Skip to main content

நிலத்தை பறிக்க பிணத்தை புதைக்கும் ஜக்கி! நக்கீரன் புலனாய்வில் அதிர்ச்சி! 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

Jaggi Ashramam issue

 

சுபஸ்ரீயை அடுத்து ஈஷாவிலிருந்து மாயமாகியுள்ளார் கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா. சுபஸ்ரீ விஷயத்தில் அவரது கணவர் பழனிக்குமாரை புகாரளிக்க வைத்து, இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் சாதுர்யமாக தப்பித்த ஜக்கியின் ஈஷா நிர்வாகம்., இந்த முறை சுவாமி பவதுத்தா மாயமான விவகாரத்தில் தானே நேரடியாக ஆலந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்து நிம்மதியடைந்துள்ளது. அதை நோக்கி ‘நக்கீரன்’ பயணித்தபோது ஈஷாவில் கட்டப்பட்டு வரும் கால பைரவர் கோவிலில் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் (EXCLUSIVE) தகவல்கள் படங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளது.

 

"தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா (வயது 45, த.பெ. செல்லையா) என்பவர் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து தன்னார்வத் தொண்டு செய்துவந்தார். அவர் கடந்த 28.02.2023 அன்று இரவு சுமார் 07.30 மணிக்கு ஈஷா யோகா மையத்திலிருந்து புறப்பட்டு வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள பூண்டி கோவில் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றுள்ளார். எங்கள் மையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று மூன்று நாட்களாகியும் அவர் இன்னும் மையத்துக்கு திரும்பவில்லை. சொந்த ஊரிலிருக்கும் அவரது உறவினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் அங்கு வரவில்லை என்று தெரிவித்தார்கள். அவர் ஆட்டோ ரிக்‌ஷாவில் பூண்டி கோவில் வரை சென்றதால் அந்த பகுதியிலும், வெள்ளியங்கிரி மலைப் பகுதியிலும் நாங்கள் மையத்திலிருந்து ஆட்களை அனுப்பித் தேடினோம். அவர் கிடைக்கவில்லை. இருக்குமிடம் தெரியவில்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இங்கு தங்கி தன்னார்வலராக இருக்கிறார். எனவே அவரை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஈஷா அறக்கட்டளைக்காக பொறுப்பாளர் தினேஷ்ராஜா, ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரம், கோயம்புத்தூர்' என்கின்றது காவல் நிலைய முதல் தகவலறிக்கை.

 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமுத்திராபுரம் கிராமத்தினைச் சேர்ந்த குறும்பலாப்பேரியில் (குலசேகரப்பட்டி) சுவாமி பவதுத்தாவின் சகோதரர்கள் வசித்து வருகின்றனர். மாயமான கணேசன் தற்பொழுது வரை பூர்வீக இடத்திற்கு வரவில்லையென ஆலந்துறை காவல் நிலையத்திற்கு குறிப்பு எழுதியுள்ளது பாவூர்சத்திர போலீஸ்.

 

பேராசிரியர் காமராஜோ, "ஆதியோகியே சிவனாக ஈஷா யோகா மையத்தில் இருக்கிறார். அந்த ஆதியோகியே ஜக்கிதானே என திருட்டு ஜக்கியை ஏற்றுக்கொண்டு சாமியாராக ஆகியிருக்கின்றனர் பலர்! அந்த வகையில் சாமியாரான பவதுத்தா ஏன் அங்கு செல்லவேண்டும்? ஈஷாவில் உள்ளவர்கள் ஜக்கிக்கு அடிமையாக இருக்கும்வரை எவ்விதப் பிரச்சினையும் இல்லை. புத்தி தெளியும்போது காணாமல் போய்விடுவார்கள். அப்படியே தெரியாமல் வெளியே வந்து ஏதாவது சொன்னால் அவ்வளவு நாட்கள் அவருடன் இருந்தவர்களாலேயே பைத்தியக்காரப் பட்டம், திருட்டுப் பட்டம் கட்டப்படுவார்கள். அதையும் மீறி ஏதாவது செய்தால் மிரட்டல் அல்லது கொலைதான். அந்த மாதிரிதான் கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா மாயமானது'' என்கிறார்.


