Skip to main content

தமிழக உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை! நடந்தது என்ன? 

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
Governor consults with Tamil Nadu high officials!

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயரதிகாரிகளை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசின் சார்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 
                   

இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’கொரோனா பரவல் குறித்து தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறது தமிழக கவர்னர் மாளிகையான ராஜ்பவன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாமல் இருப்பதாக நாங்கள் கருதினால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடம் எனவும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இது குறித்த தங்களின் விளக்கத்தை 30-ந்தேதி தாக்கல் செய்யவிருக்கிறது தேர்தல் ஆணையம். 
                     

இந்த நிலையில், அரசு நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பும் கடமையும் ராஜ்பவனுக்கு இருப்பதால் உயரதிகாரிகளை தனது மாளிகைக்கு அழைத்து விசாரித்திருக்கிறார் கவர்னர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். 
                    

அந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி, தடுப்பூசிகளின் கையிருப்பு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைக்களின் விபரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்திருக்கிறார்.   இரவு நேரங்களிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் தொற்று பரவல் சற்று குறைந்திருப்பதை அதிகாரிகள் விவரித்திருக்கிறார்கள். மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை டிஜிபி தெரிவித்துள்ளார். 
                  

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என நீங்கள் சொன்னாலும், பல மாவட்டங்களில் தடுப்பூசி இல்லைங்கிற தகவலே எங்களுக்கு வருகிறது என கவர்னர் சுட்டிக்காட்டியபோது, தமிழகத்துக்கான தேவைகளை மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறோம். ஆனால், தேவைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. கிடைக்கிற எண்ணிக்கைக்கேற்ப மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மே மாதம் 1 -ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
                    

அதேசமயம், மே 1 முதல் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திடமே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்து விட்டதால், 1 கோடியோ 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்திருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.   
                    

இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் கவர்னர். அப்போது, தேர்தல் முடிவுகளையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் கவர்னர். அது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார் டிஜிபி திரிபாதி. மேலும், சனிக்கிழமையும் ஊரடங்கை அமல்படுத்துவது, இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முழு ஊடரங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ‘’ என்று சுட்டிக்காட்டுகிறது தலைமைச் செயலக வட்டாரம் !


 

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.