Skip to main content

"கோயில்ல சட்டையை கழட்டச் சொல்வதே நூலைப் பார்க்கத்தான்; இதை இல்லன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்..." - காந்தராஜ் தடாலடி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

nm,

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர், திருமாவளவன் மனுஸ்மிருதி அச்சடித்துக் கொடுப்பதைப் பற்றி பேச்சு வந்தபோது அவருக்குத்தான் வேலை இல்லை. அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "அதான் இவருக்கு நிறைய வேலை இருக்குல்ல, அதைச் செய்ய வேண்டியதுதானே? அண்ணாமலைக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால்தான் திருமாவளவன் என்ன செய்துகொண்டுள்ளார் என்பதைப் பார்த்துக்கொண்டுள்ளார். எனவே வேலை இல்லாதவர் இவர் தானே ஒழிய திருமா இல்லை. 

 

உங்களுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் தான் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்களே, அப்புறம் என்ன கவலை;  வெள்ளைக்காரன் மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தை யாருக்கோ திருமாவளவன் கொடுத்துவிட்டுப் போகிறார். நீங்கள் ஏன் லபோ திபோ என்று கத்துகிறீர்கள். உங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் வர வேண்டும். அதிலிருந்தே நீங்கள் பொய் சொல்லுவதை எளிதாகக் கண்டறிந்துவிடலாம். உங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவரும் நீங்கள் அவரை எதற்குக் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும்.

 

இந்தக் கருத்து மக்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பிரதியெடுத்து மக்களிடம் சேர்க்கிறார். அதில் உங்களுக்கு ஏன் வயிறு எரிய வேண்டும். அண்ணாமலைதான் தெளிவாகக் கூறிவிட்டாரே எங்களுக்கும் மனுஸ்மிருதிக்கும் சம்பந்தமில்லை என்று, அதனால் அண்ணாமலை மத்திய அரசிடம் தெளிவாகக் கூற வேண்டும். அதன்படி இனி வரும் காலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களைக் கோயில்களில் அர்ச்சகராகவும், அனைவரையும் கோயில் கருவறை வரை செல்ல மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கடுமையாகச் சொல்ல வேண்டும். அண்ணாமலை இதைச் சொல்லத் தயாரா இருக்கிறாரா என்று கேளுங்கள். சொல்லிவிட்டு அவர் எங்கே போக முடியும். அதையும் பார்க்க வேண்டியுள்ளது.

 

அப்படி என்றால் அடுத்தவர்களை இவர் தேவையின்றி விமர்சிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். திருமா அவர் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார். நீங்கள் எங்களுக்கும் அந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டீர்கள். அப்புறம் அவர் என்ன செய்தால் உங்களுக்கு என்ன, அவரை எதற்காக அட்டாக் செய்ய வேண்டும். தரமில்லாமல் பேச வேண்டும். அப்புறம் பூணூல் போடுவதைத் தடை செய்ய வேண்டும். நாங்கள் உங்களை விட உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகத் தானே இந்தப் பூணூலை அணிகிறார்கள். 

 

நாங்கள் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் என்றுதானே இவர்கள் கூறுகிறார்கள். அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். கருவறையில் கற்பழிப்பு வரையில் செய்யலாம்; ஆனால் தாழ்த்தப்பட்டவன் போகக்கூடாது. இதுதான் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் சட்டையைக் கழட்டச் சொல்லுவதே பூணூல் இருக்கா இல்லையா என்பதைப் பார்ப்பதற்குத்தான். இருந்தால் உள்ளே செல்லலாம்; இல்லை என்றால் வெளியே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதை அண்ணாமலையை ஒழிக்கச் சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவரைத் திட்டலாம்." என்றார். 


 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.