Skip to main content

நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த...தலைமை மீது கொந்தளிப்பில் அ.தி.மு.க. தொண்டர்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

சமீபத்தில் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டு போராடினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வும், தி.நகர் எம்.எல்.ஏ.வுமான சத்யா... எழுநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வகித்து வந்த பதவிகளை ஒரே இரவில் மாற்றி உத்தரவிட்டார். அதில் பலர் எம்.ஜி.ஆர். காலத்து கட்சிக்காரர்கள். அவர்கள் பதறினார் கள். கதறினார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பலர் வீடுகளுக்கும் படையெடுத்தார்கள். அ.தி. மு.க. தலைமைக் கழகத்தை முற்றுகையிட் டார்கள். அவர்களில் நான்குபேர் தீக்குளிக்கவே முயன்றார்கள். மா.செ. சத்யா செய்த அத்துமீறல்களை வெளிப்படையாகவே ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

 

admk



மறுபடியும் தலைமைக் கழகத்திற்கு ஊர்வலமாக வந்தார்கள். இந்தமுறை தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு ""நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்'' என எச்சரித்தது. நொந்துபோன அவர்கள் தலைமை நிலைய அலுவலரான மகாலிங்கத்திடம் மனு கொடுத்துவிட்டு "சத்யா ஒழிக' என கோஷமிட்டுவிட்டுச் சென்றார்கள். நீண்டகால அ.தி.மு.க.வினரின் பதவியைப் பிடுங்கும் சத்யாவின் தெம்புக்கு காரணம், முதல்வர் எடப்பாடிக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் அவர் நெருக்கமாக இருப்பதுதான் என வருத்தப்படுகிறார்கள் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

admk



சத்யா சென்னை மாநகராட்சியில் செல்வாக்காக இருக்கிறார். சென்னை நகரம் முழுக்க சூதாட்ட விடுதிகள், மசாஜ் கிளப்புகள் நடத்து பவர்களுக்குத் துணையாக நிற்கிறார். அவருக்கு உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் துணையாக நிற்க அமைச்சர் வேலுமணி உதவி செய்கிறார். வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எடப்பாடியிடம் மட்டுமின்றி, டெல்லியில் மோடிவரை செல்வாக்குடன் உள்ளனர். இந்த அதிகார செட்-அப் பில்தான் அ.தி.மு.க. இயங்குகிறது. அதனால் அ.தி.மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் கல்லா கட்டுகிறார்கள். மத்தியில் உள்ள மோடி அரசும் லகானை தன் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.


ஓ.பி.எஸ். தலைமையிலான அணியை முற்றிலுமாக ஒழித்துவிட்டார் எடப்பாடி. ஒரு எம்.எல்.ஏ. கூட இன்று ஓ.பி.எஸ். வசம் இல்லை. அமைச்சர் மணிகண்டனின் பதவியை எடப்பாடி பறித்ததுகூட ஓ.பி.எஸ்.ஸுக்கு விடப்பட்ட எச்ச ரிக்கையே. எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.ஸை அவைத் தலைவராக்கிவிட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி வருவதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் எடப்பாடி முடுக்கி விட்டுள்ளார். அதனால்தான் சசிகலாவை நீக்குவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு கூடிய பொதுக்குழுவையும் செயற்குழுவையும் தேர்தல் கமிஷன் உதவியோடு கூட்டாமலிருக்கிறார்'' விவரிக்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.

"அதேநேரத்தில் எடப்பாடி இடத்தைப் பிடிக்கவும், தன்னிச்சையாக செயல்படவும் சீனியர் அமைச்சர்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு டெல்லி துணையும் இருக்கிறது. இது ஈகோ போட்டியாக மாறுகிறது. வேலுமணி, மழைநீரைப் பற்றி டி.வி. விளம்பரத்தில் வந்தவுடன் எடப்பாடி யும் அதேபோல் வீடியோ வெளியிட்டார். மின்துறை விவகாரங்களில் எடப்பாடிக்கு அனுமதி இல்லை. அதேபோல் உள்ளாட்சித் துறையில் எடப் பாடி நுழையவே முடியாது. செங்கோட்டையனின் கல்வி, விஜயபாஸ்கரின் சுகாதாரம் போன்றவை முதல்வர் நுழைய முடியாத துறைகள்' என உள்ளே நடக்கும் மோதல்களையும் சொல்கிறார்கள். 
 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.