Skip to main content

“அப்ரண்டிஸ் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவை பற்றிப் பேச எந்தத் தகுதியுமில்லை ; அதிமுக ஆட்சியில் மந்திரிகள் கூறு போட்டு கொள்ளை அடித்தனர்..." - குடியாத்தம் குமரன்

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

gh

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்குக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் இருக்கிறார்கள்; ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி 10 வருடம் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியது என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் என்ன மக்கள் விரோத செயல்பாடு நடைபெற்றது என்று கூறியுள்ளார். அப்படி ஏதாவது இவர் ஆட்சியில் நடைபெற்றதைப் போல் நடந்துள்ளதா? இவரின் பத்தாண்டு ஆட்சியில் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடியதைப் போல் அவர் திமுக ஆட்சியைக் குறைசொல்ல வந்துவிட்டார். இவரின் ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற அராஜகங்கள் கொஞ்சமா? எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது. எத்தனை பேர் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். இவர்களை வரலாறு கூட மன்னிக்காது. குறை கூறும் அளவுக்குத் தமிழக அரசு எந்த வித தவறும் செய்யவில்லை. 

 

இவர் தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியில் தனக்குத் தானே அமர்ந்துகொண்டுள்ளார். புதிய வேலையில் சேரும்போது ஆறு மாதம் அப்ரண்டிஸ் ஆக பணியாற்றுவதைப் போல் இவர் தற்போது ஆறு மாதத்திற்கு அப்ரண்டிஸ் பணிக்கு வந்துள்ளார். ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அவர் வேலை இல்லாமல் போகப்போகிறார் என்பது மட்டும் நிஜம். இவர் என்னமோ தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ததுபோல் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். இவரது ஆட்சியில் தங்க வைர மழையைப் பொழிய வைத்ததுபோல் பேசுகிறார். தமிழகத்தை 10 ஆண்டுக் காலத்தில் சீரழித்தவர்கள் இவர்கள். இவர்கள் மற்றவர்களைப் பற்றிப் பேசக்கூடிய தார்மீக தகுதியைக் கூட இழந்துவிட்டார்கள். 

 

இவர்கள் ஆட்சியில் மந்திரிகள் அடித்த கொள்ளைகள் கொஞ்சமா நஞ்சமா, ஆவினில் மட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1.5 கோடிக்கு சுவீட் சாப்பிட்டுள்ளார். உலகத்திலேயே இந்த அளவுக்கு ஒருத்தர் சுவீட் சாப்பிட்டது இவர் ஒருத்தராகத்தான் இருக்கும். செக் பண்ணி பார்த்தா இவருக்குத்தான் சுகர் லெவல் அதிகமாக இருக்கும். இவர் மட்டுமா கொள்ளை அடித்தார், ஒட்டுமொத்த அமைச்சரவையே கொள்ளை அடிப்பதையே குறியாக வைத்துச் செயல்பட்டனர். முன்னாள் அமைச்சர் குட்கா வழக்கில் அடித்த கொள்ளை உலகத்துக்கே தெரியும். குட்கா விற்கக்கூடாது என்று தமிழகத்தில் அதைத் தடை செய்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரது அமைச்சர்களே குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று தமிழகத்தில் அதைக் கடலாகப் பெருக்கெடுக்கவிட்டனர். இதை இல்லை என்று மறுப்பார்களா? இந்த சூழ்நிலையில் அவர்கள் திமுகவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறை சொல்கிறார்கள். 

 

 

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Next Story

விஜய பிரபாகரனுக்கு எந்த தொகுதி; தேமுதிக அலுவலகம் வந்த எடப்பாடி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Vijaya Prabhakaran in Virudhunagar; Edappadi came to the DMDK office

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.

மேலும், அதிமுகவில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக போட்டியிடும் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தேமுதிக அலுவலகம் உள்ள கோயம்பேட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.