ஈஷா வகுப்புக்குச் செல்பவர்கள் அங்கேயே வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டு கட்டாய சந்நியாசம் தரப்படுகிறார்கள். போதை வஸ்துக்கள் வழங்கி சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றது. எதிர்ப்பவர்கள் மாயமாகிறார்கள் அல்லது பிணமாகக் கிடைக்கின்றனர் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஜக்கியின் மீது வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி தன்னுடைய ஈஷா மையத்திற்குள்ளேயே 2020, ஜூலை 2 தொடங்கி தான் கட்டிவரும் காலபைரவர் கோவில் அருகிலேயே பிணங்கள் பலவற்றைப் புதைத்துள்ளார் ஜக்கி என்கின்ற புதிய குற்றச்சாட்டு உருவாகியுள்ளது.

 

Jaggi Ashramam issue

 

"ஈஷா அமைந்துள்ள இக்கரை போளுவம்பட்டி - செம்மேடு கிராமத்திலிருக்கின்றது எனக்குச் சொந்தமான 2 ஏக்கர் 51 சென்ட் அளவிலான நிலம். இதில் பாக்கு மரங்கள் பயிரிட்டு வளர்த்து வருகிறேன். என்னுடைய நிலத்திற்கு அடுத்த நிலம் ஈஷா மையமே! என்னுடைய நில எல்லையில் தான் ஈஷாவில் தற்பொழுது கட்டிவரும் காலபைரவர் கோவில் இருக்கின்றது. நிலத்தை விலைக்கு கேட்டுப் பார்த்தான், நான் மசியவில்லை. அடுத்ததாக ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு வழங்கிய 44 ஏக்கர் நிலத்தை திருட்டுத்தனமாக கையெழுத்து வாங்கி ஆக்ரமித்துக்கொண்டான். சமீபத்தில் அதனை அரசு எடுத்துக்கொண்டது. இருப்பினும் ஜக்கி அதனை வெளிக்காட்டவில்லை. இந்த நிலையில் பட்டாவோடு இருக்கும் நிலங்களை வளைத்துக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தில் இந்த காலபைரவர் கோவில் அருகே மின்மயானம் கட்டத் திட்டமிட்டான் ஜக்கி. இங்கு மின்மயானம் வந்துவிட்டால் அருகிலுள்ள நிலங்கள் எல்லாம் மதிப்பிழந்து அவன் கேட்கும் விலைக்கு கிடைக்கும் என்கிற எண்ணம் அவனுக்கு.

 

இதற்கு முன்னோட்டமாக கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஆதியோகி சிலைக்கு தெற்கேயும், என்னுடைய நிலத்திற்கு கிழக்கேயும், அதாவது காலபைரவர் கோவில் பின்புறமுள்ள ஈஷாவின் இடத்தில் வயதில் மூத்த பெண்மணி ஒருவரை புதைத்து செடி வைத்துவிட்டான். இது சட்டவிரோதம். அரசு விதிமுறைகளுக்கு முரணானது என ஆட்சியர் தொடங்கி அனைத்து உயரதிகாரிகளுக்கும் தகவல் கூறினேன். ஒரே ஒரு ரெவின்யூ அதிகாரி வந்தார். அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். அவ்வளவுதான். அத்தோடு புறப்பட்டு விட்டார். இன்னமும் பிணம் அங்கேயே தான் இருக்கின்றது. இதுபோல் எத்தனை பிணங்கள் இருக்கின்றன என்பது பிணங்களைப் புதைக்கவிட்ட அரசு அதிகாரிகளுக்குத்தான் வெளிச்சம்'' என்கிறார் சிவஞானம் என்பவர்.

