Skip to main content

எனக்குத் தேவை ரிசல்ட்! -அமித்ஷா அதிரடி ஆர்டர்

Published on 16/04/2021 | Edited on 16/04/2021
ddd

 

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு திரும்பியிருந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் நிலவரம் குறித்த அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டேயிருந்தார். அமித்ஷாவிடம் தமிழகம் குறித்து அவர் விவாதித்தபோது,’’கிடைக்கிற தகவல்கள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருந்தாலும், தமிழகத்தில் தாமரையை மலர வைத்தாக வேண்டும்’ என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.

 

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ஏற்கனவே பல வியூகங்களை வகுத்து கொடுத்திருந்த அமித்ஷா, பிரதமர் மோடியின் அழுத்தங்களுக்குப் பிறகு,’’"என்னவேனாலும் பண்ணிக்கோங்க; ரிசல்ட் பாசிட்டிவ்வாக இருக்கணும்' என்கிற உத்தரவை மட்டும் தமிழக டீமிற்கு பாஸ் செய்திருந்தார். குறிப்பாக, "தேர்தல் ஆணையம், மத்திய உளவுத்துறை, காவல்துறை ஆகிய 3 அதிகார அமைப்புகளிடமிருந்தும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே அந்த உத்தரவின் மறைமுகப் பொருள்' என்கிறது பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் வட்டாரம்.

 

ddd

துகுறித்து மேலும் விசாரித்தபோது, "தமிழகம் பெரியார் மண்; சுயமரியாதை பூமி. இங்கு, பா.ஜ.க.வின் தந்திரங்கள் செல்லாது என்கிற தி.மு.க. உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் அழுத்தமான பதிவுகளை உடைக்கவேண்டும்' என்பதே மோடி -அமித்ஷா -ஜே.பி.நட்டா ஆகிய மூவர் அணியின் கனவு. அதற்கேற்ப, கடந்த 2 மாதங்களாக பல்வேறு மறைமுக திட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. குறிப்பாக, பல தொகுதி களில் ஆர்.எஸ்.எஸ். குழு களமிறக்கப்பட்டது.

 

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு பிடித்து தங்கும் அவர்கள், பெட்டிக்கடை கள், டீக்கடைகள், சலூன் கடைகள் உள்பட சாமானியர்கள் கூடும் இடங்களில் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினருக்கு மேலானவர்கள் கூடும் நவநாகரிக இடங்கள்வரை ஊடுருவி அரசியல் பேசினர். நடுத்தர வர்க்கத்தினரிடம் மூளைச்சலவையும் செய்தார்கள். இதன்பலன் என்னவென்பதை அறிந்து டெல்லிக்கு தகவல் தந்தபடி இருந்தது மத்திய உளவுத்துறை.

அதன் ரிசல்ட்டுகள் பாசிட்டிவாக இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் குறிப்பிட்ட 10 தொகுதிகளில் வெற்றியை உறுதிசெய்ய என்னென்ன வேண்டும் என பொறுப்பாளர்களிடம் விவாதித்திருக்கிறார் அமித்ஷா. அப்போது, ஐந்து அம்சங்கள் கொண்ட ப்ளான்கள் போடப்பட்டு அமித்ஷாவிடம் கொடுக்கப்பட்டது. அதாவது, மிகப்பெரிய கட்டிடம் கட்டும்போதோ அல்லது நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின்போதோ போடப் பட்டும் ப்ராஜெக்ட் எஸ்டிமேட் மாதிரி ப்ளான்கள் போட்டப் பட்டிருந்தன. அதிலுள்ள ஒவ்வொரு விசயமும் எதற்கானது? என விசாரிக்கும்படி நட்டாவிடம் சொல்லியிருந்தார். அதனை முழுமையாக விசாரித்து ரிப்போர்ட் தந்திருந்தார் நட்டா.

