Skip to main content

தூத்துக்குடி; ஜெ. மர்ம மரணம்; அடுத்து கொடநாடு கொலை வழக்கு? -அதிர்ச்சியில் எடப்பாடி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும், அதன் தலைவர்களான எடப்பாடி, சசிகலா ஆகியோர் மீதும் அடுத்த ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

அதில் முக்கிய இடம் பெறுவது கொடநாடு வழக்கு, திருச்சி ராமஜெயம் வழக்கு. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் போலீசின் விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்கின்றன. திவாகரின் சம்பந்தி திருச்சியில் உதவி கமிஷனராக இருந்தபோதுதான் ராமஜெயம் கொலையும் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை ஜெயலலிதா உத்தரவுப்படி கொலை செய்ததாக சொல்லப்படும் திண்டுக்கல் ரவுடிகள் மற்றும் ரவி என்கிற ரவுடி ஆகியோரை ராமஜெயம் கொலைவழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு போலீஸ் உட்படுத்தியுள்ளது. சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த இந்த ரவுடிகள், சசிகலாவின் உத்தரவுக்கேற்றவாறு ராமஜெயத்தை கொலை செய்தார்கள் என்பதை உறுதிசெய்ய இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த இருக்கிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

இந்த விசாரணையை இறுதி செய்ய திருச்சிக்கு வந்த ஷகில் அக்தர், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என்று சொல்லப்படுகிறது. சாமி, ரவி தரப்பில் "எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ராமஜெயம் கொலை நடந்தபோது நான் திருப்பதியில் இருந்தேன்” என பதில் கூறுகிறார். நக்கீரன்தான் என்னை இந்த கொலை வழக்கில் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகிறது என அலறிய அவரிடம், அவர் இந்தக் கொலையில் எப்படி சம்பந்தப்படுகிறார் என, தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை போலீசார் முன்வைத்துள்ளனர்.

 

ஆக, ராமஜெயம் கொலை வழக்கு 2012ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு அனுமதிக்கப்பட செய்யப்பட்ட பரிகாரக் கொலை என சி.பி.சி.ஐ.டி. விசாரணை நகர்கிறது. இதிலும் ஆறுமுகசாமி அறிக்கை போல சசிகலா வெளியேற்றம், அவர்களுக்குள் நடந்த சண்டை, ராமஜெயம் கொலை நடந்த அன்று சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டது போன்ற விவரங்கள் விரிவாக வெளியே வரும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

ராமஜெயம் கொலை வழக்கைப் போலவே கொடநாடு வழக்கிலும் ஜெ.வின் அந்தரங்க விஷயங்கள் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா எப்பொழுது கொடநாட்டுக்கு வருவார். வெளிப்படையாக எத்தனை முறை வருவார்? யாருக்கும் தெரியாமல் கொடநாட்டுக்கு எத்தனை முறை வந்து செல்வார்? அங்கு அவர் ரிலாக்ஸாக எப்படி இருப்பார்? கொடநாட்டில் இயங்கும் ஒரு மினி மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படும்? கொடநாட்டில் அமர்ந்து ஜெ.வும், சசியும் எப்படி வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பார்கள். கோடி கோடியாகக் கொட்டப்படும் லஞ்சப் பணம் கண்டெய்னர் கண்டெய்னராக எப்படி கொநாட்டுக்கு வரும்? அவை எப்படி பிரித்தளிக்கப்படும்? கொடநாட்டில் ஜெயலலிதா தனது ரகசியங்களை பூட்டி வைத்திருந்த அறைகள் எத்தனை? அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் என்ன? அங்கிருந்த பணம் எவ்வளவு? அவை கொடநாடு கொள்ளையில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது? என விரிவாக கொடநாடு மேனேஜர் நடராஜன் சாட்சியமளித்திருக்கிறார்.

 

போலீஸ் விசாரணையின் போது விரிவாகப் பேசிய நடராஜன், தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட சொத்துகளை சம்பாதித்திருக்கிறார். அவரை வெளியே விட்டால் ஆபத்து என சசிகலா தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். நடராஜன் மட்டுமல்ல, கொடநாட்டில் கார்பென்டர் வேலை செய்த சஜீவன், ஜெ.வின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக சாட்சியமளித்திருக்கிறார்.

 

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஜெ.வைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். அனுபவ் ரவி, எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகியோருக்கும் கொடநாடு கொள்ளைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

இவை அனைத்தையும் சசிகலாவிடம் கேள்விகளாக கொடநாடு விசாரணை டீம் முன்வைத்து அவரிடமும் வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. இந்த வாக்குமூலங்கள் அனைத்தையும் கோர்ட்டில் பதிவு செய்ததுடன் கொடநாடு விசாரணை டீம், வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்திருக்கிறது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட உள்ளது.

 

இந்தப் புதிய எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமி சேர்க்கப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படி எடப்பாடி, சசிகலா ஆகியோரை மையப்படுத்தி சுழலப்போகும் ராமஜெயம் மற்றும் கொடநாடு வழக்குகளில் பல புதிய கைதுகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி எங்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கிய தனது சம்பந்தியை மீட்கத்தான் பேசினார். எங்களுக்கு தி.மு.க. அரசு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. எங்களைக் காப்பாற்ற எடப்பாடி எதுவும் செய்யவில்லை என கோபத்திலிருக்கும் வேலுமணி, தங்கமணி குரூப் கொடநாடு வழக்கில் எடப்பாடியை வலுவாக சிக்க வைக்க தக்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள் கோவை மாவட்ட அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள்.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.