Skip to main content

காங்கிரசுக்கு ஆக்சிஜன் அளித்த ஹிமாச்சல் வெற்றி; கேரள ஸ்டைலில் ஆட்சியை திருப்பி போட்ட மக்கள்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

hjk

 

நடந்து முடிந்த குஜராத், ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் காலை முதலே வெளியாகி வரும் நிலையில் தற்போது பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. குஜராத், இமாச்சல் மாநிலத்தின் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையிலான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குஜராத்தில் 120 சீட் வரை பாஜக ஜெயிக்கலாம் என்ற கருத்துக்கணிப்பை உடைத்து 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று 7 முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் யாருமே எதிர்பாராத வண்ணம் வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்து கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பொய்யாக்கியுள்ளது.

 

இது ஒருபுறம் இருக்க மீண்டும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக முடிசூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்திருந்த நிலையில், பாஜக தரப்பு அதிர்ச்சி அடையும் வகையிலும், காங்கிரஸ் தரப்பு மகிழ்ச்சி அடையும் வகையிலும் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கைகளில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததில்லை. அந்த வகையில் கேரள மக்கள் எப்படி ஆளும் கட்சியை அடுத்த முறை வெற்றிபெற வைப்பதில்லையோ அதே போல இமாச்சல் மக்களும் இந்த முறை ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்கள்.

 

ஆனால் இந்தமுறை கள நிலவரம் என்பது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று சொல்வதற்குரிய எந்த அறிகுறிகளும் இல்லாமலே இருந்து வந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளது. வழக்கம்போல் எதிர்க்கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர். 

 

தோல்வியில் தொடர்ந்து தத்தளித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஆக்சிஜனாக இந்த வெற்றி பார்க்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்றது போல் குதிரை பேரம் நடந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா அல்லது அரசியல் விளையாட்டை இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக அரங்கேற்றுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். 

 

 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.