Skip to main content

ஸ்கெட்ச் போட்டவருக்கே ஸ்கெட்ச்; பா.ஜ.க.வை அதிர வைத்த தி.மு.க

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

 

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் நடந்த தள்ளுமுள்ளு வாக்குவாதம், அதை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தேசியக்கொடி போட்ட கார் மீது செருப்பு வீச்சு விவகாரம் பதற்றப் பரபரப்பை உருவாக்கியது. மதுரையில் தி.மு.க.வினர் ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம், ஆங்காங்கே அண்ணாமலை, டாக்டர் சரவணன் படம் எரிப்பு என்று கொந்தளித்தனர். இதையடுத்து, டாக்டர் சரவணன் ஆவேச பேட்டியளித்தார். சில மணிநேரம் கழித்து, சரவணன் தனது மருத்துவமனையின் பின்பக்கம் வழியாக வெளியேறிய தகவல் கசிந்தது. அங்கே பாதுகாப்புக்காக நின்ற பா.ஜ.க.வினரில் ஒருவர் கூட இல்லை.

 

இரவு 12 மணியை தாண்ட பாஜக டாக்டர் சரவணன் அமைச்சர் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்க வந்துவுள்ளார் என்ற தகவல் வர... நாம் அங்கு சென்றோம் அமைச்சரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சரவணன், "நடந்த சம்பவத்திற்க்கு அமைசர் பி.டி.ஆர்.தியாகராசனிடம் வருத்தம் தெரிவித்தேன் என்னால் மதவாத அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. அது என்னால் விரும்பதக்கதாக இல்லை அதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன். தாய் கட்சியில் மீண்டும் இணைந்தால் தவறில்லை, வேறு எதுவும் கேட்காதீர்கள்'' என்று காரில் ஏறிப் போனார்.

 

ஒரு சில மணி நேரங்களில் என்ன நடந்தது?

 

மு.க.அழகிரி ஆதரவாளர் ஒருவர் நம் லைனுக்கு வந்தார். "எல்லாம் எங்க அண்ணன் போட்ட ஸ்கெட்ச்தான். ஏர்போர்ட்டில் நடந்த அந்த சம்பவத்தை அழகிரி அண்ணன் பார்த்ததும் மிகவும் கொதித்துப்போனார். சரவணன் முதலில் கொடுத்த பேட்டியும் கொந்தளிப்பாக்கியது. உடனே டாக்டர் சரவணனின் மாமனார் சேதுராமனுக்கு போனை போட்டு, "நாளைக்கு விடியறதுக்குள்ள உங்க மருமகன் மன்னிப்பு கேட்கணும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. விலகி இருந்தால் எதற்கும் வரமாட்டேன் என்று நினைக்காதீர்கள்"னு கோபப்பட்டார். அதற்கப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என்றார் அந்த ஆதரவாளர்.

 

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

 

நாம் பி.டி.ஆர். வீட்டில் இருந்த சில தி.மு.க.வினர்களிடமும் விசாரித்ததில், "அழகிரி கோபப்பட்டதெல்லாம் தெரியவில்லை. தலைமை மிகவும் கோபமாக இருந்தது நிஜம். முதல்வரில் ஆரம்பித்து சபரீஸன், உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சு வரை லைன் பிஸியாக இருந்தது. சபரீசன் ஒவ்வொரு நிகழ்வையும் அப்டேட் செய்தபடி இருந்தார். சரவணனுக்கும் தொடர்ந்து போன்கால்கள். அப்புறம்தான் அமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கேட்டார். சரவணனை சந்திக்க முதலில் ஒப்புக்கொள்ளாத அமைச்சர், பின்னர் சபரீசனிடமிருந்து போன் வந்த பிறகே, சரவணனை வரச்சொல்லியிருக்கிறார்.

 

நாம் சரவணனிடம் பேசினோம். "விரைவில் தலைவரை சந்திக்க உள்ளேன். பா.ஜ.க.வில் மனமும் கொள்கையும் ஒப்பாமல்தான் பயணித்தேன். தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன்'' என்றவர், பா.ஜ.க.வின் மதவாத அரசியல் பற்றியும் விளக்கினார். தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை இரட்டைத் தலைமைதான். அண்ணாமலையால் எந்த முடிவும் எடுக்க முடியாது எல்லா முடிவுகளுமே தமிழக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரான ‘கேசவவிநாயம்’ வைத்ததுதான் எல்லாமே. அவர் அண்ணாமலைக்கு விடும் உத்தரவுபடிதான் எல்லாம் நடக்கும்.

 

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

 

ஒவ்வொரு மாதமும் என்ன செய்யவேண்டும் என்று சார்ட்டே அங்கிருந்துதான் வருகிறது அதற்கு ஒரு சம்பவம் உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் மேலூரில் ஒரு முஸ்லிம் பையனும் இந்து பெண்ணும் காதலித்து திருமணம் செய்ய இருந்த போது, அதற்கு இரு தரப்பும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண் தூக்குப்போட்டு இறந்துபோக, அந்தப் பையனும் மருந்து குடிக்க, அவர் பிழைத்துகொண்டார். இதை கையில் எடுத்த பா.ஜ.க.வினர் அந்தப்பெண்ணின் "தாயிடம், முஸ்லிம் மதத்திற்கு மாறச் சொன்னார்கள் அதனால்தான் என் மகள் தூக்கு போட்டு இறந்தது' என்று சொல்லச் சொல்லி வாக்குமூலம் வாங்கச் சொன்னார்கள். நானும் கேட்டேன். "அப்படியெல்லாம் இல்லை... நாங்கள் தாயா பிள்ளையாக பழகுறோம்'னு அந்தப் பெண்ணின் தாய் மறுக்க... நான் பின்வாங்கினேன். இது என் மனதை மிகவும் பாதித்தது.


அன்றிலிருந்து ஆர்.எஸ்.எஸ். விநாயகம் என்னை ஓரங்கட்ட ஆரம்பித்தார்'', என்றவரிடம்... "அழகிரி உங்கள் மாமனார் சேதுராமனிடம் பேசியதாக் சொல்கிறார்களே?'' என்றோம். "அப்படி எல்லாம் இல்லை. என் மனசு கேட்கவில்லை நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. என்னை மீறி எனக்குப் பின்னால் ஏதோ சதி நடந்திருக்கிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தேன். என்னால் பா.ஜ.க.வில் தொடர்ந்து பயணிக்க முடியாது'' என்றார்.

 

 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.