Skip to main content

போதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க.! கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Kangana Ranaut


போதைப் பொருளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு நடத்தி வரும் வேட்டையில் தமிழ்த் திரைப்படங்களில் முகம் காட்டிய இரு நடிகைகள் சிக்கிக் கொண்டுள்ளனர் என பரபரப்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. பிரபல இந்தி நடிகரும்- பா.ஜ.க.வின் எம்.பி.யாக இருந்து, அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பா.ஜ.க.வை எதிர்த்து பீகாரில் அரசியல் செய்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, ரஜினியின் நாயகியாக "லிங்கா' படத்தில் நடித்துள்ளார். இன்னொருவர் ரகுல் பிரீத் சிங். இவர் நடிகர் கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அத்துடன் 'ஸ்பைடர்', 'தடையறத் தாக்க' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இருவரும் 2017-ம் ஆண்டு, அக்டோபர் 20-ம் தேதி மும்பையில் உள்ள உயர்தர வகுப்பினர் வந்து செல்லும் கோகோ என்கிற கிளப்பில் நடந்த பார்ட்டியில் நடிகை தீபிகா படுகோனேவுடன் கலந்து கொண்டனர். இந்தியாவின் பேட்மிட்டன் நட்சத்திரமான பிரகாஷ் படுகோனேவின் மகள்தான் இந்தி நட்சத்திரம் தீபிகா படுகோனே.

 

பிரபல நடிகரான கரண் ஜோஹர் கோகோ கிளப்பில் நடத்திய பார்ட்டி யில் தீபிகா, சோனாக்ஷி, ரகுல் பிரீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் கரண் ஜோஹர் ஒரு வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரும் ஒரு விதமான போதையில் இருந்துள்ளனர். அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மஞ்சித்சிங் என்கிற சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் போலீசில் புகார் கொடுக்கப்போகிறேன் என அறிவித்தார். உடனே மோடிக்கு நெருக்கமான நடிகையான கங்கனா ரணவத், தீபிகா படுகோனேக்கு போதைப் பழக்கம் உள்ளது. அவர் காதலில் தோல்வி அடைந்தவர். அதனால் ஏற்பட்ட மனச்சோர்வுக்கு காரணம் தேடி போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். எனவே அவரை போதைத் தடுப்பு போலீசார் விசாரிக்க வேண்டும் என ட்வீட் செய்தார். கங்கனாவின் இந்த ட்வீட் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது.

 

dddd

 

சுசாந்த் சிங் ராஜ்புத் என்ற நடிகரின் தற்கொலையைத் தொடர்ந்து ரியா சக்கரபர்த்தி என்கிற காதலியும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து கங்கனா ரணவத் பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகளை மட்டும் குறி வைக்கிறார். ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற நடிகர்களில் யாரையுமே அவர் குறைசொல்வதில்லை. நடிகைகளைக் குறை சொல்லும் கங்கனா, இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்தவர். இந்தியாவில் அதிகம் கஞ்சா பயிரிடப்படுவது இமாச்சலப் பிரதேசத்தில்தான். ஒரு முறை கஞ்சா போதையில் டெல்லி விமான நிலையத்தில் அரைகுறை ஆடைகளுடன் கங்கனா சுற்றித் திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிறைய இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தது.

 

ddd

 


ஆனால், கங்கனாவின் ட்வீட்டை மிகவும் சீரீயஸாக எடுத்துக்கொண்ட மத்திய போதைத்தடுப்பு போலீசார் கரண் ஜோஹர் நடத்திய பார்ட்டிக்கு முன்பாக தீபிகா, ஹசிஸ் என்ற போதைப்பொருள் கிடைக்குமா என தனது மேனேஜரை வாட்ஸ் அப்பில் கேட்ட பதிவு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை வைத்து தீபிகாவையும் அவரது மேனேஜரையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சோனாக்ஷியையும், ரகுல் பிரீத்சிங்கையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள். பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பீகார் மண்ணின் மைந்தனான சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையை சி.பி.ஐ விசாரிக்க ஆரம்பித்தது. கடைசியில் அது தற்கொலை என அந்த வழக்கை கை விட்டுவிட்டு அவரது காதலி ரியாவை சுசாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதைப் பொருள் கொடுத்தார் என வழக்கை திசை மாற்றியது.

 

dddd

 

அதேபோல் பீகார் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என பீகாரில் பிரபலமான நடிகரான சத்ருகன் சின்காவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவரது மகள் சோனாக்ஷியை குறி வைக்கிறது. நடுவில் ஏன் தீபிகா வந்தார் என்றால், பா.ஜ.க கொண்டு வந்த சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை டெல்லி போலீஸ் கடுமையாக தாக்கியது. அந்த மாணவர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஊர்வலகம் சென்றவர் தீபிகா.

 

Ad

 

பொதுவாக மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவு ஜீவிகள் போன்றோர் பா.ஜ.க.வுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களில் கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். வரவர ராவ் போன்றவர்களை அர்பன் நக்சல்கள் எனச் சிறையில் அடைத்தார்கள். தீபிகா படுகோனே போன்றவர்கள் மீது போதை வழக்கு எனச் சிறையில் தள்ள முயற்சிக்கிறார்கள் என பா.ஜ.க. அரசின் மீது விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.