"தன்னுடைய மகளுக்கு மட்டும் திரு மணத்தை நடத்திவிட்டு, ஊராரின் மகள்களை மொட்டையடித்து சன்னியாசி ஆக்குவது எப்படி?'' என நீதியரசர்கள் கிடுக்கிப்பிடி போட... மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது ஜக்கியின் ஈஷா மையம்!

"மகள்களின் உயிருக்கு ஆபத்து! ஜக்கி வாசுதேவால் சிறை வைக்கப்பட்டிருக்கும் எனது மகள்களை மீட்க வேண்டும்!' என பேராசிரியர் காமராஜ் ஆட்கொணர்வு மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில்... நீதிமன்றம் இவ்வாறு கேள்வி யெழுப்பியுள்ளது.

isha

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் காமராஜ்-சத்திய ஜோதி தம்பதியினர். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேரா சிரியரான காமராஜ் தம்பதியினருக்கு கீதா, லதா என இரு புதல்விகள். இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு ஈஷா மையத்திற்கு யோகா பயில்வதற் காக சென்றிருக்கின்றார்கள். அதன்பின் வீடு திரும்பவில்லை. ஜக்கியிடம் சிறைப்பட்டுள்ள தனது மகள்களை மீட்க பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்துள்ளார் பேரா சிரியர் காமராஜ். இது குறித்து நக்கீரனில் பதிவு செய் திருந்தோம்.

Advertisment

இந்நிலையில், பேராசிரியர் தம்பதியின ருக்கு கடந்த 15-06-2024 மற்றும் 16-06-2024 அன்று இரு நாட்களில் 6 தடவை களாக மொபைல் போனில் பேசி, "ஜக்கி மீதோ, ஈஷா மையம் மீதோ குற்றம் சாட்டி, ஏதேனும் நீங்கள் தொ டர்ந்து பேசி னால் பட்டினி யாக இருந்து உயிரை விட்டுவிடுவேன்'' என மிரட்டியிருக் கின்றனர் ஜக்கியின் ஈஷாவில் சிறைப்பட்ட கீதா, லதா ஆகியோர்.

isha

இது பேராசிரியர் தம்பதியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில்... மகள்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவினை தாக்கல் செய்தனர். பெற்ற மகள்களின் பெயர் கீதா, லதா. ஆனால் ஈஷா மையத்தில் ஜக்கியால் அவர்களுக்கு வைக்கப் பட்ட பெயர் முறையே மாமதி மற்றும் மாமாயூ என்பது தனிக்கதை. இந்த நிலையில் ஈஷா மையத் திலிருந்து தற்கொலை மிரட்டல் விடுத்த ஆடி யோ "நக்கீரனுக்கு' கிடைத்தது. அதிலிருந்து...

Advertisment

அப்பா: ஹலோ

மகள்: ஹலோ அப்பா

அப்பா: சொல்லுமா

மகள்: பேசலாமா அஞ்சு நிமிஷம்

அப்பா: பேசலாம்மா

மகள்: சரி. மாயு என்கிட்ட சொன்னாங்க, அவங்க ரொம்ப மன உளைச்சலில் இருக்காங்களாம். கோபமா இருக்காங்களாம். நீங்க இந்த மாதிரி பிரஸ்மீட் கொடுக்கிறது, பிரச்சினை பண்றதெல்லாம் இப்ப மட்டும் இல்ல, எப்ப எடுத்தாலும் நீங்க ரொம்ப அசிங்கமா அவர்களைப் பற்றி பேசக்கூடாதது எல்லாம் பேசிட்டீங்க. இன்னொரு பிரஸ்மீட் கொடுத்து, "இனிமேல் என் குழந்தைங்ககிட்ட பிரச்சினை பண்ணமாட்டேன். என் குழந்தை களை தப்பா பேசமாட்டேன்னு சொல்லுங்க. அவங்களை நீங்கள் பேசிட்டதால மாயூ ரொம்ப கோவத்துல இருக்காங்க. மன உளைச்சல்ல இருக்காங்க. நீங்க மன்னிப்பு கேட்கற வரைக்கும் தண்ணி மட்டும்தான் குடிப் பேன், சாப்பிட மாட்டேன்னு சொல்லியிருக்காங்க.

isha

அப்பா: ம்

மகள்: நீங்க பொதுவா மன்னிப்பு கேட்கிற வரைக்கும் சோறு சாப்பிடமாட்டாங்க. தண்ணி மட்டும்தான் குடிப்பாங்க.

