Skip to main content

பெரியாரின் இதயத்தில் குத்திய முள்ளை நீக்கிய முதல்வர் ஸ்டாலின்...!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

Chief Minister Stalin removes the thorn in Periyar's heart

 

அனைத்து சாதியினரும் கருவறைக்குள் போகும் உரிமையை பெறவேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகரானால் சாதி கட்டுமானம் உடையும் என நம்பினார் பெரியார். அதற்காகத்தான் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டவனை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவேண்டும்மென போராடினார். கோயில் சட்டப்படி அனைவருக்கும் உரிமையானது என்ற பின், கருவறை நுழைவு உரிமை என்பது அனைத்து சாதியினருக்கும் உரிமையானதுதானே என கேள்வி எழுப்பினார்.

 

ஆகமங்கள் தெரிந்தால் தான் கோயிலுக்குள் நுழைய முடியும் என்றால் பிராமணர்கள் அல்லாதவர்களும் ஆகமங்கள் கற்றுள்ளார்கள், அவர்கள் அர்ச்சனை செய்யட்டும் என்றார் பெரியார். சுவாமி சிலைகள் நாங்கள் மட்டுமே தொடவேண்டும் என்றபோது, எதிர்குரல் கொடுத்து போராடினார் பெரியார்.

 

1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆலய கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்தார் பெரியார். நடப்பது பெரியார் ஆட்சி, அவரது ஆட்சியில் அவர் கேட்பது கிடைக்கும் எனச்சொன்னார் அப்போது முதலமைச்சராகயிருந்த திமுக தலைவர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து சேசம்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தகுதியான நபர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என தீர்பளித்தது உச்சநீதிமன்றம். என் நெஞ்சில் குத்திய முள் என மனம் நொந்துப்போய் விமர்சனம் செய்தார் பெரியார். அவர் வாழும்வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கனவு நிறைவேறவில்லை. அவரின் இதயத்தில் அந்த ரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருந்தது.

 

2006ல் கலைஞர் முதல்வரானபோது, நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க என்ன செய்யவேண்டும் என்ற அறிக்கையை வாங்கி சட்டவிதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டமசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றினார். 2007 மே 11ந் தேதி தமிழகம் முழுக்க அனைத்து சாதியினருக்கான பயிற்சி பள்ளிகள் 6 இடங்களில் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கவிழாவில் பேசிய முதலமைச்சராக இருந்த கலைஞர், பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை இப்போது தான் எங்களால் எடுக்க முடிந்தது என்றார் நா தழுதழுக்க.

 

Chief Minister Stalin removes the thorn in Periyar's heart

 

தமிழ்நாட்டில் 6 இடங்களில் சைவ, வைணவ முறைப்படி பயிற்சி பள்ளிகள் நடைபெற்றன. பல சாதிகளை சேர்ந்த 210 மாணவர்கள் ஆகம பள்ளியில் இணைந்து பயின்றனர். இந்த சட்டத்தையும், அரசாணை, பள்ளி செயல்படுதலை எதிர்த்து மதுரை ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்காமலே அந்த பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன.

 

2007 முதல் பலமுறை வழக்கை விசாரணைக்கு எடுக்கச்சொல்லி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் தீட்சதகர்கள் அவர்களுக்கு சாதகமானவர்கள் தடை ஏற்படுத்திக்கொண்டே  வந்தார்கள். 8 ஆண்டுகளுக்கு பின் 2015 ஏப்ரல் 7 ஆம் தேதி நீதிபதிகள் ரன்ஜன்கோகாய், எம்.இ.ரமணா தலைமையிலான அமர்வுமுன் இந்தவழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. ஆதிசிவாச்சாரியர்கள் சார்பாக பிரபல வழக்கறிஞர் பராசரன், தமிழகரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பாக வழக்கறிஞர் காலின்கன்சல்வேஸ் வாதாடினார்கள்.

 

வழக்கறிஞர் பராசரன், பழக்க வழக்கங்கள் மாற்றக்கூடாது, சாதி தீண்டாமை பற்றி சொல்லக்கூடாது. ஆகமவிதிகள்படி அந்தந்த கோயிலுக்கு அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் தான் பூஜை செய்யனும், மற்றவர்கள் செய்தால் தீட்டு பட்டுடும். 1972ல் சேசம்மாள் வழக்கில், ஆகமத்தை மீற மாட்டோம்ன்னு அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ளது. அதை மீறி அரசாங்கம் ஜீ.ஓ போட முடியாது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பழக்கவழக்கம் உள்ளது. அதை மீறக்கூடாது என்று தன்னோட வாதத்தை வைத்தார்.