 

Jaggi Ashramam issue

 

அரசு விதியோ, "தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1996 பிரிவு 242-ன் கீழ் விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 5.10.1999 அன்று ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண் 213-ஐ வெளியிட்டது. மயானம் தொடர்பாக 7 விதிகள் அதில் சொல்லப்பட்டிருந்தன. இதன்படி எந்த இடம் மயானம் என முடிவு செய்யப்படுகிறதோ அந்த இடத்தில்தான் உடல்களைப் புதைக்கவும், எரிக்கவும் செய்யவேண்டும். மீறிச் செய்தால் 100 ரூபாய் அபராதம் - புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தனியாக அபராதம் விதிக்கப்படும். அதோடு சிறைத்தண்டனையும் உண்டு' என்கிறது. இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் திருட்டு ஜக்கியிடம் கைக்கட்டி வேலை செய்கிறதோ என்னவோ.?


"ஜக்கியின் மூளைச் சலவையால் ஈர்க்கப்பட்டவர்கள் முதலில் தியான வகுப்பிற்கு வருவார்கள். இதில் யார் யார் எப்படிப்பட்டவர்கள்? பின்னணி? சொத்து மதிப்பு? பல தகவல்களைச் சேகரித்து பணம் இருந்தும், பின்னணி இல்லாத சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுடன் ஆராவில் நான் கலந்துவிட்டேன் என ஜக்கி வசியம் செய்துவிடுவார். மந்திரித்துவிட்ட கோழிபோல் என்பார்களே, அதுபோல்தான் ஈஷாவிலுள்ள ஜக்கியின் அடிமைகளும். ஜக்கி சொல்வதை மட்டும் கேட்பார்கள். மீறினால் அவர்கள் காணாமல் போவார்கள். அதுதான் கணேசன் எனும் சுவாமி பவதுத்தா விஷயத்திலும் நடந்திருக்கும். அதுபோல் நிறைய பணக்காரர்கள் தங்களுக்கு நிம்மதி வேண்டுமென நிறைய சொத்து பணங்களுடன் ஜக்கியைச் சரணடைந்து விடுவார்கள். அது நடந்த சில நாட்களிலேயே ஈஷாவில் பிணமாகப் புதைக்கப்படுவார்கள். இதுதான் ஈஷாவின் நடைமுறை. பிணம் இங்கே இருக்கின்றது எனக் கூறியும் அரசாங்கம் அமைதி காப்பது ஏன்?'' என்கிறார் ஜக்கியின் ஈஷா மையத்தில் அக்கவுண்ட் செக்சனில் பணியாற்றிய ஒருவர்.

 

 

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

“அவர் இல்லையென்றால் சூரியன் கூட உதிக்காது...” - கங்கனா ரனாவத் உருக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Kangana Ranaut Meltdown about sathguru

கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம்.

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி கடும் தலைவலி காரணமாக சத்குரு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை சரிசெய்ய, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. 

Kangana Ranaut Meltdown about sathguru

இந்த நிலையில், சத்குரு விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “இன்று சத்குரு ஐசியூ படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்தபோது, திடீரென்று அவருடைய இருப்பின் மரணத் தன்மை என்னைத் தாக்கியது. இதற்கு முன் அவர் நம்மைப் போலவே எலும்பும், ரத்தமும், சதையும் உள்ள நபர் என்று எனக்குத் தோன்றவில்லை. கடவுள் நிலைகுலைந்து போனதை உணர்ந்தேன். பூமி மாறியதை உணர்ந்தேன். வானம் என்னை கைவிட்டதாக உணர்ந்தேன். இந்த யதார்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எனது வலியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் நன்றாக இருந்தால் நல்லது. அப்படியில்லை என்றால், சூரியன் உதிக்காது; பூமி நகராது. இதைப் பற்றி நான் அறிந்ததிலிருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். அந்த வேதனையில் சத்குரு ஜி, பிரமாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல், எந்த ஒரு கூட்டத்தையும் அல்லது சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.