அப்பா: வீட்டுக்கு வந்துருங்க. மன்னிப்பு கேட்கலாம். வீட்டுக்கு வந்தால்தான் மன்னிப்பு கேட்பேன், காலில் விழலாம்... எல்லாம் பண்ண லாம். வீட்டுக்கு வந்தா எத வேணா கேட்கிறோம்.

மகள்: நீங்க கேட்கணும்கறது எங்க விருப் பம் இல்ல. நாங்க எப்படி இருக்கப்போகி றோம்னு சொல்லிட்டோம், அவ்ளோதான்.

அப்பா: இப்படித்தானா Threaten பண்றது? இந்த மாதிரி பட்ழ்ங்ஹற்ங்ய் பண்றதுக் காகவா சாமியார் வளர்த்து வச்சிருக்கார்?

மகள்: Threaten பண்ணலப்பா. ஓ.கே. நாங்க என்ன பண்ணுவோம்னு சொல்லியாச்சு.

இந்த ஆடியோவுக்கு அடுத்த ஆடியோ வில்...

மகள்: நா மாயுகிட்ட பேசினேன். இன்னிக்கே வந்து நீங்க மன்னிப்பு குடுக்கிறதா யிருந்தா, அவங்க நாளையிலிருந்து நிம்மதியா சாப்பிடுவாங்க.

அப்பா: வீட்ல வந்து சொன்னாத்தான் அதப்பத்தி நானும் அம்மாவும் கொஞ்சம் முடிவெடுக்க முடியும்னு நா சொல்றேன்.

isha

மகள்: அத அவங்க பண்ணவே மாட் டாங்க. நீங்க சாப்பிடுங்க, சாப்பிடாம போங்க... என்னவோ பண்ணிக்கோங்க. அவங்க வந்து பாக் குறதுக்குகூட விருப்பமில்லைன்னு சொல்லிட் டாங்க. நீங்க சண்டே வருவீங்களோ, மண்டே வருவீங்களோ, ஃப்ரைடே வருவீங்களோ, எப்ப வேணா வந்துக்கலாம். ஒண்ணும் பிரச்சினை யில்ல. But, அவங்க சாப்பிடறது, சாப்பிடாதது இதுலதான் இருக்கும். உங்ககிட்ட just inform பண்ணலாம்னு சொன்னேன். இதுக்கு மேல உங்க விருப்பம்.

அப்பா: நா என்ன பண்ணணும்?

மகள்: உங்க குழந்தைகளுக்குன்னு நீங்க என்ன பண்ணுனா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.

அப்பா: எங்க குழந்தைங்க எங்க வீட்டுக்கு வந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறோம். அம்மா உடம்பு சரியில்லாம இருக்குறத பார்க்க வரணும்.

மகள்: அது முடியாது. நீங்க எப்படி விருப்பமோ அப்படி பண்ணிக்கலாம். நீங்க மன்னிப்பு கேட்கிற வரைக்கும் அவங்க அப்படித்தான் இருப்பாங்க.

அப்பா: அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததுனால கொஞ்சம் வந்து பார்த்துட்டு போணும்னு சொல்றாங்க.

மகள்: வீடே எங்களுக்கு கிடையாது... ஓ.கே.வா? அம்மாவும், அப்பாவும் கிடையாது. உங்களுக்கு விருப்பம் இருந்தா இங்க வந்து பார்த்துட்டுப் போங்க.

அப்பா: எங்களுக்கு ஈஷாவே பிடிக்கலைன்னு சொல்றதுனாலதான் அங்க வர மாட்டோம்னு சொல்றோம்.

மகள்: அப்ப ஏன் 2 வாரத்துக்கு ஒரு தடவை வரணும்னு லெட்டர் எழுதுறீங்க?

அப்பா: பெத்த பிள்ளைங்களுக்கு பாசம் இல்லாம போயிருமா? அதுக்காக!

isha

மகள்: இந்த டயலாக்கெல்லாம் வேணாம். உங்களுக்கு வர பிடிக்கலைன்னா வரவேண்டாம். எதுக்கு வந்து வந்து பிரச்சினை பண்ணிட்டு குழந்தைகளை பார்க்கணும்னு சொல்றீங்க? அவங்க மனநிலைய நான் சொல்லியாச்சு.

