Skip to main content

“ஆளுமைகளுக்குத் தான் கோபம் வரும்; அடிமைகளுக்கு கோபம் வராது” - அலிம் அல் புகாரி 

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 Alim Al Buhari  interview

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் அலிம் அல் புகாரி விரிவாகப் பேசுகிறார்

 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பதற்கு காரணம் இந்தியா கூட்டணியின் மீது அவர்களுக்கு உள்ள பயம் தான். இதுவே இந்தியா கூட்டணிக்கான வெற்றி. மக்களுக்கு நல்லது செய்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே மோடிக்கு இருக்காது. அதானிக்கு நல்லது செய்வது தான் அவருடைய நோக்கம். இந்தியா கூட்டணியின் பெயரை தீவிரவாதிகளோடு ஒப்பிடும் அளவுக்கு மோடிக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவும் பயத்தில் எடுக்கப்பட்டது தான். 

 

சுதந்திரம் கிடைத்த பிறகும் சில ஆண்டுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாகவே நடைபெற்றன. அதன் பிறகு நடைபெற்ற மாற்றங்களால் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இப்போது இதை மீண்டும் கொண்டுவருவதற்கான காரணம் என்ன? தேர்தலுக்கு முன்பு இது ஏன் இவர்களுக்குத் தோன்றுகிறது? இதையே காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய ஆட்சியை நீங்கள் ஏன் கலைத்திருக்கக் கூடாது? ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பேச்சு அதிமுக ஆட்சியில் எழுந்தபோது அதை அவர்கள் எதிர்த்தனர். இப்போது விஷமத்தனமாக ஆதரிக்கின்றனர். 

 

தாங்கள் இனி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று அதிமுக முடிவு செய்துவிட்டது. கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து வரும்போது ஆளுமைகளுக்குத் தான் கோபம் வரும். அடிமைகளுக்கு கோபம் வராது. நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக ஆட்சி தான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டுவந்தால் மாநிலக் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் வரும். அதனால் அவர்களுக்குள் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்வார்கள். 

 

சர்வாதிகாரம் என்பது உச்சத்தை அடைந்து, அதன் பிறகு தான் வீழும். பாஜக இந்த நாட்டுக்கு செய்த அட்டூழியங்களை ஒருநாள் முழுவதும் பேசலாம். நீதிபதி லோயாவைக் கொலை செய்தது யார்? 2500 இஸ்லாமியர்களைக் கலவரம் மூலம் கொன்றது யார்? மக்களுக்கு இது எதுவும் தெரியாதா? கர்மாவை நம்பும் பாஜகவுக்கு இதெல்லாம் தங்கள் மீதே திரும்பும் என்று தெரியாதா? ஜெயலலிதாவைக் கொன்றது யார்? அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஏன் பிரதமர் நேரடியாக வரவில்லை? மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவே மணிப்பூராக மாறும் என்று பாஜகவால் ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

 

மணிப்பூர் மக்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசும்போது மோடி நக்கல் செய்தார். இது ஆணவத்தின் உச்சம். இது இன்னும் உச்சத்தை அடைய வேண்டும். அப்போதுதான் அவர்கள் வீழ்வார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அவர்கள் அறிவிக்கும்போது, அவர்களுடைய முடிவின் ஆரம்பத்தை அவர்கள் அடைவார்கள்.
 

கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.