Skip to main content

தி.மு.க.வுக்கு எதிரான ஃபைல்களுடன் டெல்லி சென்ற ஆளுநர்! மோடியை சந்திக்காமல் அவசரமாக சென்னை திரும்பிய பின்னணி!  

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Governor RN Ravi went to Delhi

 

தி.மு.க. அரசின் திராவிட மாடலுக்கு எதிராக அடிக்கடி சாட்டையை சுழற்றிவருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு தகுந்த பதிலடியும் தி.மு.க. அரசு அவ்வப்போது கொடுத்து வருகிறது. ஆனாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க. அரசை சீண்டிக் கொண்டே இருக்கிறார் ஆர்.என்.ரவி.

 

இதனால் தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்குமான முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருக்கும் நிலையில், மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, அவசரம் அவசரமாக சென்னை திரும்பியிருக்கிறார்.


கவர்னரின் டெல்லி பயணம் குறித்து விசாரித்த போது, "தனது அதிகாரத்துக்குட்பட்டே இயங்குகிறார் கவர்னர். ஆனால், தன்னுடைய ப்ரோம்கிராம்கள் அனைத்தையும் முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. அரசு எதிர்பார்ப்பதை கவர்னர் ரசிக்கவில்லை. உதாரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நேரம் கொடுத்திருந்தார் கவர்னர். இதனை அரசுக்கோ அல்லது உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கோ தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதில் கவர்னருக்கு உடன்பாடில்லை. மேலும், விழாவில் எதைப் பேசவேண்டும் என தனக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறார். இப்படிப்பட்ட இயல்புகள்தான் அவருடையது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரான உயர்கல்வி அமைச்சரை கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டதை கவர்னர் அனுமதித்திருக்கக் கூடாது. இது அரசுத் தரப்பை காயப்படுத்துகிறது. அதனால் எதிர்வினையாற்றுகிறது தி.மு.க. அரசு. இதுதான் மோதல்களாக வெடிக்கின்றது.


இதனால் தனது கவனத்துக்குக் கொண்டு வரப்படக்கூடிய அரசுக்கு எதிரான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அவர். அதுவும் ஆதாரங்களுடன் கொடுக்கப்படக்கூடிய விவகாரங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார். அந்த வகையில்தான், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், தற்போதைய மாநில உளவுத்துறைத் தலைவர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்துக்கு எதிராக பா.ஜ.க. அண்ணாமலை தொடுத்துள்ள தேசவிரோத குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். இது குறித்த ஆதாரங்கள் அண்ணாமலை தரப்பிலிருந்து கவர்னரிடம் தரப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னரும் தனது சோர்ஸ் மூலம் பல தகவல்களை திரட்டியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லிக்கு விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.


தமிழக அரசின் உயர்கல்வித் துறையினர் தரப்பில் விசாரித்தபோது, "பல்கலைக்கழகத்தின் வேந்தர் கவர்னர் என்றால், இணைவேந்தர் உயர்கல்வி அமைச்சர்தான். பல்கலைக்கலைக் கழகத்தில் கவர்னருக்குரிய அதிகாரம் அமைச்சருக்கும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை ராஜ்பவன் தடுக்கிறபோது அதற்கு எதிராக அரசு செயலாற்றுகிறது. இதில் தவறு எதுவும் கிடையாது. இணைவேந்தரை கௌரவ விருந்தினராக எப்படி போடலாம்? இது இணைவேந்தர் பதவியை சிறுமைப்படுத்துவதாகாதா? பல்கலைக் கழகத்துக்கும் ஒன்றிய இணையமைச்சர் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அவரை எதற்கு விழாவுக்கு அழைக்க வேண்டும்? ஆக, தி.மு.க. அரசை சீண்டுவதுதான் ராஜ்பவனின் நோக்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக விழாவில் மாணவர்களிடம் சனாதான கொள்கையை நிலை நிறுத்துவதுதான் கவர்னரின் வேலையா? ஏன், சனாதானத்துக்கு கொடிபிடிக்கும் வகையில் அவர் பேச வேண்டும்? இதற்கு முந்தைய கவர்னர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்களா? ஏன், பா.ஜ.க. ஆளும் மாநில கவர்னர்கள் கூட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மாணவர்களிடம் புகுத்துவதில்லையே? இவர் மட்டும் இப்படி பேசுவதால் தான் அமைச்சர் உள்ளிட்டவர்கள் ராஜ் பவனுக்கு பதிலடி தருகின்றனர். டெல்லியின் அசைன்மெண்டுக்கேற்ப கவர்னர் ஆடுகிறார். அது நிற்காதவரை கவர்னருக்கு எதிரான பதிலடி அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுக்கொண்டு தானிருக்கும்’ என்கிறார்கள் உயர்கல்வித் துறையினர்.


டெல்லியிலுள்ள சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, "குடும்ப ரீதியிலான ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காகவே டெல்லிக்கு வந்தார் கவர்னர். இது ஏற்கனவே முடிவான ஒரு நிகழ்வுதான். ஆனால், டெல்லிக்கு வருமாறு கடந்த வாரம் அழைத்திருந்தது பிரதமர் அலுவலகம். அப்போது, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இருப்பதையும், 16-ந் தேதி டெல்லிக்கு வரவேண்டிய ப்ரோகிராம் இருப்பதையும் சொன்னதையடுத்து, கடந்த வாரம் டெல்லிக்கு அவர் செல்வது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஏற்கனவே திட்டமிட்டபடி 16-ந் தேதி டெல்லிக்கு வந்திருந்தார் கவர்னர்.


ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இருவரையும் கவர்னர் சந்திக்க நேரம் முடிவாகியிருந்தது. ஆனால், தமிழகத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம், வன்முறையை அறிந்து சென்னைக்கு உடனடியாகச் செல்லுமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து கவர்னருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால், அவர் புறப்படுவதற்கு முன்பு, பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் இருவர் கவர்னரை சந்தித்தனர்.


பிரதமரிடம் சொல்லவேண்டிய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கவர்னர். குறிப்பாக, போலி பாஸ்போர்ட் விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வெளிநாட்டு தொழில் முதலீடுகள் விவகாரம், தமிழகத்தின் 4 அமைச்சர்களின் துறைசார்ந்த ஊழல்கள், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்திற்கு நெருக்கமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் ஆகிய 5 கோப்புகள் அந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதில், போலி பாஸ்போர்ட் விவகாரம் தவிர மற்ற 4 கோப்புகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவல்களின் அடுத்த பகுதி. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இதன் தாக்கம் தெரியவரும்” என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.