Skip to main content

ரெய்டில் சிக்கும் தமிழக அமைச்சர்கள்! 2 பேரை காப்பாற்றும் டெல்லி! பதட்டத்தில் 12 பேர்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
ddd

 

"பிரதமர் நரேந்திர மோடி யார் மீது தனது இடது கையை வைக்கிறாரோ அவர்களுக்கு கஷ்டகாலம்தான் என்பது அதிமுகவினரின் நம்பிக்கை. ஜெயலலிதா மரணத்தின்போது தனது இடது கையை சசிகலா மீது வைத்தார். அவர் சிறைக்குப் போனார். அதே இடது கையை ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நரேந்திர மோடி வைத்தார். அதில் ஒரு சுவையான பின்னணி இருக்கிறது'' என்கிறார்கள் அதிமுகவினர்.

 

குட்கா ஊழலின் சிபிஐ விசாரணையில் சிக்கியிருக்கும் விஜயபாஸ்கர், அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க அடிக்கடி டெல்லி சென்று வந்தார். சுகாதாரத்துறையில் மேலும் பல ஊழல் புகார்கள் கிளம்பின. தனது பிரச்சனையை தீர்க்க டெல்லி சென்று வந்த விஜயபாஸ்கர் பிரதமரின் பார்வையில் பட்டுவிட, முழு டீடெய்லையும் விசாரித்து வாங்கி விட்டார் பிரதமர். அதன் எதிரொலியாகத்தான் விஜயபாஸ்கரை ஒரு விழாவில் சந்தித்தபோது இடது கையால் ஆசிர்வாதம் செய்தார்.

 

அதுபோல மோடியின் ஹிட் லிஸ்டில் ஏகப்பட்ட மந்திரிகள் சிக்கியிருக்கிறார்கள். போக்குவரத்துத்துறையில் 750 பஸ்களின் சேஸ்களை வாங்காமலேயே வாங்கியதாக போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர் போலி கணக்கு காட்டி மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். மதுரை அன்பு என்கிற சினிமா பைனான்ஸியர் மூலம் கோடம்பாக்கம் சினிமாத் துறையையே ஆட்டிப் படைத்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். விஞ்ஞானி செல்லூர் ராஜுவும்கூட இந்த லிஸ்டில் தப்பவில்லை.

 

இவர்களையெல்லாம்விட மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருப்பவர் ஒரு முக்கிய அதிமுக விஐபி. இவரது மகன் தொடர்பான பாலியல் வழக்கு சிபிஐயின் விசாரணையில் இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தும் அளவுக்கான விவகாரம் இது என்கிறது டெல்லித் தரப்பு. இதுபற்றி எடப்பாடியிடம் பேசி அவரை டம்மியாக்குங்கள், எந்த நேரத்திலும் அவரது மகன்மீது சிபிஐ பாயக்கூடும் என மத்திய உள்துறை எச்சரித்தது. அதற்கு பதிலளித்த மாநில அரசு, இந்த விவகாரத்தில் அவரது மகன் சம்மந்தப்பட்டிருக்கிறார் என எங்களுக்கு தெரியும். அதனால்தான் நாங்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம். தமிழக போலீஸ் இந்த வழக்கை விசாரணை செய்தால் அந்த விஐபி எங்களுக்கு மகனை இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்கு மாறு தொல்லைகொடுப்பார். அதனால்தான் சிபிஐக்கு காமக் கொடூர வழக்கை நாங்கள் மாற்றினோம் என பதில் சொன்னார்கள்.

 

மத்திய அரசு இவ்வாறு கேள்வி கேட்பதும், அந்த வி.ஐ.பி.யை பொள்ளாச்சியில் இருந்து மாற்றி திருப்பூர், காங்கேயம் பகுதிகளை கவனித்துக்கொள் ளும் கட்சிப் பொறுப்பு தரப்பட்டது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

ஒரிசாவைச் சேர்ந்த பரணி எர்த் மூவர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தும் பிரபாகரன். இவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ்- அமைப்புக்கு நிறைய நிதி கொடுத்து அந்த அமைப்புடன் பல்லாண்டு காலமாக தொடர்பை வளர்த்து வருபவர் பிரபாகரன்.

 

இந்த பிரபாகரனைப் பிடித்துதான் அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் வேலுமணியும் எடப்பாடிக்கும்- பாஜகவிற்கும் நட்பு பாலம் அமைத்தார்கள். இந்த பிரபாகரன் ஜக்கி வாசுதேவுக்கும் நெருக்கமான நண்பர். இவர் மூலமாக பியூஷ் கோயல், அமித்ஷா ஆகியோரை தங்கமணியும், வேலுமணியும் எளிதாக சந்தித்து வருவார்கள். எடப்பாடி தனது டெல்லித் தொடர்புகளை இந்த இருவர் மூலம்தான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

 

சமீபத்தில் எடப்பாடி டெல்லியுடன், பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா மூலம் தொடர்புகளை ஏற்டுத்திக்கொண்டார். அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதேபோல் வேலூர் அமைச்சர் வீரமணியையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இவையெல்லாம் எடப்பாடி தங்கமணி, வேலுமணியை மீறி தனது டெல்லி தொடர்புகளை வலுவாக்கிக்கொண்டதன் அடையாளம் என்கிறார்கள் அதிமுகவைச் சார்ந்தவர்கள்.

 

டெல்லியைப் பொறுத்தவரை எடப்பாடி, ஓ,பன்னீர்செல்வம் ஆகிய இருவரை மட்டுமே காப்பாற்றுவார்கள். மற்றபடி தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி, போக்குவரத்து விஜய பாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் என 12 பேர் மீது பாய்வதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.

 

ஊழல் கட்சி திமுக, ஊழல் கட்சி காங்கிரஸ் என தமிழக தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நரேந்திரமோடி, தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.கவில் ஊழலை ஒழிப்பதன் அச்சாரமாக இந்த 12 அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையையும் பொள்ளாச்சி வி.ஐ.பி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏவுவதற்கு முயற்சிக்கிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா மீது பாய்ந்தது போல், வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் அதிமுக அமைச்சர்கள் மீது டெல்லி பாய இருக்கிறது என்கிற பதட்டம் அதிமுக வட்டாரங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.