Skip to main content

“கார்ப்பரேட் பிரதமராக மோடி செயல்படுகிறார்” -  வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Advocate RS Tamil Vendhan Interview

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பகிர்ந்துகொள்கிறார்

 

உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ளார் ஒரு அயோத்தி சாமியார். ரவுடி பாகவதர் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற போலி சாமியார்களைத் தான் நாம் எதிர்க்கிறோம். ரத்தம் குடிக்க நினைப்பதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுடைய அடிப்படைக் கொள்கையே இதுதான். தன்னுடைய கருத்தில் உதயநிதி உறுதியாக இருக்கிறார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். சாமியார் தலையைக் கொண்டுவந்தால் 100 கோடி தருகிறேன் என்கிறார் சீமான். அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த வேண்டும். 

 

சீமான் போன்றவர்களின் கரிசனம் திமுகவுக்கு தேவையில்லை. உளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை கூட சீமானைக் கலாய்க்கிறார். சனாதனத்தை மையப்படுத்தி தேர்தலை சந்தித்தால் பாஜக நோட்டாவுக்கு கீழே சென்றுவிடும். பார்ப்பனியம் எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும். நாங்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சக மனிதர்களை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்கள். 

 

உதயநிதிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுகிறார். உதயநிதி மீது இந்தியா முழுவதும் வழக்கு போட வேண்டும் என்கிறார்கள். ஹெச்.ராஜா பேசியதற்கெல்லாம் உலகம் முழுவதும் வழக்கு போட வேண்டும். இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை ஒருங்கிணைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் தான். இந்தக் கூட்டணி இணைந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உடைப்பதற்குத் தான் உதயநிதி பேசியதை கையிலெடுத்தார்கள். கலைஞரின் பேரன் அவர். அவரைக் கண்டு இவர்கள் பயந்து தான் ஆக வேண்டும். 

 

பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு தான் பாஜக அரசு. இப்போது இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இவர்கள் புதிய இந்தியா என்று சொன்னார்கள் போல. இந்தியாவின் பெயரை மாற்றினால் இப்போதிருக்கும் சான்றிதழ்களை என்ன செய்வது? இதில் என்ன விளையாட்டு? மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அவர்கள் எதையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க ஒரு கார்ப்பரேட் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார். மோடி பாய்ச்சிய விஷத்தை அகற்றுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று நிர்மலா சீதாராமனின் கணவர் கூறுகிறார். அந்த நிலையில் தான் இருக்கிறது இவர்களுடைய ஆட்சி.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்கில் காணலாம்...

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்” - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

jairam ramesh Review Prime Minister will go to any extent to save his image

 

பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 

 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பின்னணியில் வைத்து செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டு கொண்டுள்ளது.

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து நமது பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கிறார். தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். முதலில் ராணுவத்தில் செல்பி பாயிண்ட்ஸ் அமைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு, மூத்த அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ரத யாத்திரை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

 

தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு முன்பு சந்திரயான் 3 நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அதற்கு முன்பு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் தனது படத்தை அச்சிட்டு வழங்கினார். இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அறுவறுப்பான பண்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். வடகொரியா சர்வாதிகாரிகளைப் போன்ற நிலையை பிரதமர் மோடி எட்டியுள்ளார். இதற்கு தகுந்த பதிலை மக்கள் கூடிய விரைவில் பிரதமர் மோடிக்கு தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்; எம்எல்ஏ தலைமையில் ரத்த தானம்!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Blood donation lead by MLA or Minister Udhayanidhi  birthday in Cuddalore

 

கடலூரில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். 

 

முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் இளைஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், கர்ணன், சரத் தினகரன், மகேஸ்வரி, விஜயகுமார், பாருக் அலி, கீர்த்தனா, ஆறுமுகம், ராதிகா, பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்