Skip to main content

இந்து அரவணைப்பு அரசியல்! -தி.மு.க. வியூகம்!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
DMK

 

 

மத்திய, மாநில உளவுப்பிரிவுகள் இந்த கரோனா காலத்தில் எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க.வுக்கே ஆதரவு பலமாக இருப்பதாக சொல்வதை, மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரையும் இந்த முடிவுகள் அதிர்ச்சி அடைய வைத்தாலும் ஆட்சியதிகாரம் நீடிப்பதால் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள், குடிமராமத்து பணிகள், காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தல் போன்ற புதுப்புது அரசு திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

 

மக்களின் மனநிலையை மாற்றும் வகையில், தி.மு.க.வை இந்து விரோத கட்சியாக காட்டுவதற்கு கந்த சஷ்டி கவசம் பற்றிய யூடியூப் சர்ச்சை முதல் பலவற்றையும் இழுத்து வருகிறது பா.ஜக. தரப்பு. அதற்கேற்ப வழக்குகளைப் பதிவுசெய்து ஊடக விவாதமாக மாற்றுகிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.கவுக்கு எதிரான சின்னச்சின்ன செய்திகளும் சமூக வலைதளத்தில் மதரீதியாக வைரலாக்கப்படுகின்றன. தி.மு.க.வோ, இதுபோன்ற பரப்புதல்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு ரியாக்ட் செய்யாமல், தனக்கான வாக்குவங்கியைப் பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

 

"நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்து அதில் இந்துக்களுக்கு 65.5% இடஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க.தான். இதனால், ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைவாய்ப்பு கிடைத்தது. டாக்டர்கள்-இன்ஜினியர்கள் உருவாகினார்கள். ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ, ஓ.பி.சி. எனப்படும் பிற்படுத்தப்பட்ட- மிக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்காமல் இந்துக்களுக்கு துரோகம் செய்துவருகிறது'' என்று தி.மு.க.வினர் பதிலடி கொடுக்கின்றனர்.

 

dmk

 

அத்துடன், தி.மு.க. எதிர்ப்புணர்வு அதிகம் கொண்ட பிராமண சமுதாயத்தினரை அரவணைக்கும் விதமாக, "ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளை தி.மு.க.வினர் செய்துள்ளனர். குறிப்பாக, திருச்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, ஸ்ரீரங்கம் கோவிலில் பணிபுரியும் ஆயிரம் பிராமணர்களின் குடும்பங்களுக்கு மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இருக்கிறார். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளரான டாக்டர் வி.சி.ஆர்.குமரன், திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீவீரராகவர் பெருமாள் கோவிலில் பணிபுரியும் இருநூறுக்கும் மேற்பட்ட பிராமணர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பிராமணர்களை எந்த கட்சியினரும் சரிவர கண்டு கொள்ளவில்லை என்ற வெற்றிடத்தை நிரப்பும் தி.மு.க.வின் இந்த செயல்பாடுகளும், அந்த சமுதாயத்தினரிடம் ஓரளவுக்கு எடுபடத்தான் செய்திருக்கிறது.

 

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.