அப்பா: அவா சாப்பிடாம தண்ணி மட்டும் குடிச்சான்னா, நாங்களும் அந்த முடிவ எடுக்கணும் போல இருக்கு. அவ தண்ணி மட்டும்தான் குடிச்சான்னா, நாங்களும் இன்னைலருந்து ஆரம்பிக்க போறோம். தங்கச்சிகிட்ட நீதான் பேசி, இந்த மாதிரி அப்பாவும், அம்மாவும் நம்மள மாதிரி...

மகள்: எனக்கு convinced-டா இல்ல. அம்மா dieting இருந்தா நல்லாத்தான் இருக்கும். அம்மா உடம்புக்கு நல்லது. ரொம்ப உடம்பு பெருத்திருக்கு. நங்ங், அவங்க சாப்பிட மாட்டேங்குறாங்க அவ்வளவுதான்... See. நான் போனை வைக்கிறேன்.

அப்பா: நம்ம 2 பிள்ளைகளும் வரணும்னு அவங்க ச்ங்ங்ப் பண்றாங்க. அவங்க ஒண்ணும் கொழுத்துப் போகல.

மகள்: புரியுது, feel பண்ணட்டும். But, நாங்க என்ன feel பண்ணோம்னு நீங்க கொஞ்சம் யோசிக்கணும். நீங்க என்னவேணா பண்ணிக்கோங்க. அவங்க அதுக்குன்னு வீட்டுக்கு வர மாட்டாங்க. நானும் வீட் டுக்கு வர மாட்டேன்... ஞ.ஃ.

isha

அப்பா: அம்மா கொஞ்சம் உடம்பு சவுரியம் இல்லாம இருக்காங்க. சர்க்கரை நோய் கொஞ்சம் முத்திப்போகுது... நடக்க முடியல. நாங்க இதுவரைக்கும் 10 வருஷமா வந்துட்டு இருக்கோம். நீங்க ஒருநாள் வந்துட்டு போங்க. அம்மாவுக்கும் ஒரு நஹற்ண்ள்ச்ஹ்-யா இருக்கும். தாத்தா பாட்டி இறந்ததற்குத்தான் வர முடியல. அதைப்பத்தி ஒன்னும் இல்ல, அவங்க போய் சேர்ந்துட்டாங்க. இப்போ அம்மா, அப்பா உயிரோடு இருக்காங்க. வந்து பார்த்துட்டுப் போங்க. அம்மா ரொம்ப மனசு நொந்து போயிட்டாங்க. ஒழுங்கா சாப்பிடுறது இல்ல. இப்ப நீங்க சாப்பிடாம இருக்கறதால இன்னும் அவங்களுக்கு மனசு ஒரு மாதிரியாகிப் போச்சு.

மகள்: எனக்கு அந்த மாதிரி ஃபீலிங்கே வர மாட்டேங்குது...

-இப்படியாகச் செல்கிறது அப்பா வுக்கும் மகளுக்குமான உரையாடல்.

தனது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லையென்றாலும்கூட பார்க்கப் பிடிக்கவில்லை எனச் சொல்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த ஆடியோ மற்றும் கடந்தமுறை கோவை மாவட்ட நீதிபதி கொடுத்த ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட முக்கிய சான்றாவணங்களுடன் மகள்களைக் காண்பதற் கான ஆட்கொணர்வு மனு தாக்கலானது.

திங்கட்கிழமையன்று நீதியரசர்கள் எம்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு வந்த வழக்கில், மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜரானார். ஆட்கொணர்வு மனு என்பதால் குறிப்பிடப்பட்ட இருவரும் ஆஜராக வேண்டும். ஆர்டர் கொடுக்கலாமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், "இருவரும் வந்துள்ளனர். பிற்பகலில் ஆஜர்படுத்து கின்றோம்' என தவணை வாங்கியது ஈஷா தரப்பு.

isha

சரியாக பிற்பகல் 2:15 மணியளவில் பேராசிரியர் காமராஜின் மகள் களான கீதா, லதா இருவரும் ஆஜர்படுத்தப்பட, "எங்களுக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. விருப்பப்பட்டுத்தான் அங்கு சென்றோம், இருக் கிறோம். வேண்டு மென்றே செய்தி ஊடகங்களில் பேட்டி கொடுத்து பெயரைக் கெடுக்கின்றார். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஆகின் றது'' என கீதா குறிப்பிட, எதுவுமே பேசாமல் அமைதிகாத்தார் மற்றொரு மகளான லதா.

தாயான சத்யஜோதியோ, "என் மகள் களைப் போல் அங்கு ஏறக்குறைய 9 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னைய மாதிரி பிள்ளை பெற்று வளர்த்தால்தானே பெற்றவர் களின் அருமை தெரியும்'' எனக் கண்ணீர் வடித்தார்.