 

அதன்படி, அவைகளுக்கு அனுமதியளித்த அமித்ஷா, அதற்கான உதவிகளைச் செய்யுமாறு உளவுத்துறையிடமும் அறிவுறுத்தியிருந்தார். அந்தவகையில், இந்த தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பணிகள் அனைத்திலும் பா.ஜ.க. ஸ்கோர்பண்ணியிருந்தது. ஆனால், இவைகள் எதுவுமே திராவிட கட்சிகளுக்குத் தெரியக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது டெல்லி.

 

இந்தநிலையில்... கடந்த 2-ந் தேதி இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை மதுரையில் துவக்கிய பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேர்தல் நிலவரம் குறித்து கேட்க, "கருத்துக் கணிப்புகள்தான் பயமுறுத்துகின்றன' எனச் சொல்லி சோகமாகியிருக்கிறார் எடப்பாடி. அப்போது அவருக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி, "கருத்துக் கணிப்புகளால் தி.மு.க. உற்சாகத்தில் இருக்கட்டும். கணிப்புகள் மீது கவனம் வைக்காமல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மட்டும் பேசுங்கள்' என அட்வைஸ் செய்திருக்கிறார். அப்போது, "அதனைத்தான் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்' எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி

 

 

இந்தச்சூழலில், தமிழக பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய மோடியிடம், மார்ச் 30 மற்றும் 31-ந் தேதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட் காட்டப்பட்டது. அதில், தாமரை ஒரு இடத்திலும் மலரவில்லை. அதனைத் தொடர்ந்துதான் அமித்ஷாவிடம், பிரதமர் மோடி ரிப்போர்ட்டின் சாரம்சத்தை சுட்டிக்காட்டிவிட்டு, "எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 தாமரைகளையும் மலர வைத்தாக வேண்டும்' எனச் சொல்ல... அதன் பிறகே, "என்ன வேணாலும் பண்ணிக்கோங்க; எனக்கு ரிசல்ட் முக்கியம்' என தமிழகத்திற்கு தகவல் பாஸ் பண்ணினார் அமித்ஷா''‘என்று தெரிவித்தனர் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் குழு.

இதற்கிடையே, "ஸ்டாலின்தான் வர்றாரு' என்கிற ஸ்டிக்கர், ப்ளக்ஸ் பேனர்கள் அனைத்தும் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள ஈவன் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய்க்கு தி.மு.க. கொடுத்துள்ள விளம்பர ஆர்டர்கள் பற்றிய புகார்கள் அமித்ஷாவிற்குப் போயிருக்கிறது.

தவிர, தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் பல தொழிலதிபர்களிடமும் தி.மு.க. தரப்பில் தேர்தல் நிதி பெற்றிருப்பதாகவும், அதனை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் கையாளுகிறார் என்பதையும் சம்மந்தப்பட்ட தொழிலதிபர்களே பிரதமர் மோடிக்கு தகவல் பாஸ் செய்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான், கடைசி 4 நாட்களில் களத்தில் பணத்தை இறைக்க தி.மு.க. திட்டமிடுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவது நல்லது எனவும் தமிழக பா.ஜ.க. தரப்பிலிருந்தும் டெல்லிக்கு தகவல்கள் போனது. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய சில இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியது வருமானவரித்துறை. இந்த ரெய்டுக்கான உத்தரவை மோடியும் அமித்ஷாவும் கொடுத்துவிட்டுத்தான் இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்ய தமிழகத்திற்கே வந்தனர். மே 2-ந் தேதி சில அதிர்ச்சிகள் காத்திருக்கிறது'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

தி.மு.க.வை வீழ்த்த என்னதான் பா.ஜ.க. திட்டமிட்டாலும் அதன் முகத்தில் கரி பூசப்படும் என்பதைத்தான் ரெய்டில் எதுவும் சிக்காத சூழல் காட்டுகிறது. இது, தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் தி.மு.க.வின் இரண்டாம்நிலை தலைவர்கள்.
 

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.