கேட்டது. 

 

“அந்தக் காலத்துல கோவில்களைக் கட்டினதெல்லாம் மன்னர்கள்தான். இங்கே என்னடான்னா.. மந்திரியா இருக்கிற ராஜேந்திரபாலாஜி.. கோடிகளைக் கொட்டி ஒரு கோவில் கட்டிருக்காரு. இன்ஜினியரிங் காலேஜ்.. மெடிக்கல் காலேஜ்னு கட்டிய முன்னாள்.. இந்நாள் மந்திரிங்க எத்தனையோ பேரு தமிழ்நாட்டுல இருக்காங்க. ஏன்னா.. கல்விச் சேவைங்கிறது இங்கே பணம் காய்க்கிற மரம். ஆனா.. ஊருக்கு ஒதுக்குப்புறமா.. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துல.. மந்திரி ஒருத்தர்  இம்புட்டு செலவழிச்சு  ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறது  ஆச்சரியமா இருக்கு.” என்று விழிகளை விரித்தனர். 

 

‘இதோ இந்த அமாவாசை.. இல்ல.. அடுத்த அமாவாசை.. நிச்சயமா கட்டம் கட்டிருவாங்க..’ என்று விருதுநகர் மாவட்டத்தில் சிலர் ராஜேந்திரபாலாஜி மீதான நடவடிக்கையை எதிர்பார்த்திருக்க, அவரோ, முழு முயற்சி எடுத்து, பழைய கோவில் ஒன்றை முற்றிலுமாக புனரமைத்து, வரும் 28-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தவிருக்கிறார்.  

 

சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூர் - மூளிப்பட்டியில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோவில். பல சமூகத்தினரும் வழிபாடு நடத்திவரும் இந்தக் கோவில், ராஜேந்திரபாலாஜிக்கு குலதெய்வக் கோவிலாம். பேட்டியோ, அறிக்கையோ,  ட்வீட்டோ, எதிலும் வம்பிழுப்பதில் வல்லவராக இருப்பதால், சர்ச்சையில் சிக்கிக்கொள்வது அவருக்கு வாடிக்கையாகிப் போனது.  இந்த அரசியல் அக்கப்போர், நிம்மதிக்கு வேட்டு வைக்கும்போதெல்லாம், மனதுக்கு நிறைவையும், அமைதியையும் தருவது ஆன்மிகம் மட்டுமே என்பதை அனுபவ ரீதியாக அவர் உணர்ந்திருக்கிறார். உண்மையைச் சொல்வதென்றால், ரஜினி பயணிப்பது போல்,  ஆன்மிகத் தேடலோடு,  இவரும் சத்தமில்லாமல் அடிக்கடி வடக்கே போய்விடுகிறார். 

 

மஹா கும்பாபிஷேகத்துக்கு முன், கோயில் மூலஸ்தானத்தில் கலசங்களை வைத்து, விக்ரகங்களுக்கு சொர்ணாபிஷேகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மூலஸ்தான ராஜகோபுரம், பெரிய அளவில் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சிவன் சிலை, முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள், அய்யனார் சிலை போன்றவற்றைக் காட்டி,  “முழுக்க முழுக்க ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோவில் இது..” என்றார் பரவசத்துடன்.   


 
‘கரோனா காலக்கட்டத்தில் கும்பாபிஷேகமா?’ என்று கேட்டபோது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும்.” என்றார். 

 

இறைவன் வாழுமிடம் என்றும், ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடமென்றும், கோவிலுக்கு விளக்கம் தரப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவை! ஆன்மிகம் என்பது தன்னை இயக்கும் சக்தியை தனக்குள்ளே பயணித்து உணர்வது! அப்படியென்றால், ‘ஆன்மிக அரசியல்’ என்பது என்னவாம்? தன்னை உணர்ந்து மக்கள் சேவையாற்றுவதே! ஆம்.. மக்கள் சேவையே மகேசன் சேவை! 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.