 

இதற்கு பதிலடியாக தமிழக அரசு சார்பில் ராவ் வாதாடும்போது, அர்ச்சகர் என்பவர் கோயிலில் ஒரு ஊழியர் தான். அர்ச்சகர் பணி நியமனம், நீக்கம் அதிகாரம் அரசுக்கு மட்டும்மே உண்டு. இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது எனச்சொல்வது தவறானது. மத உரிமை என்கிறார்கள். மத உரிமையில் தவறு இருந்தால் அதை சரி செய்ய அரசாங்கம் தலையிடும் உரிமையுள்ளது. இந்த விவகாரத்தில் மதத்தில் நாங்கள் தலையிடவில்லை. கோவிலில் ஊழியர் நியமனம் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் எங்களது அதிகாரத்தை செலுத்தியிருக்கிறோம். ஒரு ஊழியரை நியமனம் செய்ய அவருக்கு தகுதியிருக்கிறதா என்பதை தான் நாங்கள் இதில் பார்க்கிறோம்மே தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. புதியதாக நியமிப்பதன் மூலம் தற்போது பணியில் இருப்பவர்கள் பாதிக்கப்படபோவதில்லை. இதுவரை நாங்கள் யாரையும் பணி நியமிக்காதபோது, நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என இவர்கள் வந்ததே தவறு என வாதத்தை வைத்தார்.

 

அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் காலின்கன்சல்வேஸ் வாதத்தின்போது, பழக்க வழக்கங்கள் என்பது சட்டப்படியானவை, சட்டத்திற்கு புறம்பானவை என இரண்டு உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் போது எதிர்க்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட சாதியை தவிர மற்ற சாதிக்காரர்கள் தொட்டால் சாமி தீட்டுப்பட்டுவிடும் என சொல்வது சாதி தீண்டாமையாகும். இது தீண்டாமை சட்டப்படி தவறு. மத உரிமையில் தலையிடகூடாது என்கிறார்கள், மத உரிமை பற்றி அவர்கள் எப்போது கேட்கலாம் என்றால், அவர்களே கோயில் கட்டி, அவர்களே பணி செய்யும் போது இது எங்கள் கோயில் இங்கு நாங்கள் தான் பணி செய்வோம் என உரிமை கோர முடியும். பொது கோயில்களில் அப்படி கேட்கமுடியாது. இந்த கோயில்கள் அந்த காலத்தில் ராஜாக்கள் கட்டியது. அப்போது ராஜாக்கள் பணியாளர்களை நியமித்தார்கள், இப்போது அரசாங்கம் நியமிக்கிறது. அதில் தற்போது பணியாற்றுபவர்கள் உரிமை கோர முடியாது. அவர்கள் சொந்தமாக கட்டிய கோயிலில் கூட தவறுகள் நடந்தால் அரசாங்கம் தலையிடும் உரிமை உள்ளது. ஆகமவிதிகளை இந்த சட்டம் மீறவில்லை. விதிமுறைகளின் அடிப்படையில் பயிற்சி பள்ளி, பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டது. அங்கு படித்தவர்கள் தகுதியானவர்கள், அவர்கள் தீட்சை பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு கோயிலில் அர்ச்சகராகும் தகுதியுள்ளது. மதுரை சிவாச்சாரியார்களுக்கு அவர்கள் கோயில் பற்றி மட்டுமே பேசும் உரிமையுள்ளது. மற்ற கோயில்களில் யாரை நியமிக்க வேண்டும் என அவர்கள் சொல்லக்கூடாது என வாதம் வைத்தார்.

 

2015 ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் அந்தந்த கோயில் ஆகமவிதிகளை பின்பற்றி அர்ச்சகர் நியமனம் செய்யலாம் என்றே சொல்லப்பட்டது. இந்த தீர்ப்பில் வாத பிரதிவாதிகள் எழுந்தது.

 

2018ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற கலைஞர் கொண்டுவந்த திட்டத்தின்படி மதுரை அருகிலுள்ள அய்யப்பன் கோயிலில் தலித் இளைஞர் ஒருவர் அறநிலையத்துறையின் சார்பில் நியமிக்கப்பட்டார். அதன்பின் அந்த விவகாரம் தூக்கி தூரவைக்கப்பட்டது.

 

Chief Minister Stalin removes the thorn in Periyar's heart

 

இந்நிலையில் 2021 தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்தபின், ஆட்சிக்கு வந்த 100வது நாள் நிகழ்வில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தின்படி படித்து பட்டம் பெற்று தீட்சை பெற்ற 206 மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பூஜை செய்தவற்கான ஆணையை வழங்கி பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

 

பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை கலைஞர் நீக்க முயன்று இறுதியில் மு.க.ஸ்டாலின் நீக்கி வெற்றி பெற்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.