Skip to main content

பொற்பனைக்கோட்டை சங்க காலக் கோட்டைச் சுவரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Excavation work has started on the wall of the Sangam Fort of Porpanaikottai

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக் கோட்டையான பொற்பனைக்கோட்டை அகழாய்வு 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'அரண்மனை திடல்' என்னும் இடத்தில் 14 குழிகள் அமைத்து அவற்றுக்கான அகழியில் 1 குழி அமைத்து அகழாய்வு பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த அகழாய்வில் வட்டச்சுவர் கட்டுமானம், கழிவு நீர் வாய்க்கால், வட்டச்சில், தங்க ஆபரணம், பானை ஓடுகள் எனப் பல்வேறு பொருட்கள் காணப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், அடுத்த கட்டமாக கோட்டை கரை என்னும் இடத்தில் தற்போது கோட்டை சுவரின் கட்டுமானத்தை அறிந்து கொள்ளும் வகையில் வடக்கு கோட்டை கரையில் 5x5 மீட்டரில் குழிகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக அளவிடும் பணியும் குழிகள் அமைக்கும் முன்னேற்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

 

Excavation work has started on the wall of the Sangam Fort of Porpanaikottai

 

2.5 கி.மீ சுற்றளவு கொண்ட கோட்டைச் சுவரானது பல்வேறு இடங்களில் உயர்வாகவும், தாழ்வாகவும் காணப்படுகிறது. இதில் வடக்கு பகுதியில் சுமார் ஐந்து மீட்டர் உயரம் கொண்டதாகவும் ஒட்டுமொத்த கோட்டையின் உயரமான மண் மேட்டுச் சுவராகவும் காணப்படுகிறது. இந்த மண் மேட்டுச் சுவரின் மேல் மட்டத்தில் சுமார் ஒரு மீட்டர் அகலத்தில் நீளமான செங்கல் கட்டடமானது கோட்டைச் சுவராகக் காட்சியளிக்கிறது. இதில் ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோட்டைச் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது மற்றும் உயரமான கட்டுமான அமைப்பினை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த அகழாய்வு குழியானது அமைக்கப்பட உள்ளது. 

 

Excavation work has started on the wall of the Sangam Fort of Porpanaikottai

 

சுமார் 6 முதல் 7 குழிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்படுத்தப்பட உள்ள அகழாய்வு குழியானது படிக்கட்டு போன்ற அமைப்பில் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்படும். இந்த அகழாய்வில் கோட்டைச் சுவரின் கட்டுமானம், அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அதன் தரம் ஆகியவையும் இத்தனை ஆண்டுகள் அழிவில்லா உறுதியான கோட்டையாக எப்படி அமைந்துள்ளது என்பது பற்றியும் தெரியவரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தப் பணிகளில் அகழாய்வு இயக்குநர் தங்கதுரை மற்றும் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.