Skip to main content

தன்னை பற்றி வதந்தி பரப்பியது பாஜகவா? அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்!  

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
amit shah



கரோனா பிடியில் இந்தியா அல்லோகல்லோகப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசின் மிக முக்கியத்துறையான உள்துறையின் அமைச்சர் அமித்ஷாவின் தலை வெளியே தெரியாமல் இருந்தது. அவர் எங்கே? என்கிற கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்த நிலையில், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கலந்துரையாடலில் காட்சித் தந்தார் அமித்ஷா. 
 

அதை கண்டு பாஜக தலைவர்கள் மட்டுமல்ல; இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. இது குறித்து டெல்லியோடு தொடர்புடைய பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, தேசிய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே மோடிக்கும் அமித்ஷாவுக்குமிடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அது அதிகரிக்கவும் செய்தது. இதனால்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வந்தபோதுகூட அமித்ஷாவின் பங்களிப்பு அதில் பெரிதாக எதுவும் இல்லை. ஒதுங்கியே இருந்தார் அமித்ஷா. 


இந்த நிலையில்தான், கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் பரவியது. இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளும் கடினமாக உழைத்தாலும், உள்துறை, சுகாதார துறை, நிதித்துறை ஆகிய அமைச்சகத்தின் பணிகள்தான் அதிகம். அதனாலேயே, இந்த மூன்று துறைகளுடன் தினமும் ஆலோசித்தபடி இருந்தார் மோடி. ஆனால், மூன்று துறைகளில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோரிடம் விவாதித்த அளவுக்கு அமித்ஷாவிடம் மோடி விவாதித்ததாக தெரியவில்லை. அது குறித்த பதிவுகளும் இல்லை. 

இன்னும் சொல்லப்போனால், மோடியுடனான கலந்துரையாடல் மற்றும் விவாதங்களின்போது அமித்ஷா கலந்துகொண்டதும் இல்லை. தன்னை மேலிடம் புறக்கணிப்பதாக கருதினார் அமித்ஷா. அதனால், வீட்டிலேயே இருந்தார். அது குறித்து கேள்வி எழுந்தபோது, உடல் நலக்குறைவால் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளையும் கரோனா தடுப்பு பணிகளில் உள்துறையின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார் என பாஜக தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்டது.  

 


இதனால் சில நாட்கள் அமித்ஷா பற்றிய பேச்சு இல்லாமலிருந்த நிலையில், திடீரென அவரது உடல்நலம் குறித்து தேவையற்ற முறையில் வதந்திப்பரவ, அது குறித்து விளக்கமளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அமித்ஷா. அந்த வதந்திகளை பாஜகவிலுள்ள சிலர்தான் பரப்பியிருக்க கூடும் என்று அமித்ஷாவுக்கு சந்தேகம் உண்டு. 

 

 

 


இந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ்.ஸிலுள்ள அமித்ஷாவின் நண்பர்கள் கொடுத்த அட்வைஸ்படி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னை எந்த நோயும் தாக்கவில்லை என்றும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், மாநில முதல்வர்களுடன் மோடி நடத்திய ஆலோசனையிலும் கலந்துகொண்டார். இதுதான், வீட்டில் முடங்கியிருந்த அமித்ஷாவை வெளியே கொண்டு வந்ததன் பின்னணி!  என விவரிக்கிறார்கள் பாஜகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.