Skip to main content

அமித்ஷாவிடம் கெஞ்சிய எடப்பாடி; ஓபிஎஸ் காட்டிய மாஸ் கூட்டம் - டாக்டர் காந்தராஜ்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

 Dr. kantharaj Interview

 

மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து நமது கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார்...

 

ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். பெரிய கூட்டம் அது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கூடியிருந்தனர். சசிகலா, தினகரன் ஆகியோர் வராத நிலையில் அந்தக் கூட்டம் முழுவதும் பன்னீர்செல்வத்திற்காகக் கூடிய கூட்டம். பஸ் இல்லாமல், லாரி இல்லாமல் தானாக வந்த கூட்டம். எடப்பாடி பழனிசாமி கேட்ட பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் என்று அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டனர். வழக்கம்போல் அவர் துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் இன்னொரு பக்கம் பன்னீர்செல்வத்தை வளர்த்து விடுகின்றனர். 

 

இருவரையும் தன்னுடைய பிடியில் வைத்திருக்க விரும்புகிறது பாஜக. தலைவரான பிறகு எதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்? அவரைத்தானே அனைவரும் வந்து பார்க்க வேண்டும்? தங்களுடைய தலைவர் அமித்ஷா தான் என்று எடப்பாடி முடிவு செய்திருக்கிறார். உண்மையான பாஸ் அமித்ஷா தான் என்பது நிரூபணமாகியுள்ளது. நாம் அடித்தால் ஓபிஎஸ் திருப்பி அடிப்பார் என்பது திருச்சி கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சின் மூலம் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும். 

 

அனைத்துமே பாஜகவின் பின்னணியில் தான் நடக்கிறது. அவ்வப்போது ஒரு பரபரப்பான விஷயத்தை அறிவிக்கின்றனர். சசிகலா, தினகரன் ஆகியோரும் ஓபிஎஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தால் அது ஒருநாள் செய்தியாக மாறியிருக்கும். எனவே அவர்கள் ஒவ்வொன்றாகத் தான் செய்வார்கள். ஜூன், ஜூலையில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும். ஆனால், தலைவராக இவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். புதிய தலைமை ஒன்று உருவாகும். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஈரோடு தேர்தலின் மூலம் தெரிந்தது. தொடர்ந்து எட்டு தேர்தல்களில் அவர் தோற்றிருக்கிறார்.

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.