Skip to main content

திருத்தப்பட்ட விதிகள்; அன்னபோஸ்ட் எடப்பாடி!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

அதிமுகவின் தலைமை மறைந்த பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்து, பின் ஒருவர் தலைமையில் மீண்டும் அதிமுக இணைவது தொடர்கதையாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. பின்னர் ஜானகி தனது அணியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைத்துவிட்டு அரசியல் வாழ்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார்.  

 

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற பிரச்சனை அதிமுகவில் தற்போது நிலவி வருகிறது. அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பி.எஸ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து  தர்ம யுத்தத்தை தொடங்கினார். அதில் கட்சிக்குள் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

இதனிடையே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ‘அம்மாவின் இடத்தை நிரப்ப சின்னம்மா நீங்கள்தான் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும்’ என்று மூத்த தலைவர்கள் என பலரும் சசிகலாவின் வீட்டின் முன்பு காத்துக் கிடந்தனர். அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று பலரும் நினைத்திருந்த தருணத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சிறைக்கு சென்றார். ஆனால் அதற்கு முன்பு தனக்கான ஒரு நபரை முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்த சசிகலா, அதுவரை தமிழக மக்கள் யாருக்கும் பரிச்சயம் இல்லாத இ.பி.எஸ்ஸை முதல்வராக்கிவிட்டு சிறைக்கு சென்றார். 

 

ad

 

தொடர்ந்து முதல்வரான இ.பி.எஸ், சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும், ஓ.பி.எஸ். வைத்த கோரிக்கைகளான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து கட்சியின் விதியில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்ஸையும், அவருக்கு ஆதரவான 17 எம்.எல்.ஏக்களையும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதன்படி கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போன்று ஆட்சி அதிகாரத்தில் முதல்வராக இ.பி.எஸ்ஸும், துணை முதல்வராக ஓ.பி.எஸ்ஸும் பிரித்துக் கொண்டனர். அதன்பிறகு நடைபெற்ற 4 ஆண்டுகால ஆட்சியில் இருவரும் சேர்ந்தே பயணித்தாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் நீயா நானா போட்டி ஏற்படவே கட்சிக்குள் இரட்டை தலைமையால் சில முடிவுகள் தீர்க்கமாக எடுக்க முடியவில்லை என்று கூறி மீண்டும் ஒன்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. 

 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்தனர். கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பி.ஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்ட நிலையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்ப, உடனடியாக மேடையிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படவே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுகவின் பொதுக்குழு கூடும் என அறிவித்தார்.

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

தமிழ்மகன் உசேன் சொன்னபடியே அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி கூடியது. அதன்பிறகு கட்சியின் இரட்டைத் தலைமை பதவிகள் நீக்கப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு ஆர்.பி. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல கட்ட விசாரணைக்குப் பிறகு இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், இ.பி.எஸ் இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட கட்சி இ.பி.எஸ் வசமானது. 

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

உட்கட்சி தேர்தலை நடத்தி புதிய பொதுச்செயலாளரை நான்கு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், தேர்தல் மார்ச் 26 தேதி நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாளே வெற்றி பெற்றவர் யார் என்றும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவரை எதிர்த்து யாரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை என்கின்றனர்  எடப்பாடியின் விசுவாசிகள். இதனால் எடப்பாடி பழனிசாமி அன்னபோஸ்ட் முறையில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.