Skip to main content

"கோயில்ல சட்டையை கழட்டச் சொல்வதே நூலைப் பார்க்கத்தான்; இதை இல்லன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்..." - காந்தராஜ் தடாலடி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

nm,

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர், திருமாவளவன் மனுஸ்மிருதி அச்சடித்துக் கொடுப்பதைப் பற்றி பேச்சு வந்தபோது அவருக்குத்தான் வேலை இல்லை. அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "அதான் இவருக்கு நிறைய வேலை இருக்குல்ல, அதைச் செய்ய வேண்டியதுதானே? அண்ணாமலைக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால்தான் திருமாவளவன் என்ன செய்துகொண்டுள்ளார் என்பதைப் பார்த்துக்கொண்டுள்ளார். எனவே வேலை இல்லாதவர் இவர் தானே ஒழிய திருமா இல்லை. 

 

உங்களுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் தான் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்களே, அப்புறம் என்ன கவலை;  வெள்ளைக்காரன் மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தை யாருக்கோ திருமாவளவன் கொடுத்துவிட்டுப் போகிறார். நீங்கள் ஏன் லபோ திபோ என்று கத்துகிறீர்கள். உங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் வர வேண்டும். அதிலிருந்தே நீங்கள் பொய் சொல்லுவதை எளிதாகக் கண்டறிந்துவிடலாம். உங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவரும் நீங்கள் அவரை எதற்குக் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும்.

 

இந்தக் கருத்து மக்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பிரதியெடுத்து மக்களிடம் சேர்க்கிறார். அதில் உங்களுக்கு ஏன் வயிறு எரிய வேண்டும். அண்ணாமலைதான் தெளிவாகக் கூறிவிட்டாரே எங்களுக்கும் மனுஸ்மிருதிக்கும் சம்பந்தமில்லை என்று, அதனால் அண்ணாமலை மத்திய அரசிடம் தெளிவாகக் கூற வேண்டும். அதன்படி இனி வரும் காலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களைக் கோயில்களில் அர்ச்சகராகவும், அனைவரையும் கோயில் கருவறை வரை செல்ல மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கடுமையாகச் சொல்ல வேண்டும். அண்ணாமலை இதைச் சொல்லத் தயாரா இருக்கிறாரா என்று கேளுங்கள். சொல்லிவிட்டு அவர் எங்கே போக முடியும். அதையும் பார்க்க வேண்டியுள்ளது.

 

அப்படி என்றால் அடுத்தவர்களை இவர் தேவையின்றி விமர்சிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். திருமா அவர் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார். நீங்கள் எங்களுக்கும் அந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டீர்கள். அப்புறம் அவர் என்ன செய்தால் உங்களுக்கு என்ன, அவரை எதற்காக அட்டாக் செய்ய வேண்டும். தரமில்லாமல் பேச வேண்டும். அப்புறம் பூணூல் போடுவதைத் தடை செய்ய வேண்டும். நாங்கள் உங்களை விட உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகத் தானே இந்தப் பூணூலை அணிகிறார்கள். 

 

நாங்கள் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் என்றுதானே இவர்கள் கூறுகிறார்கள். அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். கருவறையில் கற்பழிப்பு வரையில் செய்யலாம்; ஆனால் தாழ்த்தப்பட்டவன் போகக்கூடாது. இதுதான் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் சட்டையைக் கழட்டச் சொல்லுவதே பூணூல் இருக்கா இல்லையா என்பதைப் பார்ப்பதற்குத்தான். இருந்தால் உள்ளே செல்லலாம்; இல்லை என்றால் வெளியே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதை அண்ணாமலையை ஒழிக்கச் சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவரைத் திட்டலாம்." என்றார். 


 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.