Skip to main content

பத்தாயிரம் பெண்களின் நிர்வாண குளியல் வீடியோ; ஜப்பானை அதிர வைத்த மோசடி கும்பல்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

hot water spring japan voyeurism

 

இந்தியாவிற்கு காஷ்மீர், சிம்லா, ஊட்டி, கொடைக்கானல் போன்றவை எப்படி இயற்கையின் வரங்களாக கிடைத்ததோ, அதே போல் ஜப்பானுக்கு அந்த நாட்டில் உள்ள வெந்நீரூற்றுகள். நாம் கோடை காலங்களில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் செல்வது போல் குளிர்நாடான ஜப்பானில் அங்கு வாழும் மக்கள் அங்கு இயற்கையாகவே அமைந்த வெந்நீரூற்றுகளுக்கு சென்று நீராடி மகிழ்வதை வழக்கமாக செய்து வருகிறார்கள். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் ஜப்பானின் வெந்நீரூற்றுகளின் மீது தீராத மோகம் உண்டு. 

 

ஜப்பானுக்கு செல்லும் பல வெளிநாட்டு பயணிகள் வெந்நீர் குளியலை மிஸ் செய்வதே இல்லை. ஜப்பானில் பொதுவாக ஒரே இடத்தில் பல நீரூற்றுகள் இருப்பதால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் குளிப்பது தான் பொதுவான நடைமுறையாக இருந்தாலும் சில இடங்களில் சேர்ந்து குளிப்பதும் உண்டு. அப்படி தனியாக குளிக்கும்போது கொஞ்சம் சுதந்திரமாக குளிப்பதை விரும்பும் சில பெண்கள் ஆடை இல்லாமல் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். 

 

இப்படி பெண்கள் ஆடை இல்லாமல் குளிப்பதை கடந்த 30 வருடங்களாக ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மறைந்திருந்து புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக செயல்பட்டு வந்த இந்த திருட்டு கும்பலை சமீபத்தில்தான் அதிரடியாக கைது செய்திருக்கிறது ஜப்பான் காவல்துறை. ஜப்பான் காவல்துறையின் விசாரணையில் 50 வயதான கரின் சைடோ என்பவன் தான் அந்த 16 பேர் கொண்ட மோசடி கும்பலின் தலைவன் என்பதும், கரின் சைடோ தனது இருபது வயதில் இருந்து இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இருபது வயதில் இந்த தொழிலைத் தொடங்கிய கரின் சைடோ, இதுவரைக்கும் 10000 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். அவை அத்தனையும் வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து எடுக்கப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.  

 

பெண்களை மறைந்திருந்து ரசிப்பதும் வீடியோ எடுப்பதும் அதனை விற்பனை செய்வதும் வாயூரிசம் எனப்படும் ஒரு வகையான குற்றச்செயலாகும்.  இம்மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உலகம் முழுவதும் ஒரு பெரும் கிரைம் நெட்வொர்க்காக செயல்பட்டு வருகிறார்கள். கரின் சைடோவும் அந்த நெட்வொர்க்கின் மூலமாகவே செயல்பட்டு வந்திருப்பதைக் கண்டுபிடித்த ஜப்பான் காவல்துறை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The famous director ss rajamouli caught in the earthquake in Japan

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.

அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா மற்றும் தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் இருந்து வருகிறார். அங்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில், ராஜமெளலி தனது மனைவியுடன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

The famous director ss rajamouli caught in the earthquake in Japan

இந்த நிலையில், இன்று அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28வது மாடியில் என்ன செய்வதன்று தெரியாமல் இருந்ததாகவும், ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்கள் எல்லாம், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். 

Next Story

எண்ணூரில் கடையடைப்பு போராட்டம்!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Lockdown struggle in Ennoor

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.