Skip to main content

ஜி20 மாநாட்டில் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை - கடலூர் இள. புகழேந்தி விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Ela Pugazhenthi | Modi | EPS | G20 |Annamalai

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி விரிவாகப் பேசுகிறார்.

 

அந்தக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களை இங்கு மிகவும் மதிப்புடன் நடத்தினார்கள். தற்போதைய பாஜக அரசு திருடித் தின்னும் வேலையை மட்டும் தான் செய்கிறது. G20 நிகழ்வுக்காக இவர்கள் கட்டிய இடத்தில் மழை பெய்தபோது நீர் நிரம்பியது. ஆனால் இந்த கூட்டத்துக்காக 990 கோடி செலவு செய்கிறோம் என்று பட்ஜெட்டில் சொன்ன இவர்கள், 4000 கோடிக்கும் அதிகமாக இதன் மூலம் திருடியுள்ளனர். அந்த மாநாட்டின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன?

 

இந்த மாநாட்டின் லட்சணத்தை வெளிநாட்டு பத்திரிகைகள் எல்லாம் எழுதியுள்ளன. எதையாவது சொல்லி திருடுவது, கொள்ளையடிப்பது தான் பாஜகவின் வேலை. இந்த மாநாட்டுக்காக ஏழைகளின் வீடுகள் இருக்கும் பகுதிகளை எல்லாம் இவர்கள் மறைத்தார்கள். அதை போட்டோ எடுத்துப் போட்டு வெளிநாட்டினர் கேள்வி கேட்கின்றனர். இந்த பாஜக கும்பலை நாட்டை விட்டே அனைவரும் வெளியேற்ற வேண்டும். மிக விரைவாக இந்த ஆட்சி முடிந்தால் நல்லது. இந்தியாவையே இவர்கள் சீரழித்து வருகிறார்கள். 

 

சனாதனம் என்பது பார்ப்பனியம் தான். பெரும்பான்மையான இந்துக்கள் படிப்பதற்கு உதவியது யார்? சனாதனம் இருக்கும்வரை நமக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று சொன்னவர் அம்பேத்கர். இப்படிப்பட்ட சனாதனத்தை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பார்ப்பனர்களின் உயர்ந்த நிலை தான் சனாதனம். பார்ப்பனர்களில் சிலரே கூட சனாதனத்தை எதிர்க்கின்றனர். இந்து என்கிற பெயரை வழங்கியதே ஆங்கிலேயர்கள் தான். சனாதனத்தை ஒழித்தால் தான் இந்துக்களை காப்பாற்ற முடியும். திமுக ஆன்மீகத்துக்கு எதிரானது என்று இவர்கள் பரப்பும் பொய் எடுபடாது.

 

பார்ப்பனர்களுக்கு எடுபிடிகளாக இருப்பவர்களே பாஜகவின் கருத்துக்களை ஆதரிப்பார்கள். உதயநிதி கொள்கை ரீதியாக சனாதனத்தை தாக்குகிறார். சனாதனத்தை எதிர்த்ததால் தான் இன்று தமிழ்நாட்டில் அனைத்தும் இருக்கிறது. இவர்கள் கொஞ்சமாவது வரலாற்றைப் படிக்க வேண்டும். மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொன்ன மோசடிப் பேர்வழி எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களுக்கு எல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. டெல்லியில் சொல்வதை அப்படியே செய்பவராகத்தான் எடப்பாடி ஆட்சி நடத்தினார்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்” - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

jairam ramesh Review Prime Minister will go to any extent to save his image

 

பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 

 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பின்னணியில் வைத்து செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டு கொண்டுள்ளது.

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து நமது பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கிறார். தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். முதலில் ராணுவத்தில் செல்பி பாயிண்ட்ஸ் அமைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு, மூத்த அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ரத யாத்திரை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

 

தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு முன்பு சந்திரயான் 3 நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அதற்கு முன்பு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் தனது படத்தை அச்சிட்டு வழங்கினார். இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அறுவறுப்பான பண்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். வடகொரியா சர்வாதிகாரிகளைப் போன்ற நிலையை பிரதமர் மோடி எட்டியுள்ளார். இதற்கு தகுந்த பதிலை மக்கள் கூடிய விரைவில் பிரதமர் மோடிக்கு தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சபாநாயகர் அப்பாவு சொன்ன குற்றச்சாட்டுக்கு இ.பி.எஸ். பதில்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

EPS's response to Speaker Appa's allegations

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்களைக் கொண்டு பேசுகிறார்கள்” எனவும், தனக்கு மூன்று முறை ஒருவர் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் தெரிவித்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால்தான் நாம் பேச முடியும். சபாநாயகர் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஜனநாயகப்படியும், அவையின் மரபையும் கடைப்பிடிக்கிறாரா? எனவே அவர் சொல்லி இருப்பது சரியா தவறா என நாங்கள் எப்படி உறுதிப்படுத்த முடியும். சட்டப்பேரவை தலைவர் என்பவர் பொதுவானவர். ஆனால், அவர் ஒரு கட்சிக்காரர் போல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்