Skip to main content

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும்..! அதற்காக அரசை குறை சொல்வதா..? - ராஜீவ்காந்தி பேட்டி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

ghj

 

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வேலுமணி, வீரமணி என்று தொடந்து நடைபெற்ற நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கர் வரை தொடர்கிறது. அரசியலில் இருப்பவர்கள் தொழில் செய்யக் கூடாதா? பணம் சம்பாதித்தாலே அனைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறுவது நியாயமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுகவின் ராஜீவ் காந்தியிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தம். நம்முறைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவின் இந்த ஐந்து மாத கால ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள், சிறப்பாக செயல்படுகிறது என்று உங்கள் கட்சியினர் கூறுவதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

 

திமுகவின் இந்த ஆட்சியை மக்களுக்கான ஆட்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். திமுகவுக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ முறை திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களை நாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறோம். அப்போதும் சரி, இப்போதும் சரி நாம் மேடையில் பேசுவது எல்லாம் சரி என்ற மனநிலையில் நான் எப்போதும் இருப்பதில்லை. அது ஏற்படுத்துகின்ற தாக்கம், மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப அதில் மாற்றம் தேவைப்பட்டால் என்னை மாற்றிக்கொள்ள நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் சோதித்து மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை. பாஜக போன்ற மதவெறி இயக்கங்களைத் தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கம் தற்போதைக்குத் தேவை. எனவே மக்கள் நலன் சார்ந்தும், பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தற்போது திமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. 

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக விமர்சனம் செய்துள்ளதைப் பற்றி? 

 

அரசியலில் ஈடுபடுபவர்கள் தொழில் செய்யக் கூடாது என்ற எந்த சட்டமும் இல்லை. எல்லா வகையான தொழிலும் செய்யலாம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வழிமுறைகளில் செய்ய வேண்டும். நான் ஒரு அரசியல்வாதி, நான் வக்கீல் தொழில் செய்கிறேன். எனக்கு கிடைக்கும் ஊதியத்தில் நான் முறையாக வருமான வரி கட்ட வேண்டும். அதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள சட்டத்திட்டம். எனக்கு ஒருவர் வழக்கிற்காக 2 கோடி பணம் தருவதாக கூறினால், அந்தப் பணத்திற்கு நான் முழுமையான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். விஜயபாஸ்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய வருமானம் 6 கோடி என்று காட்டியுள்ளார். அதற்காக வருமான வரியும் முறையாக கட்டியுள்ளார். அடுத்தமுறை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனக்கு சொத்து மதிப்பு 56 கோடி எனக் கூறி, அதற்கான வருமான வரியைக் காட்டியுள்ளார்.

 

இவர் அமைச்சராவதற்கு முன்பு தொழில் செய்திருக்கலாம், அதன் மூலம் வருமானம் பார்த்திருக்கலாம். ஆனால் அமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இவர் வருமானம் தரும் எந்த தொழிலையும் செய்யக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கையில், அவர் இந்த அளவு சொத்துக்கு வருமானவரி கட்டியிருந்தாலும் சொத்து எப்படி வந்தது என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கு வரும். அந்த வகையில், இந்த சொத்துக்கள் அனைத்தும் பினாமிகள் மூலம் பெறப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் அனைத்து தகவல்களும் நிச்சயம் வெளிவரும். வீரமணியிடம் 200 மடங்கு, வேலுமணியிடம் 300 என்று வருமானம் எப்படி அதிகரித்தது என்ற சந்தேகம் இயல்பாகவே அனைவருக்கும் வரும். எல்லாமே பினாமிகள் மூலம் வாங்கப்பட்ட  சொத்துக்கள்தான்.  

 

இதை எப்படி கண்டுகொள்ளாமல் ஒரு மக்கள் அரசு செயல்படும். புகாருக்குள்ளாகும் அனைவரும் இந்த சோதனையில் சிக்குவார்கள். அரசியலில் தனிப்பட்ட நேர்மை மிக முக்கியம். இல்லை என்றால் கடுமையான நெருக்கடியை நாமே சந்திக்க வேண்டிவரும். அமைச்சராக இருப்பவர் தொழில் செய்யக் கூடாது, ஆனால் அவரின் வருமானம் மட்டும் 100 மடங்குகளில் அதிகரித்தால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம். இதில் அதிமுக தலைமை குற்றம் சொல்வதற்கு இடமில்லை. விஜயபாஸ்கருக்கு கூடுதலாக வந்த 28 கோடி பணத்துக்கு அவர் முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால் அவரால் கணக்கு காட்ட முடியில்லை. சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும். அதற்காக அரசைக் குறை சொல்வதை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. 

 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.