Skip to main content

"தாக்குதலில் அடையாளம் தெரியாமல் போன திமுக தலைவர்கள்; கலைஞருக்குத் தகவல் தந்ததால் கண்காணிப்பில் சிக்கினேன்” - காந்தராஜ் பேச்சு

Published on 28/11/2022 | Edited on 29/11/2022

 

y

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு மறந்திருக்க முடியாது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அமலிலிருந்த இந்தச் சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

 

இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " நான் மருத்துவரா இருந்த காலத்தில் சிறைக்குச் சென்று கைதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தேன். அதற்காக ஒவ்வொரு வாரமும் என்னுடைய துறைத்தலைவர் என்னை அழைத்துச் செல்வார்.

 

ஆனால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பிறகு நான் சிறைக்குச் செல்லவில்லை. ஒரு 10 நாள் அந்த பக்கமே செல்லாமல் இருந்தேன். அதன்பிறகு என்னை மீண்டும் மருத்துவம் பார்க்க அழைத்தார்கள். இடைப்பட்ட இந்த நாளில் திமுகவில் உள்ள பெரும்பாலானவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்திருந்தார்கள். ஸ்டாலின், மாறன், ஆற்காடு வீரசாமி உள்ளிட்ட திமுகவின் பெரிய தலைகள் அனைவரையும் கைது செய்து சென்ட்ரல் ஜெயிலில் அடைத்து வைத்திருந்தனர். மாறன் தலைமறைவாக இருந்தார். ஆனால் கலைஞர் அவரைச் சரணடையச் சொன்னதையடுத்து அவர் ஹைதராபாத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 

 

நான் சிறைக்குச் சென்று பார்த்தபோது ஒவ்வொருவரின் நிலையும் வித்தியாசமாக இருந்தது. ஸ்டாலின் முகமெல்லாம் வீங்கியிருந்து. ஆற்காடு வீராசாமியை எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்குத் தாக்கியிருந்தார்கள். வலியும் வேதனையுடன் அவர்கள் எல்லாம் அங்கிருக்கிறார்கள் என்பதை யாரும் பார்த்த உடனே தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களின் நிலைமை இருந்தது. இதை அங்கே சென்று பார்த்தபோது எனக்கே கஷ்டமாக இருந்தது. ஸ்டாலினை மிகக் கடுமையாகத் தாக்கியிருந்தார்கள். மருத்துவமனையின் நிலைமைகளை நான் கலைஞரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். நாளுக்கு நாள் அதிகார தாக்குதல் அதிகமாக அனைவரையும் அடக்கி ஒடுக்கியது.

 

குறிப்பாக எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்ற தொனியில் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தார்கள். இதற்கிடையே என்னையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். நான் தகவல்களை வெளியில் கூறுவதை மோப்பம் பிடித்துள்ளனர். ஆனால் அந்தத் தகவல் எனக்கு முன்கூட்டியே கிடைக்கப்பெற்றது. அதனால் நான் கொஞ்சம் உஷாரானேன். குறிப்பாக ஸ்டாலினைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திருமணம் முடிந்த கையோடு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சின்னப் பையனாக அவர் இருந்தார். இவர்களின் கொடுமையை அவர் பொறுத்துக்கொண்டுதான் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக அங்கு இருந்து வந்தார். இவ்வாறு தமிழகத்தில் திமுகவைக் குறிவைத்து மிகப்பெரிய கைது நடைபெற்றது.

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.