Skip to main content

"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே"!! - தில் போலீஸின் தூள் பேட்டி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

hjk


சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒரு காட்சி தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது. காவலர் ஒருவர் வேகமாக ஓடிவந்து சாலை வளைவில் விழுந்துவிடுவார், இருந்தும் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு ஒருவரைத் துரத்திக்கொண்டு ஓடுவார். திருவண்ணாமலையில் திருடப்பட்ட காரை பட்டுக்கோட்டையில் துரத்திப்பிடித்த அந்தக் காவலர் பெயர்தான் பிரசாத். தமிழ்நாடே கொண்டாடிய அவரின் துணிச்சலைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அவரிடம் இதுதொடர்பாக நாம் பேசினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


நீங்கள் செய்த செயலுக்காக தமிழ்நாடே உங்களைக் கொண்டாடுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. காவல்துறையில் சேர்ந்ததற்கான நோக்கம் நிறைவேறியிருக்கிறது. எல்லாரும் பாராட்டுவதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு. டிஜிபி சார் மூன்றுமுறை ஃபோன் செய்து பாராட்டினார். சந்தோஷமாக இருக்கு. 

 

எப்படி அந்த திருடப்பட்ட காரை அடையாளம் கண்டுபிடித்தீர்கள், குறுகிய காலத்துக்குள் வண்டி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்தது எப்படி? அன்றைக்கு என்ன நடந்தது? 

 

காவல் கண்காணிப்பாளர் மேடம் அவர்கள் இந்த மாதிரி திருடு போன சம்பவம் பற்றி கூறுகிறார்கள், TN 07 CL 8454  எண் கொண்ட கார் திருவண்ணாமலையில் இருந்து திருடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்குள் வந்தால் அதை தடுத்து நிறுத்திப் பிடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பிறகு டிஎஸ்பி சாரும் அனைத்து சப் ஸ்டேஷன்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்தார். நாங்களும் அலுவலகத்தில் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என்னை ஒரு வேலையாக வெளியே அனுப்பினார்கள். அந்த நேரத்தில் இந்தக் கார் என்னுடைய கண்ணில் பட்டது. வண்டி எண்ணைப் பார்த்ததும் இது திருடப்பட்ட கார் என்பதை உறுதி செய்துகொண்டேன். நான் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது அவர்கள் மீறி சென்றார்கள். உடனே காரை வேறு பக்கம் திருப்பி ஓட்ட முற்பட்டார்கள். உடனே நானும் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அப்போதே டிஎஸ்பி சாருக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே செல்லும்போது சாலை வளைவில் விழுந்துவிடுகிறேன். பிறகு எழுந்து ஓடி காரை பிடித்துவிட்டேன்.

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களை டிஜிபி பாராட்டியுள்ளார், எஸ்பி, ஐஜி என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

விவரிக்க வார்த்தைகளே இல்லை சார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடனே டிஜிபி சார் என்னை ஃபோனில் கூப்பிட்டு பாராட்டி, 25 ஆயிரம் பரிசு வழங்கியிருக்கிறேன் என்றார். அதைப் போல எங்க மேடம் (தஞ்சை காவல் கண்காணிப்பாளர்) கூப்பிட்டு பாராட்டி பரிசு வழங்கினார்கள். எங்கள் டிஎஸ்பி சாரும் பாராட்டினார். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினார்கள். 

 

இந்த சம்பவத்தைப் பத்தி உங்கள் ஊரில் என்ன சொல்கிறார்கள்?

 

நிறைய பேரு ஃபோன் போட்டு பேசுவாங்க. நேர்லையும் சொல்வாங்க, ரவுடிய பிடிச்சிருக்கீங்க, பார்த்து இருங்கன்னு. அம்மா கூட, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்து இரு சொன்னாங்க. நம்ம வேலையே ரவுடிகளைப் பிடிப்பதுதானே, அதற்காகத்தானே பணியாற்றுகிறோம். 

 

வீரதீர செயலுக்கான விருதுக்கு உங்கள் பெயரை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக உயரிய வருது. கிடைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கும். 

 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.