Skip to main content

“நேருவை ஒதுக்கிவிட்டு சாவர்க்கருக்கு மரியாதையா?” - இள. புகழேந்தி காட்டம் 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

"Abandon the Nehru film.. Respect for Savarkar?" - young. Pugahendi Ghattam

 

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார். 

 

புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்களின் எண்ணை உயர உள்ளதால் புதிய நாடாளுமன்றம் அதற்கேற்ப இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்கிறாரே?

 

“இந்திய சுதந்திரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு துணையாகவும் கடைசி கால  கட்டத்தை கழித்த சாவர்க்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகள் சிறையிலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்த நேரு போன்றோர் எத்தனையோ தலைவர்களை ஒதுக்கி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக தேடப்பட்ட சாவர்க்கர் படத்தை வணங்கி இந்த பாராளுமன்றத்தை திறந்து வைத்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலையாகவும் இந்திய இறையாண்மையை தீங்கு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

 

சீனாவை விட 135 கோடிக்கு மேல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது இந்தியா வளர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள  தொகுதிகளை பிரிப்பதற்காக தான் அதிக இருக்கைகள் கொண்ட புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாஜக அதிக வாக்கு வாங்கும் இடங்களான மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன்னுடைய வசதிக்கேற்ப தொகுதிகளை அதிகப்படுத்தி தென்மாநிலங்களில் உள்ள தொகுதியை குறைப்பதற்கான சதி திட்டமா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.

 

ஆங்கிலேயர் கட்டிய பழைய பாராளுமன்றம் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது. ஆனால் மோடி கட்டிய இந்த புதிய பாராளுமன்றம் எத்தனை ஆண்டுகள் இடியாமல் இருக்கும் என்பதை உத்தரவாத்தை  தரமுடியுமா? எதற்கு அவசர அவசரமாக புதிய பாராளுமன்றத்தை கட்டினார்கள்?. என்ற கேள்விகளும் எழுகிறது.

 

ஆரம்பத்தில் இந்த புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக முதல் முதலில் முன்மொழிந்தது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அவருடைய மகளான அப்போது பேரவை தலைவராக இருந்த மீரா குமார். அதன் பிறகே இந்த அரசு பாராளுமன்றத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டது.

 

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக அன்றைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவுக்கு இன்றைய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவும் அழைக்கப்படவில்லை. இவை மட்டுமில்லாமல், பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி, முதல் முதலில் பாராளுமன்றத்தை கட்டுவதற்கு முன்மொழிந்த மீரா குமார் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இந்த விழா தீண்டாமையை கடைப்பிடித்தே நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

 

 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.