"கடந்த ஆறாம் தேதி ஈஷா அறக்கட்ட ளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்'' என பேராசிரியர் காமராஜ் எடுத்து வைக்க...

"இது ஆட்கொணர்வு மனு. அதை விடுத்து வேறு எது வும் பேசக்கூடாது'' என ஈஷா தரப்பு குதித்தது.

நீதியரசர்களோ, "எங்களது மனதில் ஒன்று உள்ளது. ஈஷாவில் என்னதான் நடக்கின்றது எனத் தெரியவேண்டும். அதற்கு பிறகுதான் எதுவுமே'' என்றனர்.

இதனிடையில், பேராசிரியர் காமராஜின் மகள்கள் பேசும்போது, அப்பாவை சுட்டிக்காட்டி, "That Fellow, That Man" என ஒருமையில் கூறியதை கவனித்த நீதியரசர் சுப்பிரமணியம், "என்ன சன்னியாசிம்மா நீங்க! பெற்றவர் களை இப்படித்தான் அழைக்கக் கற்றுக்கொண்டீர்களா?'' எனச் சுட்டிக்காட்டினார்.

மகள்கள் பேசும்போது, இன்னொரு பெண் ஒருவரை பார்த்துக்கொண்டே பேசி யதை கவனித்த நீதியரசர்,

"யார் நீங்கள்? உங்களைப் பார்த்துக்கொண்டே ஏன் பேசுகிறார்கள்?'' என கேள்வி தொடுத்தார்.

aa

"நான் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர். ஈஷா மையத்தின் தன்னார்வலர்'' என்றார் அவர்.

உடனே, "நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள்?'' எனச் சளைக்காமல் நீதியரசர் கேள்வியெழுப்ப, அந்த பெண் வழக்கறிஞரும், "பெற்றோருடன்'' என்றார்.

"அது எப்படிம்மா. நீங்க மட்டும் பெற்றோருடன் இருக்கிறீர்கள்?'' எனக் கேள்வியெழுப்ப, அந்த ஈஷா வழக்கறிஞரிடம் பதிலில்லை!

இது இப்படியிருக்க... நீதி விசாரணையின்போது டேபிளில் இருந்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண் டிருந்த நீதியரசர் சிவஞானமோ, "அது எப்படி அவரோட மகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத் திருக்கின்றார்? இந்த பெண்களுக்கு மொட்டையடித்து வைத்திருக்கின்றார்?'' என கேள்வியெழுப்பினார்.

இறுதியில், "நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை, ஆதரவாகவும் இல்லை. ஈஷா மையத்தின் மீது பலத்த சந்தேகங்கள் இருக்கின்றது. ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை வேண்டும். அறிக்கையினை 4ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்'' எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர் நீதியரசர்கள்.

ss

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ், த.பெ.தி.க. கு.இராமகிருட்டி ணன், பேராசியர் காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, "கடந்த ஆறாம் தேதி ஈஷா அறக் கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல்விசாரணையைத் தொடராதது ஏன்? காவல்துறையும், மாவட்ட நிர்வாக மும் விசாரணையை விரிவுபடுத்தாததற்கு காரணம் என்ன?'' என்ற கேள்விகளை முன் வைத்தனர். மேலும், "குற்றச்சாட் டப்பட்ட மருத்துவர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கும் சென்றுள்ளார். இது காவல்துறைக்கு நன்றாக தெரியும். அங்கெல்லாம் வேறெந்த மாணவி களாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை ஏன் இன்னும் விசாரிக்க வில்லை. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, மாணவிகளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நிலையில், இவர்கள் ஏன் பெண் மருத்துவரை நியமிக்காமல் இருந்தார்கள்?'' எனக் கேள்வி யெழுப்பினர்.

இந்நிலையில், "ஈஷா யோகா மையம் செய்யும் பல்வேறு நல்ல பணிகளுக்கும், தொண்டுகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல காலங்களாக சிலர் பொய்யான அவதூறுகளைப் பரப்பிவருகிறார்கள். அவர்களிடம் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ, காவல் துறையையோ அணுகி தீர்வு கண்டி ருக்கலாம்'' என்றார் ஈஷா தரப்பைச் சேர்ந்த தினேஷ்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈஷாவில் தொடர்ந்து 3 நாட்களாக காவல் துறையும் சமூகநலத் துறையும் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.

படங்கள்: விவேக்