Skip to main content

'மிசா சர்ச்சை' ஆதாரத்தை ஜெயகுமாருக்கு ரோட்டோரமா வந்து கொடுக்க கூட தயார் - அப்துல்லா தடாலடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு நிர்வாகி அப்துல்லாவிடம் நாம் பல்வேறு கேள்வியை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

திமுக தலைவர் ஸ்டாலின் அவசரகால கட்டத்தில் சிறைக்கு சென்று உண்மை தான், ஆனால் மிசா  சட்டத்தின் கீழ் அவர் சிறைக்கு செல்லவில்லை என்றும், ஷா கமிஷன் அறிக்கையில் அவர் பெயர் இல்லை என்று சிலர் கூறுவதை பற்றி உங்களின் கருத்து என்ன?


மிகத் தகவறான ஒரு கருத்தை வேண்டும் என்றே பரப்ப முயற்சிக்கிறார்கள். கைதாகவில்லை என்று கூறும் அவர்கள்தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். உங்கள் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறினால் அவர்கள் தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். குற்றச்சாட்டு கூறுபவர் ஆதாரத்தை காட்டாமல்  யார் மீது குற்றம்சாட்டுகிறமோ அவர்களே ஆதாரத்தை காட்டி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ளுங்கள் என்பது எந்தவகையில் நியாயம். அவர் மிசாவில் கைதாகவில்லை என்றால் எந்த வழக்கிற்கு சிறை சென்றார் என்று கூற வேண்டியதானே? எங்களிடம் அவர் மிசாவில் சிறை சென்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது. அது அனைத்தையும் தற்போது காட்டுகிறேன். முதலில் ஷா கமிஷன் அறிக்கையை பற்றி கூறுகிறா்கள்.  அது எப்போது அமைக்கப்பட்டது அதன் வரலாறு என்ன என்று அதை பற்றி பேசுபவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
 

 

gf



அந்த ஆணையம் ஜனதா அரசு அமைந்த பிறகு நெருக்கடி கால கொடுமைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆணையம். அந்த ஆணையம் விசாரணை செய்துவந்த நிலையில், அதற்குள் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வருகிறார். அவர் வந்த பிறகு, அந்த ஆணைய அறிக்கைகளை அழித்து முடிந்ததுதான் அவர்களின் முழு வேலையாக இருந்தது.  இப்போது விக்கிபீடியாவில் தேடி பார்த்தால் கூட அது பற்றிய எந்த தகவலும் இருக்காது. இப்போது காட்டப்படும் அறிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செழியன் அவர்கள் வெளியிட்ட ஆவணத்தை காட்டுகிறார்கள். 80களில் முடிந்த போன ஒரு சம்பவத்தை அவர் 2010 ஆம் ஆண்டில் என் வீட்டில் ஷா கமிஷன் அறிக்கையின் சில பகுதிகள் இருப்பதாக கூறி அதனை அத்வானியை கொண்டு புத்தகமாக வெளியிட்டார். அதை பதிப்பிக்க பல்வேறு நிறுவனங்களும் முதலில் மறுத்தன அதன் உண்மையை தன்மையை காரணம் காட்டி. அதில் பாஜக, ஜனதா உறுப்பினர்களின் தகவல்கள் மட்டுமே இருக்கிறது. 

மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக வேறு எந்த மாதிரியான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது? 

இதுதொடர்பாக அப்போது நீதிபதி இஸ்மாயில் தலைமையில் தமிழக  அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைதான் இது. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இண்டாவது பெயராக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் இருக்கிறதே? இதை இல்லை என்று சொல்வார்களா? வேண்டும் என்றே அவருக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதெல்லாம் காலத்தின் முன் காணாமல் போகிவிடும். மிசா என்று யாருக்காது ஞாபகம் வருகிறது என்றால் அப்போது அனிச்சை செயலாக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் நினைவிற்கு வரும். எனவே அவர்களின் எந்த விளையாட்டும் அவரிடம் எடுபடபோவதில்லை. இது அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் அவர்களுக்கு தெரியாதா? அமைச்சர் ஜெயகுமாருக்கு தெரியாதா? அரசு அவண காப்பகத்திற்கு சென்று பணம் கட்டினால் யாரும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இல்லை ஜெயகுமாரின் அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொடுக்க சொன்னாலும் நான் தர தயார். அல்லது ரோட்டோரமா வர சொன்னாலும் வந்து தர தயாராக இருக்கிறேன்.

 

Vijayan


 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.